Tuesday 31 March 2015

இன்றைய கல்வி முறை

         இன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதில்லை இது ஒரு காரணம். அதோடு, மாணவர்களைக் தண்டிக்கூடாது கண்டிக்கக் கூடாது என்று கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தது அரசு. அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இல்லை.

              ஏனெனில் அது படிக்காத மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரியரைக் கண்டால் மரியாதையும், பயமும் இல்லாமலே போய்விட்டது அப்படி இருக்கும் போது படிக்க வேண்டும் என்ற அக்கறை மாணவர்களுக்கு எப்படி வரும்? முன்பு ஆசிரியரைக் கண்டால் மதிப்பும், மரியாதையும் தானாக வரும் அதனால் படிப்பும் இயல்பாக வந்தது. முன்பு எத்தனைக் கஷ்டப்பட்டு படித்தாலும் மார்க் என்பது எட்டாக் கனியாக இருந்தது 10 வகுப்பில் பள்ளியில் 300 மார்க் எடுத்தால் பொதுத்தேர்வில் 250 அல்லது 200 தான் வரும் ஆனால் இன்று அரையாண்டு தேர்வில் இரண்டு மூன்று பாடங்களில் தோல்வியுற்ற மாணவன் 400 மார்க் வாங்குகிறான் எப்படி?

Sunday 29 March 2015

தஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி

             நாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதிரி வரலையே கல்யாண வீட்டு சாம்பார் மாதிரி வரலையேன்னு இதை செய்துப் பாருங்கள் அந்த டேஸ்ட் கிடைக்கும்.


தேவையான பொருட்கள்: 

 துவரம்பருப்பு - 100 கிராம்
 பாசிப்பருப்பு - 100 கிராம் 
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகு - 1ஸ்பூன்
 உருளைக்கிழங்கு - 1
 கத்தரிக்காய் - 1
 கேரட் - 1 
கொத்தமல்லி தழை - சிறிது
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 பெருங்காயம் - சிறிதளவு
கடுகு உளுத்தம்பருப்பு- சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
சர்க்கரை - 1 ஸ்பூன்

வறுத்து அரைக்க

மல்லி - 1 ஸ்பூன்
 கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 ஸ்பூன்
 சீரகம் - 1 ஸ்பூன்

Thursday 26 March 2015

கல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..?


                பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட்டுகின்றனர். இது மதிப்பிற்குரிய பெண் மணிகளுக்கு பெருமை சேர்ப்பது வரவேற்க தக்க விடயம். ஆனால்,

                 இப்போது பரவலாக பத்திரிக்கைகளில் காணக்கூடிய செய்தி கல்லூரி பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள் என்பதுதான். செய்திகளை படிக்கும் போதே சுள்ளென்று தலைக்கு ஏறுகிறது கோபம். பெண்களை கிண்டல், கேலி செய்பவர்களையும், பாலியல் வன்முறைகளை செய்பவர்களையும் வன்மையாக கண்டித்து சமூக நல அமைப்புகள், மாதர் சங்கங்கள் போராட்டங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பெண்களே தானாக முன்வந்து விபச்சாரம் செய்வது வன்மையாக கண்டிக்க தக்கது.

Wednesday 25 March 2015

சிவனே உனைத் தேடி வந்தேன்

சிவனே உனைத் தேடிவந்தேன்
சிங்கார நாயகனே உனைக் காணவந்தேன்
அன்பான தெய்வமே ஆதி சிவனே
 மனமிறங்கி வா.. வா.. என் ஈசனே
பாவம் போக்க உன் பாதம் தொடவந்தேன்
பாவி எனை ஆட்கொள்வாய் சிவனே

தஞ்சாவூர் சமையல் / பால் பாயசம்

           பால்பாயசம் எல்லோரும் ஒரு மாதிரி செய்வார்கள் நான் கொஞ்சம் வேறு மாதிரி செய்வேன் ரொம்ப ருசியா இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.


தேவையான பொருட்கள்:  

பசும் பால் - 1/2 லிட்டர்
 ஜவ்வரிசி - 100 கிராம்
 சேமியா - ஒடித்தது ஒரு கையளவு
பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
முந்திரி திராட்சை - 25 கிராம்
ஏலக்காய் - 5 
சர்க்கரை - 1 டம்ளர் (அ) 11/2
குங்குமப்பூ - சிறிது
 பாதாம் - 4-5

Friday 20 March 2015

தஞ்சாவூர் சமையல்/ பொரிச்சக் குழம்பு

தேவையான பொருட்கள்:

 உருளைக்கிழங்கு - 2 
முருங்கைக்காய் - 1
 தக்காளி - 2
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 தேங்காய் - 1 மூடி
 மிளகாய்த்தூள் - 3/4 கரண்டி
 மல்லித்தூள் - 1 கரண்டி 
சோம்பு - 1 ஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப 
உப்பு - சிறிது

Thursday 19 March 2015

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

           
              இணைய தளங்களிலும், காகிதங்களிலும் காணக்கூடிய செய்தி. செல்போன் டவரால் சிட்டுக்குருவி இனமே அழிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அறிவியல் சார்ந்தவர்கள் ஆராய்ந்து சொல்கிறார்கள் கவிஞர்கள் காகிதத்தில் சொல்கிறார்கள். இது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும் சிட்டுக்குருவி அழிந்ததற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.

Wednesday 18 March 2015

இந்த வார (மார்ச் 20-26) பாக்யாவில் என் கவிதை

இந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை...! பாக்யா இதழ் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்..!

Sunday 15 March 2015

மனமும் தெய்வ ஞானமும்

         மனம் என்பது தனி மனிதனின் மனமாகப் பலகாலம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. "இது என் உடல், இது அவன் உடல் " என்று சொல்லும் போது உடலின் வேறுபாட்டைக் குறிக்கிறது. ஆனால் இந்த வேறுபாடுகளைக் கொண்ட உடல்கள் எல்லாமே உணவால் சமைந்தவைதான் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் இது உன் மனம், இது அவன் மனம், இது நல்ல மனம், இது கெட்ட மனம் என்றெல்லாம் தனி மனிதனின் மனத்தைப்பற்றிச் சொன்னாலும் எல்லா மனங்களும் வெளியாகாயத்திலிருந்து பெறப்பட்ட மனம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்சம் முழுவதும் மன ஆகாயம் பரவியிருக்கிறது என்பதை நீங்கள் இப்படி நம்பலாம். பூமிக்கு பலகோடி மேல்களுக்கு அப்பால் இருக்கும் சூரியனின் ஒளியை பூமிக்கு கொண்டுவர இடையில் ஒளியாகாயம் இருக்க வேண்டும். ஒளிகளின் மின்காந்த அலைகளை உலக முழுவதும் பரவச் செய்ய ஆகாயப்பரப்பில் மின் காந்த ஆகாயம் இருக்க வேண்டும் என்பது போல், மனத்தின் அலைகளைத் தாங்கிச் செல்ல ஏதுவாக மன ஆகாயமும் இருக்க வேண்டும் என்பதை நாம் நம்பலாம். அதுமட்டுமல்ல இன்று உலகில் மிக அதிக ஆண், பெண்களால் பயன்படுத்தப்படும் மானதத்தந்தி(Telepathy) என்ற கலை, வெளி ஆகாயத்தில் மனம் பரவியிருக்கிறது என்பதை உறுதிப்படுகிறது.

Saturday 14 March 2015

டாப்பு டூப்பு சினிமா செய்திகள்

              ஒரு சினிமா எடுப்பது என்பது மிக கடினமான வேலை. அப்பப்பா... பல குழுக்கள் ஒருங்கினைந்து கஷ்டப்பட்டு எடுப்பதுதான் சினிமா. அந்த படம் ஒடுவதும் ஒடாமல் இருப்பதும் கதையை பொறுத்துதான் அமைகிறு. ஆனால், சில பெரிய பெரிய நடிகர்கள் நடித்த படங்களை படம் வருவதற்கு முன் இவர் அப்படி நடித்திருக்கிறார் அவர் இப்படி நடித்திருக்கிறார் அப்டி இப்படி என்று டிவிலும், பத்திரிக்கையிலும் விளம்பரம் வரிசைக் கட்டி வாசிக்கிறது. அதே போல் படம் வெளிவந்ததும் நடிகரோடு படம் குழுவினர் பேட்டி கொடுப்பார்கள் பாருங்கள். படம் செம்மையா போகுது... 2 நாட்களில் 15 கோடியை தாண்டியது 30 கோடியை தாண்டியது என சொல்கிறார்கள்.

Thursday 12 March 2015

சமையல்/ கோதுமை வடை

          டயட்டில் இருப்பவர்கள் இந்த கோதுமை வடையை செய்து சாப்பிடலாம். நொறுக்குத் தீணி சாப்பிட முடியலையேன்னு இனி கவலைப்பட வேண்டாம்.

 தேவையான பொருட்கள்:

முழு கோதுமை அல்லது
கோதுமை ரவை - 1 கப்
 கோதுமை மாவு - 1 கப்
 சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2 
சோம்பு - சிறிது 
கறிவேப்பிலை - சிறிது
 பூண்டு - 4 பல் 
உப்பு - தேவைக்கேற்ப
 எண்ணெய் - தேவைக்கேற்ப

Tuesday 10 March 2015

காதல்

வாராந்திர ராணி இதழில் வெளிவந்த எனது கவிதை. 

Sunday 8 March 2015

தஞ்சாவூர் சமையல் / எண்ணெய் கத்தரிக்காய் பொறியல்

தேவையான பொருட்கள்: 

கத்தரிக்காய் - 2
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 1
கடுகு உளுத்தம்பருப்பு - சிறிது
மிளகாய்த்தூள் - சிறிது
உப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் துறுவல் - சிறிது
எண்ணெய் - சிறிது

Saturday 7 March 2015

மகளீர் தினம்

           இன்று சர்வதேச மகளீர் தினமாம் டிவி, பத்திரிக்கை, மற்றும் அனேக இடங்களில் பேசுகிறார்கள். ஆண்கள் பெண்களை புரிந்துக் கொண்டு பெருமைப்படுத்துகின்ற தினம் அப்படிதானே? இன்று எத்தனை ஆண்கள் பெண்களைப் புரிந்துக்கொண்டார்கள்? எத்தனை ஆண்கள் பெண்களுக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்கள்? கேள்வி குறியாகதான் இருக்கிறது.

Friday 6 March 2015

கவிதை நயமும் கிராமத்து இசையும்

            "உள்ளத்து உள்ளது கவிதை இன் உருவெடுப்பது கவிதை"

           இது கவிமணியின் வாக்கு ஏட்டிலக்கியம் நாட்டுப்புற இலக்கியம் ஆகிய இரண்டிற்கும் ஒப்பிப்பொருந்தும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகிய நான்கினையும் கூறுவர். இந்நான்கும் ஓரளவு ஒப்ப அமையும் போது சிறிய கவிதை என்பது அவர்தம் கருத்து.

         இதனையே நன்னூல் ஆசிரியர் பவனந்தியார் இப்படி கூறுகிறார்.

 "பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போல்பல சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின் வல்லோர் ஆணிபெறச் செய்வன செய்யுள்"

துவரங்குறிச்சி சிவ ஆலயம்

          தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகே 7 கி.மீ தொலைவில் துவரங்குறிச்சி எனும் ஊரில் பழுதடைந்த சிவாலயம் ஒன்று இருக்கிறது. மூன்று தினங்களுக்கு முன்பு பிரதோஷம் அன்று முதல் முறையாகச் சென்றேன். கோவிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் நமது வீடு ஒன்று இடிந்த நிலையில் கிடந்தால் என்ன ஒரு உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு எனக்குள் வந்தது.