Wednesday 31 December 2014

2014 யை திரும்பி பார்க்கிறேன்

           
               2014 இந்த வருடம் ஆரம்பம் என்னவோ எனக்கு அமர்க்களமாகதான் இருந்தது. ஆனால் போகபோக ஏனோ நிறைய மனக்கஷ்டத்தை தந்தது. நாம் கடந்து வந்த பாதைகள் அனைத்தும் பசுமையாக இருப்பதில்லை. சில இடங்கள் குளிர்ச்சியாகவும், வறட்சியாகவும், பாலைவனமாகதான் இருக்கிறது.

Tuesday 30 December 2014

சஷ்டியின் பெருமை

            "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்வரும்" என்ற கிராமப்பகுதியில் சொல்வார்கள். ஆனால் உண்மையான பழமொழி என்ன தெரியுமா? "சஷ்டியிருந்தால் அகப்பையில் வளரும்" என்பதுதான் இதன் பொருள்.

அறியப்படாத ரகசியங்கள்

ஜீவன் எப்படி உடலை விடுகிறது?

             பஞ்ச ப்ராணனில் இருதயத்தில் ப்ராணன், மல வழியில் அபாநன்,தொப்புளில் ஸமாநன், கழுத்தில் உதானன், சரீரமெங்கும் வயாநன் தங்கியிருக்கிறான். ப்ராணன் போவதற்கு முன் வ்யாநன் ரத்தத்திலிருந்து திரும்பி ப்ராணனிடம் வருகிறான். ரத்தம் சுண்டுவதால் அப்போது தான் மரண வலி ஏற்படும். அபாநன் ஸமானன் இவர்களும் இங்கு வந்து சேரும்போது ஜீரணம், மலஜலம் நின்று விடும். ஒரு வீட்டை ஒழித்துக் கொண்டு வேறு வீடு செல்வோர் எப்படி எல்லா சாமான்களையும் நடுவீட்டில் கொண்டு வந்து வைப்பார்களோ அப்படி எல்லாம் இருதயத்தில் வந்து தங்கும் பின்னர் வெளியேறும.

தஞ்சாவூர் சமையல் / நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:-

நண்டு - 1/2 கிலோ
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
முழு பூண்டு - 1
தேங்காய் - 1 மூடி
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - சிறிதளவு
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
தனியாத்தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையானளவு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது

Sunday 28 December 2014

மகனின் காதலை ஆதரிக்கும் அம்மாக்கள்

              சினிமா தனமான காதல், கொலை, திருட்டு, வாழ்க்கையென பலவகைகளில் நாம் சினிமா உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தவகையில் அம்மாக்களும் சினிமா தனமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இது அவர்களாக தன்னை மாற்றிக்கொண்டார்களா? இல்லை காலத்தின் சூழ்நிலை அவர்களை மாற வைத்ததா? எனக்கு ஒன்று புரியாவில்லை சினிமாவை பார்த்து கெட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டும் இவர்கள் நல்ல விஷயங்களில் ஏன் ஆர்வம் காட்ட மறுக்கிறார்களோ தெரியவில்லை.

           இப்போதெல்லாம் சினிமாதனமாக தான் எல்லாம் இயங்குகிறது அதில் அம்மாக்களும் இடம் பிடித்து வருகிறார்கள். அம்மா, மகனுக்கு உள்ள நெருக்கம் உறவையும் தாண்டி தோழி என்று எல்லா விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தி ஒரு மகன் தன் தாயிடம் காதலையும், காதலியையும் அறிமுகப்படுத்துவதும் அதற்கு துணையாக இருப்பதும், ஆதரிப்பதும் அம்மாக்களுக்கு இப்போது பேஷனாகிவிட்டது.

தஞ்சாவூர் சமையல் /மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:-

மீன் - 1/2 கிலோ
மிளகாய்தூள் - தேவையான அளவு
தனியா தூள் - தேவையான அளவு
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - ஸ்பூன்
வெந்தையம் - சிறிதளவு
தேங்காய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - சிறிது

Saturday 27 December 2014

உடல் எடையை குறைக்க

உடல் எடை குறைய வேண்டுமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்  


  • தினமும் எழுந்ததும் உடல் பயற்சி செய்ய வேண்டும் காலை/மாலை இரு வேளையும்.காயகல்ப பயிற்சி நல்லது. 

Friday 26 December 2014

ஏழை

ஒரு ஏழை தன்னோட
கனவில் மட்டும்
பணக்காரனாக வாழ்கிறான்...!

ஏழ்மை

ஐந்து வருடம் எப்போது
கழியுமென்று கல்யாண
கனவுகளை கண்ணில் சுமந்தபடி
பஞ்சாலையில் பருவப்பெண்கள்..!



Thursday 25 December 2014

திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில்

             இன்று உங்களை நான் உறையூரில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்ல போகிறேன்.

             உறையூர் சோழர்களுக்கு தலைநகரமாக விளங்கியது. இது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது. உறையூருக்கு பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடத்திருக்கொரு பஸ் இருக்கிறது. நாச்சியார் கோவில் பஸ் நிறுத்ததில் இறங்கி 500 மீ நடக்க வேண்டும் அல்லது ஆட்டோவிலும் செல்லலாம்.


             ஊர்களை அமைக்கும் போது ஊர்க்காவல் தெய்வங்களை ஊர்களின் எல்லையில் எழுந்தருளச் செய்வது, வீரமும் வெற்றியளிக்கும் தெய்வங்களையும் வடக்கு நோக்கி அமைப்பார்கள் அதன்படி ஊர் எல்லையிலும் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது உறையூர் அருள் மிகு வெக்காளியம்மன் திருக்கோவில்.

பொதுச்சேவையில் சினிமா பிரபலங்கள்

             பொதுச் சேவை என்பது மகத்தான ஒரு சேவை. கருணை என்றாலே நம் நினைவுக்கு வருவது அன்னை தெரசா. இல்லாதவர்களுக்கு உதவுவதும், கொடுப்பதும் எல்லோருக்கும் அந்த மனம் இருப்பதில்லை அந்த மனம் ஒரு சிலருக்கு மட்டும்தான் இருக்கிறது. இல்லாதவர்களை கண்டு பரிதாபம் கொள்வதோடு பாதிபேர் சென்று விடுகின்றனர் ஆனால் அவர்களுக்கு கொடுத்து உதவுவது ஒரு சிலர்தான்.

            அந்த வரிசையில் இப்போது சினிமா பிரபலங்கள் சேவை செய்து வருகிறார்கள் இது வரவேற்க தக்க விஷயம். சில நடிகர்கள் கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தை அடைகாத்துக் கொண்டு அவர்களுக்காக உயிரைக்கொடுக்கும் ரசிகர்களுக்கும் ஒன்றும் செய்யாமல் ஏழை எளியவர்களுக்கும் ஒன்றும் செய்யாமல் நான் எளிமையானவன் எளிமையானவன் என்று சொல்லிக்கொள்ளாமல். நடிகர்களை விட குறைவாக சம்பளம் வாங்கி குறைந்த படங்களில் மட்டும் நடித்து அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவும் நடிகைகளுக்கு பெரிய மனதுதான். அந்த நடிகைகளை நாம் பாராட்டதான் வேண்டும்.

Tuesday 23 December 2014

சின்ன சின்ன மருத்துவம்


  • வாந்தி நிற்க துளசி சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். 
  • குமட்டல் நீங்க வெற்றிலைக்காம்பை வாயில் அதக்கினால் நீங்கும்.
  • குடல் வாயு தீர கொய்யா கொழுந்தை மென்று தின்ன தீரும்.
  • இரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரையை வாரம் 2 முறை சாப்பிட குணமாகும்.

Monday 22 December 2014

சிந்தனைத் துளிகள்


அன்பு என்பது மின்னல் மாதிரி
அது எங்கே விழுமென்று
யாருக்கும் தெரியாது.

அன்பு தெரியாதவர்களுக்கு
புரியவைக்கலாம் ஆனால்
தெரியாததுபோல் நடிப்பவர்களுக்கு
புரியவைப்பது கஷ்டம்.

Sunday 21 December 2014

தஞ்சாவூர் சமையல் / அப்பம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

அரிசி : 2கப்
தேங்காய் ஒரு மூடி
வெல்லம் - 2 
ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப

சைனிஸ் சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு : 3 கப்
முட்டை கோஸ்: 100 கிராம்
கேரட் : 1
பீன்ஸ்: 100 கிராம்
தக்காளி: 1
வெங்காயம்: 50 கிராம்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் : 1 
சர்க்கரை : 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு : சிறிதளவு

Friday 19 December 2014

சூடான செய்தி

           நான் சொல்லப் போற செய்தியைக் கேட்டு கதறி அழவோ, முட்டி மோதி கத்தி கூச்சல் போடவோ கூடாது. எல்லோரும் மனச திடமா வச்சுகோங்க.

           அது வேற ஒன்னுமில்ல நம்ம நாசா விஞ்ஞானிகள் நிலவுக்கு தண்ணீர் இருக்கான்னு பார்க்க போனங்கல்ல, அப்ப அங்க ஒரு மனித உடல் கிடந்திருக்கு. விஞ்ஞானிகளுக்கு ஒரே குழப்பமா போச்சு.

Thursday 18 December 2014

தஞ்சாவூர் சமையல் / சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப மல்லித்தூள் - தேவைக்கேற்ப
தேங்காய் - 1 கப்
பூண்டு - 1 பெரியது
இஞ்சி - 2 துண்டு
மிளகு - சிறதளவு
சோம்பு - 1 ஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை, கசகச - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

Wednesday 17 December 2014

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயம்

             வாசகர்களே நான் இப்போது உங்களை திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்ல போகிறேன். அங்கே செல்ல உங்களுக்கு விருப்பம்தானே..! அப்ப என் கூட வாருங்கள்..!

             நான் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவானைக்காவல் நோக்கி பயணித்தேன். பஸ் நிறுத்தம் அருகிலே திருவானைக்காவல் ஆலயம் மிகப்பெரிய கோபுரத்துடன் வரவேற்றது. அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இது பாடல் பெற்ற தலமாக இருக்கிறது.

           இந்த ஆலயம் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவராப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் அமைய பெற்ற தலமாக இருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்து போகையில் இருபுறம் பாக்கு மரங்கள் அழகாக இருக்கிறது அதை கடந்து போகையில் நாலுகால் மண்டபம் அதிலுள்ள நான்கு தூண்களில் அழகான சிற்பங்கள் நம்மை கவர்கிறது அதை ரசிப்படி உள்ளே நுழைந்தேன் பிரம்மித்து நின்றேன். கற்தூண்களை மண்டபங்களை தாங்கி நம்மை பிரம்மிக்க செய்தது.

Monday 15 December 2014

ஆலயத்தில் செய்யக்கூடியது/ செய்யக்கூடாதது


  • கர்ப்ப கிரஹகத்தில் கடவுளுக்கு அலங்காரம் நடக்குகையில் திரையிட்டுயிருப்பார்கள் அச்சமயம் வழிபடுதல் கூடாது. 
  •  சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது. 
  •  ஆலயத்தில் நண்பர்களையோ, பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்க கூடாது. இறைவனே மிகப்பெரியவன் ஆலயத்தில் அனைவரும் சமம்.
  •  பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதல் கூடாது. 

Sunday 14 December 2014

கண்ணீர்

உன் கண்களென்ன
வெந்நீர் ஊற்றா?
சுடுகிறதே கண்ணீர்..!

நூதன பிச்சை

         ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்களும் சரி பாவ புண்ணியம் என்று இரக்கப்பட்டு உதவி செய்பவர்களும் சரி இதனால் நிறைய சோம்பேறிகளை உருவாக்குகிறோமோ என்று கூட தோன்றுகிறது.

         ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்று நினைக்கின்றீர்களா? 30 வயது மதிக்கதக்க ஒருத்தர் காவி உடை, நெற்றியில் பட்டை சந்தனம், கழுத்தில் மாலை, கையில் குடுகுடுப்பை சகிதம் வந்தார். (எங்கள் ஊரில் இதுபோன்று அதிகம் பேர் இருக்கிறார்கள்) நான் அவரிடம் "நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் போங்க" என்று சொன்னேன்.

          அவர் உடனே சொன்னார் "என்னம்மா வேண்டான்னு சொல்றீங்க நல்ல வாக்கு சொல்றேன் ஏன் தடுக்குறீங்க என்று சொல்லிவிட்டு என்னைப்பற்றி ஆஹா.. ஓஹோ.. என்று புகழ்ந்தார் இது எல்லோரும் வழக்கமாக சொல்வதுதான். இப்படி சொல்லிவிட்டு சாப்பாடு இருக்குமான்னு கேட்டார்.

Friday 12 December 2014

2060 ல் நம் இந்தியா எப்படி இருக்கும்? என் பாரதம் எப்போது முன்னேறும்?

            இந்தியா ஒரு காலத்தில் அடிமை இந்தியாவாக இருந்தது. இன்று அந்த அடிமைச்சங்கலியை உடைத்தெரிந்து முன்னேற்ற பாதைகளில் சென்றுக்கொண்டு இருக்கிறது. அதற்கு காரணம் நாம் அவர்களிடம் கற்றுக்கொண்ட பாடங்கள்தான்.


          ஆம், நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து மின்சாரம், இருப்புபாதைகள் போக்குவரத்து வசதிகள் என பல நவீன வசதிகளை நாம் கற்றுக்கொண்டு இன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

Thursday 11 December 2014

ரசிப்பதற்கு மட்டும்

அழகுப் பெண்ணின் 
முகத்தில் இருக்கும்
பருபோல் பூக்களின்
மேலிருக்கும் மழைத்துளி..!

இரவெல்லாம் காத்திருந்து
கதிரவனைக் கண்டதும்
உருகும் ஒற்றைப் பனித்துளி..!

Monday 8 December 2014

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்/ சிறுகதை

                                               கதை தொடர்ச்சி

          இரவு ராசாத்தி சமையல் செய்துக்கொண்டிருந்தாள். அனிதா பக்கத்து ரூமில் நாளைக்கான பாடங்களை படித்துக்கொண்டிருந்தாள். கண்ணன் மெல்ல வந்தான் பேக்கை தன் ரூமில் வைத்தவன் சமையலறை பக்கம் சென்றான். "என்னம்மா சமையலா" என்றான். உடனே கோபத்தோடு தலையை வெடுக்கென்று திருப்பி "எங்கேடா போய் தொலைஞ்சே ரெண்டு நாளா... எங்க போனே.. நீ.. புள்ளையா.. நீ.. என்னைக்காவது உண்மையை சொல்றீயா ப்ராடு.. ப்ராடு.. மூஞ்சிய பாரு.. " ஏக வசனத்தில் திட்டி தீர்த்தாள்.

               "என்னம்மா.. இப்படி கோபமா பேசுறீங்க., நான் என்னம்மா தப்பு செஞ்சேன்.. நான் கல்யாணத்துக்கு தாம்மா போனேன்..." என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.

Sunday 7 December 2014

தலைமுடி கறுப்பாக வளர

           மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி சாறு ஒரு லிட்டர், தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், கார்போக அரசி 200 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம் இவைகளை ஒரு பெரிய சட்டியில் போட்டு லேசான தீயில் எரித்துக் கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். எண்ணெய்பதம் வந்ததும் சுத்தமாய் வடிகட்டி ஆறிய பின்பு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொண்டு தலைக்கு தேவையான போது தேய்த்து வந்தால் முடி வளருவதுடன் முடி கருத்து வளரும்.

Saturday 6 December 2014

விந்தையான கணிப்புகள்

           நவீன அறிவியல, விண்வெளிப் பயணத்தில் பயணம் செய்வோர் அடையும் நிலைகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. இந்த ஆய்வுகளின் முடிவுகளின் முடிவுகள் புராணம் கூறும் கதைகளை நினைவுப்படுத்தி நம்மை பிரமிக்க வைக்கிறது. வானில் மிளிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஆராய்ந்து அதன் மகத்துவத்தை முன்னோர்கள் கண்டு அனுபவித்து கதை வாயிலாகவும், செவி வழி பரவும் செய்தியாகவும் கூறி இருக்கின்றனர்.

              27 நட்சத்திரங்களுள் கடைசி நட்சத்திரமான ரேவதியின் கதை ஆச்சர்யமான கதை!

Friday 5 December 2014

கொஞ்சம் குறும்பு கொஞ்சம் குசும்பு

       
பெரும்பாலும் பழைய சினிமாவில் ஒரு வசனம் எல்லா படங்களிலும் வரும் அந்த வசனம் என்ன தெரியுமா? "ஒரு மரத்தில் படர்ந்த கொடி வேறொரு மரத்தில் படராது" என்று வரும் இதை எல்லோருமே கேட்டுருப்பீர்கள் இல்லையா?

         அது உண்மையா எனக் கண்டறிய நான் ஒரு வேலை செய்தேன். எங்க வீட்டில் காவள்ளி என்ற ஒரு கொடி இது கிழங்கு வகையை சார்ந்தது வெற்றிலை கொடிபோல் அழகாக பரடரும். அந்த கொடியின் ஓரத்தில் ஒரு கம்பை வைத்திருந்தேன் அதில் அந்த கொடி படர்ந்து இருந்தது. நான் அந்த கம்பை எடுத்துவிட்டு, இன்னொரு கம்பில் அந்த கொடியை எந்த சேதாரமும் செய்யாமல் சுற்றி வைத்துவிட்டேன்.

மருத்துவம்/ஆஸ்துமா குணமாக

     ஆடு தின்னாப் பாலை இலையை நிழலில் உலர்த்திப் பொடியாகக் கத்தரித்துப் புகையிலையில் வைத்துச் சுருட்டுச் சுற்றிப் புகைத்தால் சுவாசகாசம் நிவர்த்தியாகும். 

தீபங்கள் பேசும்

இந்த உலகத்தில்
தாம்தான் பெரியவனென்ற
அகந்தையை அழிக்க
பிரம்மாவையும் விஷ்ணுவையும்
அடிமுடி காண விரட்டி
எம்பெருமான் ஈசன்
தன் பேருறுவைக் காட்டிய
கார்த்திகை திருநாள் இன்று

Tuesday 2 December 2014

மனமும் அட்ட சித்திகளும்

         
                 யோகி, சித்தர், சாது என்று சொன்னதும் அவர்கள் ஏதோ அற்புதங்களை, சித்துக்களைச் செய்வார்களென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அற்புதங்களைச் செய்யாதவர் யோகியாய் இறையருளைப் பெற்றவராய் பக்தராய் இருக்க முடியாதென்பது பலருடைய தவறான கருத்து. யோகி, சித்தர், சாது என்பதற்கும் சித்துக்கள் விளையாடுவதற்கும் யாதொரு தொடர்புமில்லை. யோகத்தின் குறிக்கோள் சித்து விளையாடுவது அல்ல. ஒரு உண்மையான யோகி அதைப்பற்றி நினைக்கவே மாட்டான்.

           இறைநெறியில் செல்பவர்களுக்கு இடையில் சித்துக்கள் செய்யும் ஆற்றல் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் அதுப்பற்றி அறிய மாட்டாமல் மேலே முன்னேறிப் போக முயல்வர். ஆக சாமியார், யோகி என்றால் சித்துக்கள் செய்பவர்களாக இருக்க வேண்டுமென்றோ, சித்துகள் செய்பவர்களெல்லாரும் சன்மார்க் சீலர்களென்றோ கருதும் மயக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.

            பொதுவாக சித்துக்கள் அணிமா, லகிமா, கரிமா, மகிமா, ஈசித்வ, வசித்வ, ப்ராகாம்ய, ப்ராப்தி என எட்டுவகைப்படும். ஆனால் முன் பகுதிகளில் நாம் விளக்கிய சூக்கும திருஷ்டி, சூக்கும் ச்ரவணம், சூக்கும யாத்திரை, மானதத்தந்தி போன்றவைகளையும் சித்துகளென்றே சொல்ல வேண்டும்.

Saturday 29 November 2014

கனவு சிறுகதை


            காலை நேரமது மழை லேசாக தூரிக்கொண்டு இருந்தது. ஆங்காகங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது . கருவேலங்காடு நிறைந்த அப்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடிசை  வீடுகள்.

       அந்த வீடுகளுக்கு சற்றுத் தள்ளி ஒரு மண் சாலை அதில் எப்போதோ போடப்பட்டது. அந்த மண் சாலையில் இப்பவோ அப்பவோ என்று விழும் நிலையில் பழுதடைந்த மின்கம்பம் ஒன்று நின்று கொண்டிருந்தது. போதுமான சாலை வசதியோ மின்சார வசதியோ மருத்துமனை வசதியோ இல்லாத கிராமம் அது.
         
          அந்த குடிசை வீட்டின் முன் சுள்ளிகளை வெட்டிக்கொண்டிருந்தாள் வேளாயி... ஒல்லியான தேகம், எண்ணெய் தேய்க்காத தலை, கழுத்தில் தாலி இல்லை கிழிந்து போன சேலையும் நைந்து போன ரவிக்கையுமாய் காட்சித்தந்தாள். "என்ன கருமம் புடிச்ச மழையிது தொண தொணன்னு பேஞ்சுகிட்டு ஒரேதா பேஞ்சும் தொலைக்கவும் மாட்டேங்குது நம்ம பொழப்பையும் கெடுத்துகிட்டு" என்றவாறு உள் நோக்கி குரல் கொடுத்தாள்.

Friday 28 November 2014

நெருப்பாற்றில் நீந்தும் பெண்கள்

பெண்களை
தெய்வமென போற்றியவன்- இங்கே
துயிலுரிக்கின்றான்..! 

பெண்ணையும்
பெண்ணின் அங்கங்களையும்
கண்களால் எடைபோடும்
காமூகர்களின் கண்கள்
எப்போது எரிந்து சாம்பலாகும்?

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள் சிறுகதை

                                   -தொடர்ச்சி

          பஸ் ஸ்டாண்டை நெருங்கியதும் ஜன்னல் வழியாக நிர்மலாவைத் தேடினான் கண்ணன். நிர்மலா நகத்தை கடித்து துப்புவதும், கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தால் அவள் கோபத்தில் இருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்லியது போய் சமாதானம் செய்ய வேண்டும் என நினைத்தப்படி பஸ்சை விட்டு இறங்கி நிர்மலாவிடம் சென்றான்.

          "என்னங்க இப்படி லேட் பண்ணிட்டிங்க கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?"

        "என்ன செல்லம் பண்றது கிளம்பிதானே வரமுடியும் அம்மா ஒரு வேலை சொல்லிட்டாங்க" "சரி சரி வாங்க பஸ் நிக்கிது" இருவரும் கொடைக்கானல் பஸ்சில் இடம் பார்த்து ஏறி அமர்ந்தனர். நிர்மலாதான் பேச்சை ஆரம்பித்தாள். "என்னங்க நாம மேரேஜ்னு பொய் சொல்லிட்டு கிளம்பி வந்துட்டோம் அவங்களும் நம்பிட்டாங்க ஆனாலும் பயமா இருக்குங்க"

Thursday 27 November 2014

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்..! சிறுகதை

         "அம்மா... அம்மா... " என்று அழைத்தபடி அங்கிருந்த ஷேரில் அமர்ந்தான் கண்ணன்.

       "என்ன சொல்லு எனக்கு வேலையிருக்கு" என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் கண்ணனின் அம்மா ராசாத்தி.

       "எங்க கலேஜ்ல படிக்கிற ரமேஷ் அக்காவுக்கு மேரேஜ் என்னை கூப்பிட்டுருக்கான் நானும் போகனும்மா..." என்றான் மெல்ல.

        "யாருடா அது அன்னைக்கு போன்ல பேசினானே அவனா?"

        "இல்லம்மா இவன் வேற என்னம்மா நான் போகட்டுமா..."

         "சரி.. சரி.. போகலாம் அதுக்கு முன்னாடி கடையில போய் சிலிண்டரை மாத்தி வைச்சுட்டு போ டேட் முடிஞ்சிட்டு அப்புறம் தீர்ந்து போச்சுன்னா தரமாட்டான்.."

Sunday 23 November 2014

பொம்மை




என் மனம் உனக்கு
விளையாட்டு பொம்மையா ?
வைத்துக்கொள்வதும் தூக்கி
எறிவதுமாக இருக்கிறாயே..!

அது என்ன?
நீ அழும்போதும் மட்டும்
என்னை உன்கூடவே
வைத்துகொள்கிறாய்..?

சுயநலம்

நாம் எல்லோருக்கும் 
 பிடித்தவராகிறோம் 
மற்றவர்களை விட 
முக்கியமானவர்களாகிறோம் 
அவர்களுக்கு தேவைப்படும்போது ..!

புரிதல்

உன் நண்பன் உண்மையாய் 
இல்லை என்று எப்போ
உணர்கிறாயோ அப்போதே 
            விலகிகொள்வது உத்தமம்..!


Friday 21 November 2014

தியாகம்

நண்பர்கள் ... உனக்காக
உருகும் மெழுகுவர்த்திகள்..
உனக்காக  எரியும் தீபங்கள்..!

Thursday 20 November 2014

சிந்தனை துளிகள்

         இதயம் ஒரு அழகான வீடு
        அதில் குப்பைகளை கொட்டாதீர்கள்
         சுத்தமாக வைத்திருக்க
         முயற்சி செய்யுங்கள்

சிந்தனை துளிகள்

           மனதிற்கு நெருக்கமானவர்களை
           மட்டும் அருகில் வையுங்கள்
           கஷ்டங்கள் மட்டுமல்ல
           தீயவைகளும் தூர விலகிவிடும்...!

மழைக்கால டிப்ஸ்

        மழைக்காலங்களில் மின்சாரம் அடிக்கடி தடைபடும் அதனால் டார்ச் லைட், செல் போன், இவைகளில் முன்னதாக ஜார்ச் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

       மழைக்காலங்களில் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கு நோய் தொற்று அதிகமாக இருக்கும் அதற்கு தேவையான மருத்திரைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

Wednesday 19 November 2014

மருத்துவம்/மூலநோய் குணமாக

          சுக்கை மேல் தோல் சீவி அரைத்துக் கொதிக்க வைத்து இரவில் பூசிக் காலையில் பார்க்க கரைந்து போகும்.

         காட்டுக் கருணை, கறிக் கருணை, பிரண்டை, கடுக்காய் தூள் இவைகளை 25 கிராம் சூரணித்து வேளைக்கு கொட்டைபாக்கு அளவு எடுத்து தேனில் குழைத்துத் தினம் 3 வேளை ஆகாரத்திற்கு மேல் உண்டு வந்தால் சர்வ மூலமும் சாந்தியாகும். கோழிக்கறி, பச்சை மிளகாய், நண்டு, இறால் ஆகாது.

         இளநீர் தேங்காயின் வழுக்கையுடன் கற்கண்டு தூள் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் 30 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு தணியும், மூல நோயை ஆரம்பத்திலே கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

நிலாச்சோறு

நமக்கான நட்பைக் கண்டு
நிலா கேட்கிறது நிலாச்சோறு
இனி நான்..நீ.. நிலா.!

அமிர்தம்

நல்ல நட்பு கரும்பு போன்றது-அது
அன்பாக மாறும்போது இனிக்கிறது
அதுவே நீயாகும்போது
எனக்கு அமிர்தமாகிறது..!

Tuesday 18 November 2014

புத்தகத்தின் மறுபக்கம்

           எனக்கு சிறுவயது முதல் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. நான் மனிதர்களோடு பழகியதைவிட, புத்தகங்களோடு புழங்கியதுதான் அதிகம். அதனால்தானோ என்னவோ மனிதர்களை தூரத்தில் வைத்திருக்கிறேன், புத்தகங்களை அருகில் வைத்திருக்கிறேன். புத்தகத்தின் வழியாகதான் ஒவ்வொரு மனிதனையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது அவர்களை விட்டு விலகியிருக்க முடிந்தது. புத்தகத்தை படித்தால் மனித மனங்களை படிக்க முடியும்.

          18 வயதில் இராமயணம் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் அக்கா வந்து "இப்போதே இராமயணம் படிக்கிறாயான்னு" கேட்டாங்க இந்த வயதில்தான் படிக்க வேண்டும் என்று நிபந்தனைகள் உண்டா என்ன, இப்படி சொல்லி சொல்லிதான் நாம் நல்ல விஷயங்களை தாமதமாக உணர்கிறோம்.

Monday 17 November 2014

கீதை-12

           உபாசகர்கள் இரண்டு வகை தான் வேறு இறைவன் வேறு என்று நினைப்பவருக்குப் பகவான் தனியொரு வடிவில் காட்சி தந்து, அருள்புரிகிறார்.

          தானும் பரமாத்மாவும் ஒன்றேயெனக் கொண்டவருக்கு பகவான் ப்ரம்மஜோதியாய் நின்று அருள்புரிகிறார்.

                அவரே உருவமுள்ளவர்ஸகுணர்
                அவரே உருவமற்றவர் - நிர்குணர்

          எப்படிப் பார்க்கிறோமோ அப்படித் தெரிவார்.

   யார் அடைந்தவோ அவர் அறிகிறார்.
   யார் அறிந்தவடோ அவர் அடைகிறார்.

                              -முற்றும்-


 

( கீதை பிறந்த கதை என்ற சிறு முன்னோட்டத்தை வாசகர்களுக்கு தொடராக பதிவு செய்து வந்தேன். வாசித்த உள்ளங்களுக்கு எனது நன்றிகள். கீதையை படித்தால் என்ன அனுகூலம் என்பதை விளக்கும் சிறு முன்னோட்டம் கீதை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்.)

தலவிரிச்சம்

வீசிப்போன புயலில்
விழுந்த வேர் நான்
 தொலைந்து போவேனென்று
 நினைத்தாயோ..!
தலவிரிச்சமா வளர்ந்து
 உனக்கு நிழல் கொடுப்பேன்..!

Sunday 16 November 2014

கீதை-11

           கீதை வாசிப்பு ஒரு ஞானவேள்வி. நாம் இன்னொரு வேள்வி நடத்த வேண்டியதில்லை. வாசிப்புக்கே அத்தனை மகத்துவம் என்கின்றபோது, வாசித்தபடி வாழவும் தொடங்கிவிட்டால்..!

           பகவான் உரைத்த கட்டளைகள் 'கீதோபதேசம்' அந்த உபதேசத்தைக் கடைப்பிடிக்கிறவர் பகவானுக்குப் பிரியமானவராவர். கீதையில் பகவானுடைய சுவாச ஸ்பரிசம் நமக்குக் கிடைக்கின்றது. அதுமட்டுமா அவரைத் தரிசிக்கவும், அவருடன் உரையாடவும் கூட முடிகிறது. 

            'வேள்வி பலனும், விரத பலனும்
             தான பலனும், தவப் பலனும்
             கீதையை வாசிப்பவருக்கு
             ஒருசேரக் கிடைத்துவிடுகிறது'

        உலகம் பகவானுடையது. அவனுடைய கருவி நாம் இதில் எந்த லாபமும் நமக்கில்லை, அப்படியேதான் எந்த நஷ்டமும் நமக்கில்லை. லாபநஷ்டமில்லை என்கின்ற போது அதுபற்றி சந்தோஷப்பட என்ன இருக்கிறது, வருத்தப்படத்தான் என்ன இருக்கிறது? மனதைச் சமநிலையில் வைத்திரு என்கின்றது கீதை. காரியம் நம்முடையதில்லை என்கின்றபோது அதன் விளைவுகள் பற்றி நாம் யார் கவலைப்பட?

                                                       -தொடரும்

கீதை -10

          நாம் மூழ்கி எடுக்கின்ற ஒவ்வொரு முறையும் புதுப்புது முத்துக்கள்! புதுப்புது பொருள்கள்!

        சொல் புதிது, பொருள் புதிது என்பதோடு அதன் சுவையும் புதிதுதான் சுவைக்கின்ற ஒவ்வொரு முறையும்.

        கீதையின் ஒவ்வொரு வரியும் ஒரு நன்னெறியைச் சொல்கிறது. இது பகவானுடைய விஷயம். இதில் விஞ்சி நிற்பது சொல்லா, பொருளா, சுவையா என்று நாம் ஆராயக் கூடாது.

       கீதை வாசிப்பு வியாசர் இப்படிக் கூறுவார்:

        'கீதா ஸுகீதா கர்தவ்யாகி மந்யை
         காஸ்த்ர ஸங்கிரஹை!
         யா ஸ்வயம் பத்மநாபஸ்ய
        முக பத் மாத் விநி : ஸ்ருதா' என்று.

         கீதையை நல்லவிதமாய் கேட்கவும், பாடவும் செய்ய வேண்டும். படிக்கவும், கற்பிக்கவும் செய்ய வேண்டும். மனதில் பதிக்க வேண்டும். பகவான் பத்நாபரின் முகக் கமலத்திலிருந்து வெளிப்பட்டது.

 நாம் கீதையை ஓதி உணர்ந்தபின் வேறெந்த நூலும் அவசியப்படாது. கங்கையில் மூழ்கியெழுந்தவன் தன்னைத்தான் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். தனக்கு மட்டுமே அனுகூலமாயிருக்கிறான்.

        கீதையில் மூழ்கி எழுந்தவனோ தன்னை மட்டுமின்றி, உலகத்தையே தூய்மைப் படுத்துகிறான். தனக்கு மட்டுமின்றி, தான் வாழும் சமுதாயத்துக்கே அனுகூலமாகிறான்.

                                           -தொடரும்

Saturday 15 November 2014

மருத்துவம்/குதிகால் வெடிப்பு நீங்க

         மருதோன்றி இலையை நன்றாக அரைத்துத் தினமும் படுக்கும்போது குதிகால் வெடிப்பு உள்ள பாகங்களில் தடவி வந்தால் சில நாட்களில் குதிகால் வெடிப்பு குணமாகிவிடும்.

         விளக்கெண்ணையில் தேவையான சுண்ணாம்பைக் கலக்கி வைத்துக் கொண்டு குதிகால் வெடிப்புகளில் அடிக்கடி தடவி வந்தால் குதிகால் வெடிப்புக் குணமாகிவிடும்.

Friday 14 November 2014

கீதை-9

            பரமாத்மா ஆனந்தம, பக்திகாந்தம. அது ஜீவாத்மாவை ஈர்க்கின்றது, எல்லையற்ற ஆனந்தத்தில் ஜீவனை இணைக்கிறது.

           பதின்மூன்று முதல் பதினெட்டு அத்தியாயங்கள்வரை பேசப்படுவது ஞானயோகம. ஞானம் அறிவொளி. அஞ்ஞான இருட்டை அகற்றுவது. ஞான யோகத்தின் மூலம் சாதகன் சித்சொரூபத்தை அடைகின்றான். ஜீவானுபவத்தின் உச்சம் அது.

           'நீயும் நானும் ஒன்று
            நாம் வேறு வேறு அல்ல'
என்பதை உணர்த்துவது.

          வாழ்க்கையின் குறிக்கோள் முக்தி. முக்திக்கும் வழிகாட்டும் கீதை. எத்தனையோ மகான்களும், மேதைகளும் கீதைக்கும் உரையாசிரியர்கள். வரிகள் மாறின, பொருள் மாறவில்லை. உண்மை அப்படியே மாறாதிருக்கிறது.

                      கீதையின் அவசியம்

   
             கீதை- பகவான் உரைத்தது. மனிதர்களின் வார்த்தைக்கே மகாசக்தி உண்டென்கின்ற போது, பகவானின் வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்.

           எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எளிமையாய்ச் செய்யப்பட்டது.

         கடலைப்போல் அகண்டதாய், ஆழமுடையதாய் இருக்கிறது கீதை. அது உப்புக் கடலல்ல உண்மைக் கடல். நாம் வாழ்க்கை முழுவதும் அள்ளியள்ளி எடுத்தாலும் அத்தனையும் கைக்கு வராது.

                 கடலளவு கடலளவுதான்
                 கையளவு கையளவுதான.

¤முகநூல்¤ சிறுகதை

         "ஏய்... பவித்ரா மணி என்ன? அம்மா அதட்டலாக கேட்டாள்.

         "மணி 12 உங்களுக்கு மணி பார்க்கத் தெரியதா?"

         "அது எனக்குத் தெரியும் மணி 12 ஆகுது தூங்காம அப்படி என்னடி பேஸ்புக்ல பார்த்துட்டு இருக்க"

          "ஒரு ட்ராயிங் போட்டேன் ஒரு ஸ்டெட்டஸ் போட்டேன் லைக்கும், கமான்ஸ்ம் போட்டு இருக்காங்க அதான் தேங்க்ஸ்னு ரிப்ளே பண்ணிட்டு இருக்கேன்"

          "ஏன்டி உனக்கு அறிவு இருக்கா எப்ப பாரு பேஸ்புக் பேஸ்புக்" "நீங்களும் இதுல அக்கவுண்ட் வைச்சு பாருங்க அப்றம் இப்டி சொல்லமாட்டிங்க. நான் ஒரு கருத்து சொன்னா நூறு லைக் விழும் ஐம்பது கமான்ஸ் விழும் இதெல்லாம் உங்ககிட்ட சொன்னா நீங்க கண்டுக்கவே மாட்டிங்க அதனாலதான் பேஸ்புக் போறேன் இது ஒரு தனி உலகம்மா இதுல விழுந்துட்டா திரும்பி வர மனசே வராது. இதுல தான் அம்பானிக்கும் ப்ரண்ட் ரிக்ஹொஸ்ட் கொடுக்கலாம்."

          "ஏதோ எக்ஸாம் இருக்குன்னு அப்ளிக்கேஷன் போட்டியே ஏதாவது படிச்சியா? முதல்ல இந்த நெட்கார்டு போட்டு பார்க்கிறீயே அது உன்னோட காசு இல்ல முதல்ல நீ சொந்த கால்ள நில்லு அதுக்கப்புறம் உன் சொந்த கருத்தைப் போடு உனக்கே சொந்த காலில் நிக்க தகுதி இல்லாதப்ப நீ மத்தவங்களுக்கு எப்படி கருத்து சொல்வ.

¤சந்தியா¤ சிறுகதை

           காலை நேரமது யூனிபார்ம் அணிந்த பிள்ளைகள் ஸ்கூலுக்கு வேகமாக சென்று கொண்டிருந்தனர். ஆய்சா மட்டும் வருகின்ற ஒவ்வொரு பஸ்சையும் விட்டுவிட்டு தூரத்தில் பார்வையை போட்டப்படி நின்றுக்கொண்டிருந்தாள்... அவள் பார்வை யாருக்காவோ வெயிட்டிங் என்பதை சொல்லாமல் சொன்னது. அடிக்கடி கடிகாரத்தை பார்ப்பதும் எரிச்சலாக தூரத்தை வெறிப்பதுமாக இருந்தவளின் பிரகாஷமானது...

          "ஹாய்... ஆய்ஷா! என்ன ரொம்ப நேரமா அய்யாவுக்காக வெயிட்டிங்கா..." என்றபடி வண்டியை நிறுத்தினான் குமார்.

            "இல்லைங்க சார்... வந்து அஞ்சு நிமிஷம் தான் ஆகுது என்று நக்கலாக கூறிவிட்டு இன்னும் கொஞ்ச நேரம் லேட்டா வந்திருந்தா பஸ் புடிச்சு ஆபிஸ் போயிட்டு உனக்கு ஒரு குட்பாய் சொல்லிட்டு போயிருப்பேன்.."

           "சாரிம்மா... சாரி.. ரியலி வெரிசாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு அதுக்கு இத்தனை கோபமா..? அங்காளபரமேஸ்வரியே நேரில் பார்த்த மாதிரி இருக்கு சீக்கிரம் வண்டியில ஏறி உக்காரும்மா உன்னை ஆபிஸ்ல விட்டுட்டு போறேன்..."

Thursday 13 November 2014

கீதை-8

        பகவத் கீதை ஒரு சுருதி என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அது ஒரு ஸ்மிருதி என்பதும். அதன் பொருள் அவரவர் திறத்துக்கேற்ப விரித்துரைக்கப்படுகிறதேயின்றி, வரிகள் திருத்தி அமைக்கப்படவில்லை என்பது கீதையின் சிறப்பு.

          கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன என்று முன்பே குறிப்பிட்டோம். முதல் ஆறு அத்தியாயங்கள் கர்மயோக தத்துவத்தைப் பேசுகிறது. நாம் எதை எண்ணுகிறோமோ அதைச் செய்கிறோம். உறுதி பெற்ற எண்ணம் சங்கற்பம. தீர்மானம் செயல் வடிவம் எடுக்கின்ற நிலை கர்மம். வாழ விரும்புவது சங்கற்பம், வாழ்வது கர்மம்.

         உணர்வுகளை கர்மத்தின் ஆதார சுருதி. உணர்வுகளில் இரண்டு வகை.

      நேர்மறை உணர்வு - விரும்பத்தக்கது  
      எதிர்மறை உணர்வு - விலக்கத்தக்கது.

           விருப்பம், நட்பு, ஆசை, பொறுமை போன்றவை நேர்மறை உணர்வுகள் ஆகும். வெறுப்பு, பகை, சினம், பொறாமை போன்றவை எதிர்மறை உணர்வுகள் ஆகும்.

          ஏழு முதல் பன்னிரண்டு அத்தியாயங்கள் வரை சொல்லப்பட்டது. பக்தியோகம்.

        அன்பின் இன்னொரு பரிமாணம் பக்தி. அது தூய்மையே வடிவாய்க் கொண்டது. பக்தியில் கெட்டது நல்லதாகும். நல்லது மிக நல்லதாகும்.

பார்வைகள்

எண்ணங்கள் எழுத்துக்களாக
வண்ணங்கள் ஓவியங்களாக
சிதறிக்கிடக்கிறது இங்கே
ரசிப்பதற்கு ஆளின்றி..!

மருத்துவம்/இரத்த சோகை நீங்க

                          இரத்த சோகைக்கு


            கீழா நெல்லிச் சமுலத்தைப் பாலில் அரைத்துப் பாலில் கலக்கி உண்டு வந்தால் சோகை, காமாலை, உடல் வெளுப்பு, வாத பித்தம் நீங்கும், இரத்தம் அதிகரிக்கும், கண் குளிரும்.

          மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி சமுலத்தை மோரில் கரைத்து தினம் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் சோகை நீங்கிவிடும்.

         அயச் செந்தூரத்தைத் தேனில் கலந்து தினம் 2 வேளை கொடுக்கலாம்.

         சுமார் 3 சிறிய பீட்ருட் கிழங்கை எடுத்து இடித்து வடிகட்டி சாறு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சாற்றுடன் 4 டீஸ்பூன் தேன் கலந்து காலையில் தினம் வெறும் வயிற்றில் 22 நாளைக்கு சாப்பிட்டால் சோகை நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகும்.

Wednesday 12 November 2014

கீதை-7

                        கீதையின் சிறப்பு
         வேதங்களின் பொருளை கீதையில் காணலாம். அனைத்து உபநிடதங்களின் சாரமும் கீதையில் வாழ்வின் நெறிகளை முற்றாக உரைப்பது, சராசரி மனிதனுக்கும் பயன்படும, ஆன்மிக சாதகனுக்கும் பயன்படும். பக்குவங்கள் அனைத்தும் கொண்டது. இதில் சொல்லப்படாத தத்துவமே இல்லை.
 
            உடல், மனம், ஆன்மா சம்பந்தப்பட்டது யோகம். கீதை ஒரு யோக சாஸ்திரம்.

            பதினெட்டு யோகங்களை பதினெட்டு அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார் வியாசர். கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பிரதானமாய் அறியப்படும் நான்கு யோகங்களே இவ்விதம் விரித்துரைக்கப்படிருக்கிறது. கர்மத்தில் இருந்து ஞானம் இது மனித மனம் அடைகின்ற பரிமாணங்கள்.

         யோகம் என்பது என்ன? செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது.

       ஆத்மா சத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் விரவி நிற்கிறது. ஆத்மாவின் சொரூபம் கீதை.

        பரம்பரை தொட்டு, செவிவழி கேட்டுக் காப்பாற்றி வைத்த விஷயம் சுருதி எனப்படும். சொல்லும் பொருளும் மாறாதிருக்கும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்பட்ட விஷயம் ஸ்மிருதி எனப்படும். சமூக வாழ்வு சம்பந்தமான கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் இதில் சொல்லப்படிருக்கும். இது காலத்துக்கேற்ப மாறும். காலம், இடம், சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது மேலோரால் திருத்தி அமைக்கப்படும்.

                                             -தொடரும்

மருத்துவம்/நரை மாறுவதற்கு

நன்னாரி வேர் பச்சையாகக் கொண்டு வந்து கொட்டைப் பாக்களவு எடுத்து அரை டம்ளர் பசுவின் பாலில் கலக்கி ஒரு மாதம் சாப்பிட சுமார் 3 மாதங்கள் தொடர்ச்சியாய் சாப்பிட்டு வந்தால் நரை தோன்றாது.

Tuesday 11 November 2014

கீதை- 6

         பொதுவாக பாடசாலைகளில் போதிக்கப்படுகிற விஷயம், அமைதியான சூழ்நிலையில் ஆய்ந்தறிய வேண்டிய ஒன்று எதற்காக போர்க்களத்தில் போதிக்கப்பட்டது என்ற கேள்வி எழும்.
வாழ்க்கை பல போராட்டங்களை உள்ளடக்கிய மகாயுத்தம். அதில் போராடுகிறவன் வெற்றி பெறுகிறான். வெற்றிக்காக அவன் அசராது போராட வேண்டியிருக்கும. போராடத் தயங்குகிறவன் இழந்ததைப் பெற முடியாது, இருப்பதையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது.

       ஒரு யுத்தத்தைப் பற்றி யுத்தகளத்தில் பேசுவது எவ்விதத்திலும் முரணாகத் தெரியவில்லை. குருட்சேத்திரத்தை கொலைக்களம் என்றால் உலகம் ஒரு முடிவற்ற கொலைக்களந்தான். குருட்சேத்திரப் போரில் நடந்தது கொலைத் தொழிலா, தர்மம் தனது கடமையைச் செய்ததா என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

"நியாயத்தைக் காப்பாற்றுவதற்காக
 உயிரைக் கொடு, தேவைப்பட்டால்
 நியாயத்தைக் காப்பாற்றுவதற்காக
 உயிரை எடுக்கவும் செய்"

இதுதான் கண்ணன் காட்டிய வழி

 நாளை கீதையின் சிறப்பு பற்றி பார்ப்போம்.

                   - தொடரும்

மனசு

கோலங்களாக சிக்கித்தவிக்கிறது
 என் மனசு நடுவில்
 ஓவியமாக உன் உருவம்..!

கீதை-5

            பாண்டவர் ஐவரிலும் அர்ச்சுனனுடன் நெருங்கிய உறவு கண்ணனுக்கு. பாலப்பருவத்தில் இருந்து, திருமணப் பருவம் வரை, வில்வித்தையில் இருந்து போர்க்களம் வரை எல்லா நிலைகளிலும் அர்ச்சுனனின் வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறான் கண்ணன். அப்படித்தான் உலக மாந்தர் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவன் சம்பந்தப்பட்டிருக்கிறான். ஜீவாத்மா பரமாத்மா தொடர்பே அர்ச்சுனன் கண்ணன் தொடர்பின் மூலம் விளக்கம் பெறுகிறது.

        கீதை உபதேசம் ஏன் அர்ச்சுனனுக்குச் செய்யப்பட்டது? பாண்டவரில் முக்கியத்துவம் பெற்ற மூவர் தர்மர், அர்ச்சுனன், பீமன் ஆவர்.

        தர்மர் சகல சாஸ்த்திரங்களையும், தர்மங்களையும் கற்றவர். அவருக்கு உபதேசம் தேவைப்பட்டது. பீமன் முரடன் முடர்கள் நீதி நியாயங்களைக் கேட்டுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களில்லை. எனவே, கண்ணனின் உபதேசம் அர்ச்சுனனுக்கு செய்யப்பட்டது. மாமனிதன் தர்மர் மனிதனுக்கொவ்வாத விலங்கு குணம் படைத்தவன் பீமன். எனவே மனிதனான அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. பாமர மக்களின் ஏகபிரதிநிதியாய் அவன் அந்த நல்லுரைகளைக் கேட்டுக் கொண்டான்.

Sunday 9 November 2014

கீதை (பகுதி-4)

         அலைமேலலையாய் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கையிலும் அப்படிதான் சோதனைமேல் சோதனை. அது அரசனுக்கும் உண்டு, ஆண்டிக்கும் உண்டு. வாழ்வின் மறைபொருளுணர்ந்து அதன் பிடியில் சிக்கி வாடும் நிலை எல்லோருக்கும் உண்டு. உலகில் தீயவர்கள் அதிகம் கௌரவர்களைப் போல, நல்லவர்கள் குறைவு பாண்டவர்களைப்போல.

         பாரதப் போர் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே விளைந்த போர் என்பதைவிட, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நிகழ்ந்தது. மனிதப் பிறவியின் நல்லியல்புக்கும், தீய இயல்புக்கும் இடையில் நிகழ்ந்தது என்பதே பொருத்தம். போர்க்களம் குருட்சேத்திரம் அது மனித சரீரம் 'தர்மம் வெல்லும்' என்பது பாரதத்தின் மூலம் நாம் கண்ட நிரூபணம் நிரூபித்து காட்டியவர் பகவான்.

        உலக உயிர்களுக்கெல்லாம் அனுக்கிரகம் செய்கின்ற பகவான் ஒரு மானிடனுக்கேன் சாரதியாக இயங்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். எல்லா உயிர்களுக்குள்ளுமிருந்தும் அவர்தானே அனைவர் வாழ்வையும் சாரத்தியம் செய்து கொண்டு இருக்கிறார் . மனச்சாட்சி என்கின்ற சாரதி!

                                                   -தொடரும்

சொல்வதெல்லாம் உண்மை





             ஜீ தமிழ் எடுத்து இருக்கின்ற நல்ல முயற்சி சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி. பிரச்சனைகளை தீர்த்து வைக்கின்ற ஒரு நிகழ்ச்சியா நடத்திக்கொண்டு இருக்கிறது. நல்ல விஷயம்தான். ஆனால் யார் யாரின் பிரச்சனைகளை தீர்த்துவைக்கிறது? சமூகத்தின் பிரச்சனையா? அல்லது சமூகத்தில் உள்ள குடும்பங்களின் பிரச்சனையா? இதில் கலந்து கொள்ள வருகின்ற அனேக குடும்பங்கள் இரண்டு, மூன்று மனைவிகள் உள்ளவர்கள், கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள,இளம் காதலர்கள் இப்படிதான் அதிகம் வருகிறார்கள். இது சரியானதா?

கீதை (3)

            கடவுள் நம் பக்கம் இருந்தால் பிரதிகூலங்களும் அனுகூலமாகிவிடும. கடவுள் நம் பக்கம் இல்லை என்றால் வேறு எந்த அனுகூலங்களை நாம் பெற்றிருப்பினும் அவை நமக்கு பயன்படாது. போருக்கஞ்சாத சுத்தவீரன் அர்ச்சுனன் ஆனால் நடக்கவிருந்த பாரதப் போரிலோ அவன் துணிவை இழக்கவில்லை என்றாலும் சொல்லமாட்டத கலக்கத்தில் இருந்தான். களத்தில் பாட்டனார் பீஷ்மரையும், குருவான துரோணரையும் தாயாதியரையும் எதிர்த்துப் போரிட வேண்டிய நிலைக்குத் தாம் தள்ளப்பட்டமோ என்பதால் எழுந்த கலக்கம் அது. தன் கையால் அவர்கள் வீழ்ந்துபட நேருமே என்றெண்ணி வேதனைப்பட்டான். பிதாமகர் பீஷ்மர் தொட்டு உறவுகளையெல்லாம் தொலைத்து நாம் சௌகரியங்களைத் தேடிக்கொள்ள வேண்டுமா அப்படியொரு போர் அவசியமா என்று யோசித்தான்.

         சொந்தபந்தங்கள் சூழ்ந்திருக்க சொத்து சுகங்களை அனுபவிக்கின்ற மகிழ்ச்சி அவர்களை கொன்று அதன் மூலம் பெற்று அனுபவிப்பதில் ஏது? மனம் கூசியது பார்த்திபனுக்கு கையில் ஏந்திய வில்லைக் காலடியில் போடுகிறான் விரக்தியுடன் சுத்த வீரர்கள் அப்படிதான் போரின் நுணுக்கங்களைப் போலவே மற்ற நெறிகளையும் கவனமுடன் ஆராய்வார்கள். தர்மத்துக்குப் பழுதேற்பட்டு விடக்கூடாது என்பதில்அக்கறையாயிருப்பார்கள்.

        சொந்த மனிதர்களுக்கெதிராய் போர் செய்வதில் எந்த நியாயமும் இருப்பதாய்த் தெரியவில்லை அர்ச்சுனுக்கு. அர்ச்சுனா நீ போர்புரியத் தயங்குவது புறங்காட்டி ஓடுவதற்குச் சமம். நீ பின்வாங்கினால் அதர்மத்திடம் புறங்காட்டிச் செல்வதாகத்தான் அர்த்தம் என்று கண்ணன் பேசுகிறான்.

        போர்களத்தில் வைத்து கண்ணன் உரைத்ததெல்லாம் பாண்டவ வீரனுக்கு மட்டுமின்றி உலகத்தின் ஒவ்வொரு பாமரனுக்கும் பொருந்தும்.

                                   
                                                  -தொடரும்

Saturday 8 November 2014

விடியல்

தோழனே..! 
உனக்காக விடிக்கின்ற காலை
உனக்காக உதிக்கின்ற சூரியன்
உனக்காக சிரிக்கின்ற நிலா
உனக்காக அழுகின்ற வானம்
உனக்காக வீசுகின்ற தென்றல்
உனக்காக வாடுகின்ற மலர்
இவையாவும் பொய்யில்லை
பிறகு ஏன்? உனக்காக
யாருமில்லை என்று வருந்துகிறாய்
அடடா..! உன் உலகம்
எத்தனை அழகானது
உற்சாகமாய் கிளம்பு
உலகம் உன் நாளைய
விடியலுக்காக காத்திருக்கிறது..!

Friday 7 November 2014

கீதை (பகுதி-2)

         போரைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை. பாண்டவரும, கௌரவரும் கண்ணனின் உதவி வேண்டி துவாரகை சென்றனர். அவர்கள் சென்ற சமயம் கண்ணன் துயில் கொண்டிருந்தான்.

         கௌரவர் சார்பில் சென்ற துரியோதனன் கண்ணனின் தலைமாட்டிலும், பாண்டவர் சார்பில் சென்ற அர்ச்சுனன் அவனது கால்மாட்டிலும் நின்றிருந்தனர்.

         துயில் நீங்கிய கண்ணன் இயல்பாகத் தனது கால்மாட்டில் நின்றிருந்த அர்ச்சுனனை முதலில் பார்த்தான். பிறகே தலைமாட்டில் நின்றிருந்த துரியோதனன் கண்ணில் பட்டான். தான் முதலில் கண்ணுற்ற அர்ச்சுனனிடம் முதலில் பேசிய கண்ணன் பாண்டவர்க்குத் துணை நிற்க ஒப்புக் கொண்டான். துரியோதனனோ கண்ணனின் படையைத் தனக்கு உதம்படி வேண்டினான். ஆக மகாபாரதப் போரில் கண்ணன் ஒரு பக்கம் அவனது படை மற்றொரு பக்கம் என்று முடிவாயிற்று.

         கண்ணன் அர்ச்சுனனிடம் ஒரு நிபந்தனை விதித்தான். அதற்கு அவனும் ஒப்புக்கொண்டான். அந்த நிபந்தனை இதுதான். போரில் கண்ணன் ஆயுதமேந்தமாட்டான் பார்த்தனுக்கு ரத சாரத்தியம் மட்டுமே செய்வான்.

        இங்கே நாம் கவனத்தில் கொள்ளத்தக்கதொன்று.

       துரியோதனன் படை பலத்தைப் பெரிதாய் மதித்தான். அர்ச்சுனனோ இறைப்பலத்தைப் பெரிதும் மதித்தான்.

கீதை

                   கீதை (பகுதி-1)

       கீதையைத் தியானிக்கிறவரை பாவங்கள் தீண்டாது.

      கீதை எங்கிருக்கிறோ அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன

      எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரமே சகாயம் வருகிறது.

      எங்கு கீதை கற்கப்படுகிறதோ, கற்பிக்கப்படுகிறதோ அங்கு நான் வாசம் செய்கிறேன்.

                                  (ஸ்ரீ கீதா மகாத்மியம்)
       
              இது பகவானின் வாக்கு

       பரமாத்மா கண்ணனைவிட சிறந்த ஞானியும் இருக்க முடியாது. பகவத் கீதையைவிட சிறந்த நீதி நூலும் இருக்க முடியாது.

        கண்ணனைத் துதிக்க முடிந்தவரும் கீதையைப் படிக்க முடிந்தவரும் பாக்கியவான்கள். 

                கீதை பிறந்த கதை

        மகாபாரதப் பாண்டவர்களுக்கும, கௌரவர்களுக்கும் சமாதானம் ஏற்பட வகையில்லை. பாண்டவர்க்குரிய நாட்டை சூதில் அபகரித்த துரியோதனாதியர் ஐவரின் சொத்துக்களில் ஐந்தே ஐந்து வீடுகளைக் கூட அவர்களுக்குத் திருப்பித் தர மறுத்துவிட்டனர்.

        கண்ணனின் தூது தோல்வி கண்டது அவன் துவாரகைக்குத் திரும்பிவிட்டான்.

                                                  - தொடரும்

Thursday 6 November 2014

சமுதாய சிந்தனைகளை கூறும் மகாபாரதம்

     

         பாரதப் பெருங்காப்பியம் குருகுலத்தாரிடை நிகழ்ந்த போர் பற்றி கூறுகிறது. உலக இலக்கியங்களுள் அளவாற் பெரியது பாரதம் என்பர். பாரத போர் நிகழ்ந்த காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன 4500 வருஷங்களுக்கு முற்பட்டது என்கிறது " வெள்ளிடை மாலை" கலியுகத்தின் தொடக்கத்தில் ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக பாரதப் போர் நடந்ததாகவும் கூறுவர். ஒரு சிலர் துவாபரயுகத்தின் இறுதியில் கி.மு. 3139 என்றும் கி.மு. 3102 ல் நிகழ்ந்தது என்றும் பலவாறு பல கதைகள் புனைந்துள்ளனர். ஆனால் பாரத போர் உண்மையில் நிகழ்ந்திருக்க கூடும் ஏனெனில் நாமும் பாரத போரின் அடிப்படையில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Wednesday 5 November 2014

தண்டனை

காசு கொடுத்தான் அவன்
சுகத்தை கொடுத்தாள் அவள்
இருவருக்கு இலவச இணைப்பாக
இறைவன் கொடுத்தான் "எய்ட்ஸ்"..!

யாரோ இவன்

கிழக்கில் தோன்றும்
சூரியன் போல் எழுந்து வந்து
மறைந்து கொள்வானோ..?

கவிதைப் பெண்ணின்
கண்கள் போல்
துறுதுறுப்பானோ..? 

காதல் கொள்ளும்
சந்திரன் போல் அருகில் வந்து
கரைந்து போவானோ..?

இலக்கிய காதலில் தோழியின் பங்கு

         வரலாற்று சுவடுகளில் இன்றும் அழியாமல் தடம் பதித்து நிற்பது காதல். காதலைப் பற்றி இலக்கியங்களும், இதிகாசங்களும், காவியங்களும் பலவாறு எடுத்து இயம்புகின்றன. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை காதல் புனிதமானது என்கின்றனர் பலர், காதல் இல்லையேல் சாதல் என்கின்றனர் சிலர். அப்படிப்பட்ட வலிமை பொருந்திய காதலுக்கு தூதாக நிற்பது நட்பு.

           ஒரு தலைவனுக்கும், தலைவிக்கும் காதல் ஏற்பட்டால் அவர்களுக்கு தூதாக செல்வது தோழிகள். அதுமட்டுமல்ல இவர்களில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மனமறிந்து நாசுக்காக தவறை உணரச் செய்யும் உரிமையும் இவர்களுக்கு உண்டு. இது எந்தளவுக்கு உண்மை என்பதை அறிய இலக்கியத்துக்குள் சென்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோமா? வாருங்கள் இங்கே ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்டு யாரும் அறியாதவாறு களவொழுக்கத்தில் ஈடுபடுக்கின்றனர். இவ்வாறு களவிலே கூடும் வழக்கத்தை விடுத்து தலைவன் தலைவியை விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோழி விரும்புகின்றாள். அதனால் தலைவனை சந்தித்து அவன் மனம் புண்படாதவாறு இவ்வாறு கூறுகின்றாள்.

Tuesday 4 November 2014

மனசே... மனசே... /திரையிசை பாடலும், இலக்கிய பாக்களும்

         
        காலை வேளை வேலைகள் முடிந்து அமர்ந்திருந்தேன் திடீரென்று கார் இருள் சூழ்ந்தது. இது என்ன கார் காலமோ மண் மணக்கிறதே என்று என் மனம் வாசலுக்கு விரைந்தது. உடனே உள்ளிருந்து ஒரு குரல் அழைத்தது.

                  மனசே...என் மனசே..
            நீ எங்கே போகப் பார்க்கிற
            மனசே.. என் மனசே...
            நீ யாரை தேடி போகிற
            இத்தனை நாள் என் கூடயிருந்த
            இப்ப என்ன விட்டு நீ போவதெங்க
            உனக்கு யாரோட சகவாசம்...
           வேணாம் செய்யாத எனை மோசம்...

Thursday 30 October 2014

தீயாக மாறிவரும் சா(தீ)தி

         நம் தேச தலைவர்கள் நாட்டிற்காக உழைத்தார்கள் நாட்டிற்காக வாழ்ந்தார்கள் அவர்களின் கருத்துக்கள் வேறாக இருந்தாலும் எண்ணங்கள் ஒன்றாக இருந்தது அது மக்களின் நலனுக்காக இருந்தது அதனால் கட்சிகள் ஒன்றாக இருந்து. ஆனால் இன்று அவ்வாறு இருக்கின்றதா பல்வேறு கட்சிகள் கவியரசு வைரமுத்து அவர்கள் சொன்னதுபோல் மரங்களின் கிளைகளில் இலைகளை விட கட்சி கொடிகளே அதிகம் இருக்கிறது என்று சொன்னார் சாதிக்கொரு கட்சி வீதிக்கொரு சங்கம்.

         ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு கொள்கையோடு போராடி மக்களிடத்தில் நல்ல பெயரோடு வாழ்ந்து இன்று சிலையாக நிற்கிறார்கள் ஆனால் இன்றைய தலைமுறையோ அதை தவறாக பயன்படுத்தி சாதி என்ற பெயரில் தனி கொடி, தனி சின்னம் தனி மாநாடு என்று சாதியை வளர்த்து வருகிறது. அன்று முதல் இன்று வரை சாதிகள் ஒழியவில்லை இனிமேல் ஒழியபோவதில்லை அதுதான் சங்க வைத்து வளர்த்து வருகிறார்களே பிறகு எங்கே ஒழிப்பது.

         சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் முதலில் பள்ளியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நமது அண்டை நாட்டில் ஸ்ரீலங்காவில் சாதியின் பெயரில் பள்ளியில் சேர்ப்பது இல்லை மதங்களின் பெயரில் தான் சேர்க்கிறார்கள் அவர்களால் முடிந்தது நம்மால் ஏன் முடியவில்லை?

          இஸ்லாமிய மதத்தில் உட்பிரிவுகள் இருக்கிறது அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதில்லை. கிறிஸ்துவமத்தில் உட்பிரிவு இருக்கிறது அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதில்லை ஆனால் இந்து மதத்தில் மட்டும்தான் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். தமிழனே தமிழன் அழித்துக் கொள்கிறான். அரசு இதை கண்டு கொள்வதே இல்லை இப்ப சாதிக்கட்சி என்று வந்துவிட்டது இனிமேல் கண்டுகொள்ளவா போகிறது? அரசே சாதியின் பெயரில் கணக்கெடுப்பு செய்கிறது எத்தனை ஓட்டு எந்த சாதியில் இருக்கிறது எந்த சாதிக்கட்சியோடு கூட்டு வைத்துக்கொள்ளலாம் என்று கணக்கு பண்ணுகிறது இனிமேல் எப்படி சாதியை ஒழிக்க முடியும்.

          அரசிடம் கேட்டால் என்ன சொல்கிறது சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யதான் இந்த சாதி சான்றிதழ் கேட்கப்படுவதாக சொல்கிறது. சாதியின் அடிப்படையில் எந்த ஒதுக்கீடும் வேண்டாம் இலவசங்களும் வேண்டாம் வருமானத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கலாம். முதலில் திறமையானவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் அதன் பிறகு வருமானதிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற ரீதியில் இட ஒதுக்கீடு செய்யுங்கள். இதில் அனைத்து பிரிவினருக்கும் வேலைவாய்ப்பு அமையும். எல்லா மதத்திலும் எல்லா சாதியிலும் ஏழை என்ற ஒரு சாதி இருக்கிறது.

         இது அரசுக்கு தெரியாமலா இருக்கிறது இதன் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்புகளை வழங்கலாமே ஏன் அவ்வாறு செய்ய தயங்குகிறது? தாழ்த்தப்பட்டவர்களை மேன்மை நிலைக்கு கொண்டுவர சாதி சான்றிதழ்கள் அவசியம் இல்லை வருமான சான்றிதழ் போதும் அதிலே தாழ்த்தப்பட்டவர்களும் வந்துவிடுவார்கள் இல்லையா. அரசே நல்லது செய்கிறோம் என்ற பெயரில் இட ஒதுக்கீடு செய்து அவர்களை ஒதுக்கி வைக்கிறது, இழிவுப்படுத்துகிறது. சாதியை வளர்க்க அரசும் ஒருவகையில் ஊக்குவிக்கிறது என்பதுதான் உண்மை.

          கவிஞன் பாரதி "சாதிகள் இல்லையடி பாப்பா எனப் பாடியது குழந்தைகளுக்கு மட்டும்தான் வளர்ந்த குழந்தைகளுக்கு அல்ல போலும்" அந்த முண்டாசு கவிஞனுக்கு மனிதர்களின் மனம் முன்பே தெரிந்தால் மாற்றி பாடியிருப்பான். மற்ற நாடுகளில் இந்த சாதிசான்றிதழ்கள் இல்லை நம் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன்? மற்ற நாடுகளில் முடிந்தது நம் நாட்டில் மட்டும் முடியாமல் போனது ஏன்? சிந்திப்போம்..!

Sunday 26 October 2014

சிங்கார சென்னைக்கு தண்ணீரால் வந்த சோதனை

         சிங்கார சென்னைக்கு தண்ணீரால் சாபகேடோ என்னவோ மழை வந்தாலும் பிரச்சினையாக இருக்கிறது மழை வரவிட்டாலும் பிரச்சினையாக இருக்கிறது. என்னதான் தமிழ்நாட்டுக்கே தலைநகரமா இருந்தாலும் தண்ணீருக்கு வேற மாவட்டங்களில் இருந்துதான் தண்ணீர் பெற வேண்டியிருக்கிறது.

           ஆம் சென்னைக்கு வீராணம் ஏரியிலிருந்து தான் குடிநீர் அனுப்பப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. இந்த ஏரி காவிரியில் இருந்து கல்லணை வழியாக தண்ணீர் வருவது வழக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி. வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ தொலைவிலுள்ளது.

           இந்த ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநிர் கொண்டுவர 1968 ஆண்டில் திட்டமிட்டு பிறகு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு 180 MCD குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004 ல் நிறைவடைந்தது. வீராணம் ஏரி மிகப்பெரியது அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் காவிரி கரையிலிருந்து தான் தொடங்குகிறது.

         அந்த புதினத்தில் வீரநாராயண ஏரி எனக் குறிப்பிடப்பட்டிருக்கு இந்த ஏரியை முதலாம் பராந்தகசோழன் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீராணம் ஏரி எவ்வளவு பெரியது அது உடைப்பெடுத்தால் என்னவாகும் என்பதை அத்தனை தத்ரூபமாக சொல்லியிருப்பார் அத்தனை பிரம்மாண்டமான ஏரி.

         மேலும், சென்னையுள்ள சுற்றி பூண்டி, செங்குன்றம்,செம்பரபாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஏரிகளில் முழுமையாக நீரை சேமித்து வைக்க முடியவில்லை மீதமுள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது.

             போரூர், அயனம்பாக்கம், ஆகிய ஏரிகளை ஆழப்படுத்த முடியும் இதனால் அதிக நீரை சேமித்து வைக்க முடியும் இதை ஆழப்படுத்த 50 லட்சம் நிதி ஒதிக்கியதாக கூறப்படுகிறது. 20 கோடி ரூபாய் செலவில் போரூர் ஏரியின் தரை பகுதி ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் வரை 70 மில்லியன் கன அடியாக கொள்ளவு உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. 30 கோடி செலவில் அயனபாக்கம் ஏரியின் கரை உயர்த்தப்படும் என்றும். 79.50 கோடி நேமம் ஏரிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

            ஆனால் இவையாவும் எப்போது நிறைவேறும் என்று யாருக்கும் தெரியாது.மழைக்காலங்களில் இப்பணியை தொடர முடியாது ஒவ்வொரு வருடமும் மழை வருகிறது அந்த தண்ணீரை வெளியேற்ற வழி இல்லை அதை சேமித்து வைக்கவும் வழியில்லை. இந்த நிதிகளை வைத்து ஒரு புது ஏரியை உருவாக்கி விடலாம். சென்னை ஒரு மெட்ரோ சிட்டி ஆனால் கோடைக்காலத்திலும் சரி, மழைக்காலத்திலும் சரி தண்ணீரால் அவதிக்குள்ளாகிறது.

Saturday 25 October 2014

நமது வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும்

         நமது எண்ணங்களின் அடிப்படையில் தான் ஒவ்வொரு காரியமும் நல்லதாகவும் கெட்டதாகவும் அமைகிறது. நமது மனதில் நல்ல எண்ணங்களும் உண்டாகும் சில சமயங்களில் கெட்ட எண்ணங்களும் உண்டாகும.

        இந்த இரண்டு எண்ணங்களும் தெரிந்தோ தெரியாமலோ நாம்தான் காரணகர்த்தாவாகிறோம். நாம் வெளிப்படையாகச் சொல்லும் ஆசைகள் நல்லெண்ணங்களாக உருவெடுக்கிறது. நாம் ரகசியமாக மனதில் வைத்துக்கொள்ளும் கெட்ட ஆசைகள் தீய எண்ணங்களாக வடிவெடுக்கின்றன. இரவு வந்துவிட்டால் நாம் இருட்டிவிட்டதே என்று கவலைப்படுவதில்லை. ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் போதும் இருள் தானாகவே அகன்று விடும். அதேபோன்று நல்லெண்ணங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்துப் பழகினால் தீயவை தானாகவே மறைந்து விடும்.

         எது நல்லது? எது கெட்டது? தாம் அதன் மூலமாக பெறுகின்ற உணர்ச்சியைப் பொறுத்து தான் அது அமைகிறது. என்னிடம் தோன்றும் எண்ணம் என்னைப் பற்றிய தற்பெருமையை பிறரிடம் பொறாமையை என்னுடைய சுயநலத்தைத் தூண்டி விட்டால் அவை கெட்டவைஎன்னிடம் ஏற்படும் எண்ணங்கள் பிறருடைய நன்மைக்காகச் சேவை செய்யும்படி என்னை எளியவனாக நினைக்க உதவும்படி உன்னுடைய செயலினால் எவருக்கும் கெடுதல் ஏற்படாதபடி அமையுமானால் அவை நல்லவையாகும்.

        எனக்கு எல்லாம் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மேலும் மேலும் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவர் எவ்வளவு செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அவன் ஏழைதான். எனக்கு எதுவும் வேண்டாம் என்னிடம் இருக்கும் சிறிதளவுள்ள பொருளையும் பிறருக்காகக் கொடுத்து விடுவேன் என்று சொல்லி செயல்படுகிறானோ அவன் பொருள் இல்லாவிட்டாலும் செல்வந்தன்தான்.

         ஆக நாம் உலகத்தில் சுவைப்பவை தொடுபவை, உணர்பவை ஒவ்வொன்றையும் ஆண்டவன்தான் அளித்தான் என்பதை உணர்ந்து கொள்வோம். ஒரு முயற்சி சுயநலத்திற்காக அமையும் போது தீய எண்ணம் ஆகிவிடுகிறது அதுவே பொது நலத்திற்காக அமையும்போது நல்ல எண்ணம் ஆகிவிடுகிறது.

களவுமணம் கூடா

        பண்டை தமிழருடைய ஒழுக்கம், வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நாகரிகம், சிறப்பு முதலிய செய்திகளை இலங்கியங்கள் மூலம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

         களவாவது பிறப்பு, கல்வி, வயது, உருவம், திரு முதலியவற்றால் ஒத்த தன்மையுடைய ஓர் ஆண்மகனுக்கும் பெண்மகளுக்கும் ஊழ்வலியினால் ஒருவரை ஒருவர் கண்டு காதலித்து இன்புற்று ஒழுகுவது.

         கற்பாவது, அங்ஙனம் காதலித்து அவர்கள் பிள்ளைகள் ஊர் அறிய மணந்து கொண்டு இல்லறம் நடத்தி இன்புற்று வாழ்வது இவ்விரு ஒழுக்கங்களையும் புலப்படுத்தும் பாக்களை குறுந்தொகை பாடல்கள் நமக்கு அழகாக சொல்கின்றது. இலக்கியங்களிலே எல்லோருக்கும் பிடித்த இலக்கியம் குறுந்தொகை பல கவிஞர்களை உருவாக்கிய இலக்கியம் என்று கூட சொல்லலாம்.

     அந்த பாக்கள் இதோ...

             தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொண்டு பிறர் அறியாதவாறு களவு மணம் மேற்கொண்டனர் தலைவன் அக்களவொழுக்கத்திலேயே நாட்டமுள்ளவனாய் இருந்தான் அதனால் தலைவி ஊரறியத் தலைவன் தன்னை திருமணம் செய்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டு தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.


            "யாரு மில்லைத் தானே கள்வன்
             தானது பொய்ப்பின் யானெவன்
            செய்கோ தினைத்தா ளன்ன சிறு
             பசுங் காவை ஒழுகுநீ ரால் பார்க்குங்
             குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே"

                                       - குறுந்தொகை

           அதாவது, தோழி, தலைவன் என்னைக் களவில் மணந்த போது வேறு எவரும் இல்லை என் நலத்தைக் கவர்ந்த கள்வராகிய தலைவர் மட்டுமே இருந்தார் "உன்னைப் பிரியேன்: பிரியின் ஆற்றேன்" விரைவில் உன்னை மணப்பேன் என்று தலைவர் தாம் கூறிய சூளுரையைப் பொய்யாகும்படி நடப்பாராயின் நான் என் செய்வேன்? ஐயோ... சாட்சிகள் ஒன்றுமில்லையே...! எங்கள் களவு மணம் நிகழ்ந்த இடத்தில் குருகு ஒன்று இருந்தது (குருகு என்பது நாரை) அது சான்று கூறும் தகுதி உடையது அன்றே..! மேலும் அது தன் இரையாகிய ஆரல்மீன் வருகிறதா..! என்று கூர்ந்து நோக்கி கொண்டிருந்ததால் தலைவன் சூளுரையைக் கேட்டுமிராது ஆகவே இனி நான் என்ன செய்வேன் என தலைவி புலம்புவதாக இச்செய்யுள் அமைந்துள்ளது.

          இச்செய்யுள்ளில் நாம் அறிந்துக் கொள்ளவேண்டியது என்னவென்றால் களவுமணம் என்பது நம் பண்பாட்டுக்கு புறம்பான ஒரு செயல் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

         பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு பாடலே சான்று தவறு  செய்துவிட்டபின் எங்கே தலைவன் தன்னை மறந்து செல்வானோ என்று பயந்து நாளை வெளி உலகத்திற்கு தெரிந்தால் தூற்றுவார்களே தலைவன் இல்லை என்று மறுத்துவிட்டால் என்ன செய்வது அந்த இடத்தில் சாட்சிகள் கூட இல்லையே என்று எப்படி அழுது புலம்புகிறாள்.

        இன்றைய காலக்கட்டத்தில் காதலின் மிகுதியால் காதல் மிகுதி என்று கூட சொல்வது தவறு உடல் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு தவறு செய்கின்றனர் அவ்வாறு தவறு ஏதும் செய்யாதிருக்கும் பொருட்டுத்தான் புலவர் முன்னரே இச்செய்யுள்ளை இயற்றினாரோ என்னவோ..?

        பெண்களே "உயிரை விட மானம் பெரியது" சேலையில் முள் பட்டாலும் முள் மீது சேலைப்பட்டாலும் பாதிப்பு சேலைக்குதான். உண்மையான காதல் ஒருபோதும் தவறு செய்யாது அப்படி தவறு செய்ய தூண்டினால் அது உண்மையான காதலாக இருக்க முடியாது உங்கள் காதல் எப்படிப்பட்டது என்று இப்போது தெரிந்திருக்கும்.




V

Friday 24 October 2014

ரசிகர்களின் முட்டாள் தனம்

            கலை என்பது கலையாக பார்க் வேண்டும் ஆனால் நாம் எல்லை மீறி செயல்படுகிறோம். பொதுவாக நாம் யாருக்கு பாலபிஷேகம் செய்வோம் கடவுளின் சிலைக்கு அல்லது இறந்த மாபெரும் தலைவருக்கு ஆனால் நாம் இவர்களுக்கு பாலபிஷேகம் செய்வதில்லை மாறாக உயிரோடு இருக்கும் நடிகனுக்கு செய்கின்றீர்கள் உயிரோடு இருக்கும் போதே பால் ஊற்றுகின்றீர்களா?

          ரசிகர்களே யோசியுங்கள் நீங்கள் செய்யும் காரியங்கள் சரியானதா என்று. உங்கள் அன்பை நீங்கள் காட்ட வேண்டுமென்றால் உங்கள் ரசிகர் மன்றம் தலைமையில் பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்து அந்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள் அல்லது ஒரு வேளை உணவு கூட இல்லாதவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள் அல்லது எத்தனையோ இடங்களில் ஏழை மாணவர்கள் படிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் இல்லை என்றால் அந்த நடிகன் படத்தில் போலீசாகவோ, வக்கீலாகவோ, கலெக்டராகவோ வந்து லஞ்சம் வாங்காமல் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள்

          நீங்களும் அதுபோல ஒரு வக்கீலாகவோ,டாக்டராகவோ,கலெக்டராகவோ ஆக நீங்களும் முயற்சி செய்யுங்கள. அதற்கு காரணம் அந்த நடிகன் என்று பெருமையாக சொல்லுங்கள் அதுதான் ஒரு உண்மையான ரசிகனுக்கு அழகு அதை விடுத்து.


         ரவுடித்தனம் செய்வது, தற்கொலை செய்து கொள்வது, பாலபிஷேகம் செய்வது, ரசிகர் மன்றம் என்ற பெயரில் வேலைக்கு செல்லாமல் வெட்டியாக இருத்தல் இதுபோன்று செயல்களை செய்தால் நீங்கள் உயிராக நினைக்கும் அந்த நடிகன் கூட உங்களை திரும்பி பார்க்க மாட்டார்கள்.

            உங்கள் நடிகனுக்காக ஒருவருக்கொருவர் அடித்து கொள்கிறீர்கள் ஆனால் அவர்களோ நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று பேட்டி கொடுக்கிறார்கள் இதில் எது உண்மை? நீங்கள் தேவையில்லாமல் அடித்து க்கொண்டு உங்கள் வாழ்க்கை இழந்து கொண்டு இருக்கிறீர்கள் அவர்களோ சுகபோகத்தோடு சந்தோஷமாக இருக்கிறார்கள் ரசிகர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் யாருக்கு என்ன லாபம் என்று யோசியுங்கள் ரசிப்பு தன்மையோடு நிறுத்திகொள்ளுங்கள் வெறித்தனம் அர்த்தமற்றது.







Thursday 23 October 2014

தீபாவ(லி)ளி யாருக்கு?

     
  தீபாவளி கொண்டாட்டம் என்பது ஒரு நாள் தான் என்றாலும் ஒரு மாதத்திற்கு முன்பே அதை  வரவேற்க தொடங்கிவிடுவோம். பலகாரம் செய்வது முதல் துணிகள் எடுத்தல் வரை அமர்க்களமாக இருக்கும். நான் பத்து நாட்களுக்கு முன்பே துணிகள் வாங்கிவிடுவது வழக்கம் ஆனால் முழுமையாக எடுக்க மாட்டேன் கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டு வருவேன் ஏனெனில் தீபாவளி இரண்டு நாட்கள் இருக்க மறுபடியும் செல்வேன் அந்த கூட்டத்தை கண்டு ரசிக்க... திருவிழா என்றாலே கூட்டம் அழகு அதுபோல தீபாவளி என்றாலும் கூட்டம்தான் அழகு அந்த இடிபாடுகளுக்குள் பல கூச்சல்கள் பல உரையாடல்கள் அலைமோத துணிகள் எடுப்பது ஒரு தனி சுகம்தான்.

         வீட்டை விட்டு பஸ் ஏறியதும் உரையாடல்கள் தொடங்கி விடும் பேருந்தில் பழைய நண்பிகளை பார்த்து "ஏய்... நல்லா இருக்குறியா? அப்றம் எப்டி இருக்க? என்ன டிரெஸ் எடுக்கவா? பலகாரம் செய்துட்டியா என்னென்ன பலகாரம் இந்த பலகாரத்திற்கு என்னென்ன சேர்ப்பது அதை எப்படி செய்வது ஆயிரம் கேள்விகள் எழும். நலம் விசாரிப்பில் தொடங்கி பலகாரம் சுடுவதில் வந்து நிற்கும்.

         பேருந்தை விட்டு இறங்கியதுமே காவல்துறை அறிவிப்பு காதை எட்டும் "கூட்டம் அதிகமாக இருப்பதால் அவரவர் பொருட்களை பாதுகாத்து கொள்ளுங்கள் திருடர்கள் ஜாக்கிரதை குழந்தைகளை தவிர விடாதிர்கள் வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை என்ற அறிவிப்புகள் காதை தொட்டது சாலைகளின் இரு புறங்களிலும் வான் உயர்ந்த கட்டிடங்கள் வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்தன அந்த பெரிய கட்டிடங்களுக்கு கீழே நடைபாதை வியாபாரிகள் கடை விரித்திருப்பார்கள் வண்ண உடைகள் கண்ணை பறிக்கும் வழிநெடுகிலும் பலூன், வளையல் வண்டி, பழவண்டி ப்பீ... ப்பீ... ப்பீ... அந்த கூட்ட நெரிசலில் காதுக்கு அருகே ஊதும் வியாபாரி அதுதான் வேண்டுமென்று அடம் பிடித்து அழும் குழந்தை, ஜமுக்காளம், டிவி கவர் என கூவி.. கூவி.. விற்பனை செய்யும் வியாபாரிகள் அதனை தொடர்ந்து சென்றால்.

         புதிதாக திருமணமான ஜோடி "ஏங்க அந்த சுடிதார் நல்லா இருக்குள்ள எடுத்து தாங்க" உடனே கணவன் உனக்கு எதுக்கு சுடிதார் சாரிதான் உனக்கு நல்லா இருக்கு அதை எடுத்துக்க" உங்களை கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருக்கலாம் என்று நக்கலோடு சொல்வதை  சின்ன சிரிப்போடு ரசித்துக் கொண்டே நகர்ந்தால்.

           வெறும் 500 ரூபாயை வைத்துக்கொண்டு அதற்குள் நல்ல துணி எடுத்துவிட வேண்டும் என்று பல துணிகளை புரட்டிக் கொண்டிருக்கையில் 1000 ரூபாய்க்கு மேல சிம்பிளா எடுத்து போடுங்க என்கின்ற போது 500 ரூபாய் வைத்திருப்பவர் மெல்ல அவரை அன்னாந்து நோக்குவார் முகத்தில் சிறு வருத்தம் தெரியும் அதை காணும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும்.

      அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்தால் " நான் டிவில பார்த்த மாதிரி டிரெஸ் வேணும் என்று அடம்பிடிக்கும் குழந்தையை சமாதனப்படுத்திக் கொண்டிருக்கும் அம்மா இன்னொரு பக்கம் " மெட்டீரியலைவிட ரெடிமேட் நல்லா இருக்குள்ள அதையே வாங்கலாம்" என்ற பேச்சு ஒரு பக்கம் இவை எல்லாவற்றையும் விட துணிகளை எடுத்து எடுத்து போட்டு களைத்துப்போன விற்பனையாளர் "உங்க கலருக்கு சூப்பரா எடுப்பா இருக்கும் கையில எடுத்து பார்த்தா தெரியுமா போட்டு பார்த்தான் தெரியும் எடுங்க நல்லா இருக்கும்" என்று வியாபார தந்திரத்தோடு பேசும் குரல் ஒரு பக்கம். "இந்த டிரெஸ்க்கு மேட்சா கம்மல், கேர்பன்ட் கிளிப், வளையல் வாங்கனும்" என்ற குரல் மறுபக்கம். துணி எடுத்துவிட்டு பணத்தை கைடுக்க கைபைக்குள் கையைவிட்டால் பர்ஸ் காணாமல் அய்யோ.. நகையும் போச்சே பணமும் போச்சே என்று அழுது புரண்டு வரும் குரல் ஒருபக்கம் என்று பல குரல்கள் நம் செவிக்குள் புகுந்து வரும்.

        ஆனால் இந்த முறை துணி எடுக்க பஸ்சில் ஏறினேன் மழையின் காரணமாக கூட்டம் அவ்வாறாக இல்லை பஸ்சைவிட்டு இறங்கியதும் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது அம்மாவை தொலைத்துவிட்டு அழுகிறான் அவனின் பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லவும் என்று காவல்துறை அறிவிப்பு செய்துக் கொண்டு இருந்தது. நல்ல கூட்டம் போல என நினைத்துக்கொண்டே சென்றேன் ஆனால் அவ்வளவாக கூட்டம் இல்லை சாலையோரங்கள் வெறிச்சோடி இருந்தது மழையால் அதிகம் கடைகள் இல்லை பெரிய பெரிய கடைகளில் கூட கூட்டம் இல்லை. இந்த மழையால் நடைபாதை வியாபாரிகளின் வயிற்றில்தான் அடித்துவிட்டது இந்த தீபாவளிக்கு கடன் வாங்கி தான் கடை விரித்திருப்பார்கள் இப்போ நிறைய நஷ்டம் ஏற்பட்டிருக்கும். அதை விற்று தீபாவளி கொண்டாட காத்திருப்பார்கள் அவர்கள் சந்தோஷத்தை கெடுத்து விட்டது இந்த மழை. அவர்கள் இந்த தீபாவளியை எப்படி கொண்டாடி இருப்பார்கள்? சிறு கவலையோடு கடைக்குள் நுழைந்தேன்.

         சென்ற வருடம் போல் அதிகம் கூட்டம் இல்லை அந்த உரையாடல்களை கேட்க முடியவில்லை எதையும் ரசிக்க முடியவில்லை எங்கேயும் எதையும் பார்க்க முடியவில்லை. சென்ற வருடம் இருந்த சந்தோஷம் இந்த வருடம் இல்லை நிறைய பலகாரம், மனதிற்குப் பிடித்த டிரெஸ் எல்லாம் வாங்கியாகி விட்டது ஆனால் எதையோ தொலைத்து விட்ட வருத்தம் அதிகமாக இருந்தது. தீபாவளி தீபாவளி போல் இல்லை யாருக்கும் வாழ்த்து கூட சொல்லவில்லை. அதே இடம், அதே நேரம், அதே மக்கள் ஆனால் காட்சிகள் மட்டும் வேறு வேறு யார் முகத்திலும் சந்தோஷம் இல்லை என் மனம் போல எங்கும் வெறுமையாக இருந்தது. என் கண்களுக்கு மட்டும் அவ்வாறு தெரிந்ததா? இல்லை எல்லாருமே அவ்வாறுதான் இருக்கின்றார்களா?

       எல்லோரும் எதையோ தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.

Thursday 16 October 2014

அதிரசம் செய்வது எப்படி?

       
                                                                                                                                                  தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பலகாரம் தான் அதில் முக்கியமானது முறுக்கும், அதிரசமும் தான். இப்ப நாம் அந்த அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

 தேவையான பொருட்கள்:

 பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ ஏலக்காய் - 7 எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - 50 கிராம்

செய்முறை:

       அரிசியை தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊர வைத்து பின் நன்றாக கழுவி வெயிலில் உலர வைக்கவும். பிறகு அரசியோடு ஏலக்காய் சேர்த்து மிக்ஸி அல்லது மில்லிலோ அரைத்துக் கொள்ளவும்.

        பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தை அதில் போட்டு காய்ச்சவும். இதில் ரொம்ப முக்கியம் வெல்ல பாகுதான் அதை பக்குவமாக காய்ச்ச வேண்டும்.

       பதம் பார்க்க ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி காய்ச்சிய பாகை சிறுதுளி விடவும் கையில் ஒட்டாமல் திரட்டாக வந்தால் அதுதான் பதம். பாகுபதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

       பிறகு காய்ச்சியை பாகை மாவில் கொட்டி கொஞ்சமாக கொஞ்சமாக ஊற்றி கிளறி மூடி வைத்து மறுநாள் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் சிறிது நெய் தடவி ஒவ்வொன்றாக எண்ணையில் போட்டு எடுக்கவும்.

         இப்போது இனிப்பான அதிரசம் ரெடி.

மானதத் தந்தி (Telepathy)

          மனிதனின் பலமான எண்ணங்கள் தலையை ஊடுருவி, மன ஆகாயத்தின் சுற்று வட்டத்தில் அலைக்கழித்துப் பாயும். இந்த மன அலைகள் ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றியதாகயிருந்தால் அறிவுத்தன்மையுள்ள அவ்வலைகள் அவரை நோக்கி நேராகச் சென்று, அவருடைய மனதைத் தாக்கி, எண்ணத்துக்குரிய மனத்திரிபை உண்டாக்க, அதை அம்மனத்துக்குரியவர் ஏதோ எண்ணம் என்ற பெயரில் அறிகிறார். ஆனால் இதற்கு ஒரு நியமம் இருக்க வேண்டும்.

          ஒருவர் மற்றொருவருக்கென மன அலையை அனுப்பும் சமயத்தில் அதைப் பெறவேண்டியவர் வேறு நினைவில் ஆழ்ந்து, இருக்கக்கூடாது பலமான எண்ணம் ஏதுமில்லாமல் இருக்க வேண்டும். பிரிந்து வாழும் காதலர்கள், நண்பர்கள், உறவினர்களிடையே இத்தகைய மானதத்தந்தி பரிமாற்றாங்கள் அடிக்கடி நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. மனதின் மூலமாகச் செய்தியை அனுப்பவும், அறியவும் பழகிய ஒரு நண்பர் உலகில் எவ்வளவு தூரத்தில் வசித்தாலும் ஒருவருக்கொருவர் செய்திகளையும், உருவங்களையும் பரிமாறி கொள்ளமுடியும.

          ஒருவர் தூரத்தில் உள்ள தன் நண்பருக்கு மனதின் மூலம் காட்சிகளை அனுப்ப முடியும். டெலிகிராப், டெலிபோன், போன்றவைகள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையும் சாத்தியமானதுதான் இந்த டெலிபதி (Telepathy). தன் நண்பர் வெளியூர் சென்றாலும் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் சம்மந்தப்பட்ட இரு நண்பர்களும் அறிந்து கொள்ள முடியும். அல்லது நம் மனதுக்குரியவர்களிடம் இருந்து நாம் நினைத்த நேரத்தில் கடிதமோ அல்லது டெலிபோனோ வரும் அதை வைத்தே நாம் புரிந்து கொள்ள முடியும்.

          இந்த விளக்கத்துக்குப் பின் மானதத் தந்தியை பற்றிய ஐயப்பாடு யாருக்கும் இருக்காதாகையால் இதன் உண்மையைப் பரிட்சித்தறிந்து தெரிந்து கொள்ளலாம். மானதத்தந்தி சாதனைக்கு குறைந்தது இருவர் இருக்க வேண்டும் மனதில் ஒரு உருவை, சப்தத்தை, உறுதியாகப் பிடித்து, உணர்வை அதில் நிலைநாட்டச் செய்வதன் மூலம் அதை அப்படியே வெளிமன ஆகாயத்தில் அனுப்பும் பண்பை பெற்றிருக்க வேண்டும்.

          ஒரே வீட்டின் வெவ்வேறு மூலைகளிலும் இருந்து குறித்த நேரத்தில் அவரவர் இடத்தில் அமைதியாக வசதியாக உட்கார்ந்து கொள்ளவேண்டும். முன்பே அனுப்புபவர் இன்னாரென்று அறிபவர் முடிவு செய்திருக்க வேண்டும். அனுப்புபவர் உருத்தையோ, சப்தத்தையோ மணத்தையோ எதை அனுப்பவேண்டுமோ அதைத் தெளிவாக மனதில் நிறுத்தி வைத்து உணர்வை அதில் ஊன்றி, வெளியில் அனுப்ப வேண்டும்.

           அறிபவர் அதே சமயம் எதையும் நினைக்காமல் மனதில் உதிப்பதை அறியும் நிலையில் இருந்து மனதில் உதிப்பவைகளை அறிந்து ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். பலர் சாதகம் செய்வதாயிருந்தால் ஒருவர் அனுப்புபவராகவும, மற்றவர்கள் அறிபவர்களாகவும் இருந்து இதைப் பழகலாம்.

            வாசகர்களே நீங்களும் பரிட்சித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

Wednesday 15 October 2014

பெண்களுக்குக் கரு உண்டாக

      ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும் ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் இம்முறையை உபயோகித்தால் நிச்சயம் பலன் உண்டு.

      வாழை மரத்தின் அடித் தண்டை அறுத்து அதில் குழி செய்து அதில் கொஞ்சம் நவச்சாரம் பொடி செய்து போட்டு அதை நன்றாகப் பாதுகாப்புடன் மூடி காலையில் வாழைத் தண்டில் ஊறிய நீரை எடுத்து ஆண் பெண் இரு பாலரும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சுமார் 2 மாதங்கள் குடித்து வந்தால் நிச்சயமாக குழந்தைச் செல்வம் உண்டாகும்.

Tuesday 14 October 2014

ஈகை

           தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் அது மட்டும்தான் போதும் என்று சொல்லக்க கூடியது மற்ற எது கொடுத்தாலும் போதும் என்று மனம் வராது அதனால்தான் அதை சிறந்த தானம் என்கிறோம். தீபாவளி பண்டிகை வருகிறது அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் அது சிறு தொகையாக இருந்தாலும் அது அவர்களுக்கு பெரிய உதவி. நாம் இன்று 100 ரூபாய் சம்பாதித்தால் அதில் ஒரு ரூபாய் தர்மம் செய்யுங்கள் மனதிற்கு நிறைவாக இருக்கும் 1000 ரூபாய் சம்பாதிப்பவர் தாராளமாக பத்து ரூபாய்
தர்மம் செய்யலாம்.
                                         
         அடுத்தவர்களுக்கு கொடுக்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள் அந்நிலையை கடவுள் நமக்கு வழங்கி இருக்கிறார் என்று சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள். வெறும் பரிதாபம் எந்த பயனும் அளிக்காது அவரவர் தகுதி தகுந்தார்போல் உதவிகளை செய்யதாலே போதுமானது. அதாவதி பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதன்படி நாம் செய்கின்ற உதவி சரியான நபருக்கு சென்றடைய வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். யாருக்கேனும் கொடுத்து பாருங்கள் உண்மையிலே உங்கள் மனதிற்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்.                

          வாழ்க்கையில் நாம் எவ்வளவோ சம்பாதிக்கிறோம் தேவையில்லாத எத்தனையோ செலவுகளை செய்கிறோம் அது ஒரு பயனுள்ள செலவாக இருக்கட்டுமே. நம்மால் ஒரு ஆசிரமம் கட்ட முடியுமா தெரியாது, ஒரு முதியோர் இல்லம் நடத்த முடியுமா தெரியாது ஆனால் அதை பெரிய மனதோடு நடத்துகிறவர்களுக்கு சிறு உதவியாக இருப்போமே இராமருக்கு உதவிய அணில் போல, என்ன சகோதர, சகோதரிகளே யாரேல்லாம் இப்பவே கொடுக்கப்போறிங்க?                                                                                                                    

             அட  கிளம்பியாச்சா... ஈகை குணம் உடையவர் இதை படித்த பின்னர் சும்மா இருப்பார்களா அந்த ஈசனின் ஆசி பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்..!

Sunday 12 October 2014

சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?

சிக்கன் ரோஸ்ட்     தேவையானபொருட்கள்:                                                                                                                                               

கோழிக்கறி எழும்பு நீக்கியது - 1/2
இஞ்சி, பூண்டு - அரைத்தது 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்                                                                                                         மஞ்சள் தூள் - சிறிதளவு                                                                                                  கடலை மாவு - 3 ஸ்பூன்                                                                                                       அரிசி மாவு - 3 ஸ்பூன்                                                                                                         பச்சை மிளகாய் - 2                                                                                                                 பெரிய வெங்காயம் - 2                                                                                                         கறிவேப்பிலை - சிறிதளவு                                                                                                   உப்பு - தேவைக்கேற்ப                                                                                                                     எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்                                                                                                   கலர்பொடி - சிறிதளவு                                                                                                  செய்முறை: 
                                                                                                                                                                                                                                                                                                                                             சிக்கன் இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, மிளகாய்தூள், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு தேவைக்கேற்ப கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும் பின்பு அவைகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிற வெங்காயம் பச்சை மிளாகாய் கறிவேப்பிலை ஆகியவைகளை சிவக்க வதக்கி பொரித்த சிக்கனை அதில் கொட்டி ஒரு புரட்டு புரட்டி எடுத்து எலுமிச்சை சாறு ஊற்றி கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். இப்போது சூப்பரான சிக்கன் ரோஸ்ட் ரெடி.

பெண்களின் உடையில் ஆபாசமா...?

             இந்த ஆபாச உடை எப்படி வந்தது? யாரால் வந்தது? சேலையும், தாவணியும் அணிந்த பெண்கள் இன்று மாடர்ன் துணி அணிவது ஏன்? பெண்களுக்கு நவநாகரிக உடை மீது மோகம் எப்படி வந்தது? சினிமாதானே இன்று அந்த சினிமாத்துறை சார்ந்தவர்களே ஜீன்ஸ் உடை அணிவதால்தான் பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள் பிறகு ஏன் பெண்களுக்கு அரைகுறை ஆடை உடுத்தி நடிகைகளை ஆட வைக்கிறார்கள்?