ஒரு நாள் திடீர்னு சென்னைக்கும் பக்கத்துல இருக்கிற
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு போகனும்னு தோணுச்சு நாம வழக்கமா அப்படித்தான் கிளம்புவோம். காலையில் 7 மணிக்கு கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு பஸ் ஏறினேன் நான் நினைச்சேன் பக்கத்துலதான் இருக்கும் போயிட்டு சீக்கிரம் வரலாம் னு அப்புறம் தான் தெரியுது அது சென்னையில் இருந்து 60கி.மீ னு அச்சச்சோ இது தெரியாம நாம பாட்டுக்கும் அசால்டா கிளம்பிட்டோமேன்னு உள்ளுக்குள்ள திக்..திக்.