Showing posts with label #அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி. Show all posts
Showing posts with label #அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி. Show all posts

Sunday, 21 September 2014

#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி




            தமிழ் மொழி மீது நாம் பற்று வைப்பது இயற்கை நியதியாகும். அதற்கு மேலே அந்த மொழியை ஒப்பிட்டுப் பார்த்தாலும், தமிழ் ஒரு செம்மொழி என்பது தெரிகிறது. அந்த மொழி மீது வைக்கப்படுகின்றன பற்றின் காரணமாக அந்த மொழி எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற வேண்டுமென்று விரும்புகிறோம். ஏற்றத்திற்கு தடையாக ஏதேனும் வருமானால் நம்மையும் அறியாமல் உள்ளம் கொதிப்படைகிறது. 

           கண்ணுக்கு மையிடுவது போல, பிறமொழிகளைப் பயன்படுத்த வேண்டும். மை அதிகமானால் கண் எப்படிக் கரித்துவிடுகிறதோ, அதுபோல பிறமொழிகள் அதிகம் கலப்பதும் ஆபத்தான நிலையை உண்டாக்கும்.