எனக்கு விருதா...? எனக்கு விருதா...? சந்தோசத்திலே மிகப்பெரிய சந்தோஷம் கொடுப்பதில் தான் இருக்கிறது ஆனால் அன்பு , பாசம்,பரிசு, பாராட்டு இதெல்லாம் பெறுவதிலும் சந்தோஷம் உண்டு அந்த வகையில் எனக்கு அளித்த (VERSATILE BLOGGER AWARD) இந்த விருதை பெரும் மகிழ்ச்சியோடு ஏற்றுகொள்கிறேன்.
என்னைப் பற்றி
நான் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள துவரங்குறிச்சி நான் பிறந்த ஊர் தாய் , தந்தை,சகோதரி,சகோதரன் என ஐவர் அடங்கியது எனது குடும்பம் அதில் நான் கடைகுட்டிப் பெண். கல்வியில் இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்று மேலும் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் மேலாண்மை இயலில் முதுநிலை பட்டம் பெற்ற (எம்.பி.ஏ ) நான் தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிகிறேன். சிறு வயது முதல் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உண்டும் அதனால் எழுதும் ஆர்வமும் ஒட்டிக்கொண்டது.