இன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக்கிறார்களோ அவர்கள் தான் ஹீரோ... அந்த காலக்கட்டம் மாறிவிட்டது. சினிமாவில் நடித்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் அதை வைத்து நிறைய உதவிகள் செய்யலாம். ஆனால் அந்தளவுக்கு யாருக்கும் மனசு இருப்பதில்லை. சில பேர் கொஞ்சம் வசதி இருந்தாலே இல்லாதவங்களுக்கு படிப்போ சாப்பாட்டிற்கோ கஷ்படுறவங்களுக்கு உதவி செய்ய முன் வருகிறார்கள் ஆனால் பணத்தை கட்டி வைத்திருப்பவர்களுக்கு அந்தளவுக்கு மனசில்ல அதனால்தான் சிலர் மீது நமக்கு மிகுந்த கோபம் வருகிறது ஆத்திரம் வருகிறது அவரோடும் இவரோடும் ஒப்பிட்டும் பேசுறோம் திட்டுறோம் இது எல்லாரையும் நாம் சொல்வதில்லை ஒரு சில பிரபலமானவர்களைதான் இதற்கு காரணம் இருக்கிறது. சில கேட்கிறார்கள் அவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சான் அவன் ஏன் மக்களுக்கு கொடுக்கணும்னு கேட்கிறான் நல்ல கேள்விதான் அதே நேரத்தில் அவனைவிட வசதியில் குறைந்தவன் மக்களுக்கு செய்கிறானே அவன் என்ன இளிச்சவாயனா? நமக்கு கேட்கத்தோணுவதில் தவறு இல்லையே..?