Showing posts with label ஜென் தத்துவ கதை. Show all posts
Showing posts with label ஜென் தத்துவ கதை. Show all posts

Tuesday, 24 November 2015

நம்பிக்கை

            ஒரு முனிவரின் ஆசிரமத்தில் அழகான நந்தவனம் ஒன்று இருந்தது. அந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி கடவுள் வந்து போவார். அப்படி வரும்போதெல்லாம் நந்தவனத்திற்கு சென்று அங்குள்ள மலர்களைக் கண்டு ரசித்து செல்வார். அப்படி வரும்போதெல்லாம் ஒரு செடியைப் பார்த்து "இது ரொம்ப அழகா இருக்கிறதே" என்று சொல்லிவிட்டு போவார். இதைக் கேட்ட அந்த செடிக்கு ரொம்ப சந்தோஷம். கடவுளின் மீது அதீத அன்பு ஏற்பட்டது அந்த சந்தோஷத்தில் அதிக மலர்களைத் தந்தது. இப்படி ஒவ்வொரு நாளும் நடந்தது. சில நாட்களுக்குப் பிறகு கடவுள் வேற செடிகளைக் கண்டு ரசித்து அவைகளோடு பேசினார். இதைக் கண்ட அந்த செடி ரொம்ப வருத்தப்பட்டது. நாளுக்கு நாள் மனம் நொந்து வாடிபோனது.