Wednesday 14 November 2018

ஜுரம் , தலைவலி, உடம்பு வலிக்கு சிறந்த மருந்து

ஜுரம், தலைவலி, உடம்பு கை கால் மூட்டு வலிக்கு சிறந்த  பெருமருத்து ரசம்....

தேவையான பொருட்கள் :

கண்டதுப்பிலி - சிறிது
சதகுப்பை - சிறிது
அரத்தை - சிறிது
சீரகம் - சிறிது
மிளகு - சிறிது
முழு பூண்டு - 1
தக்காளி -  2
பச்சைமிளகாய் - 4
மஞ்சள் - சிறிது
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேசையான அளவு
புளி - சிறிது

(இதோடு மொழிக்கிழங்கு வேரையும் சேர்த்து இருக்கேன் அது கிடைக்காதவர்கள் மற்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்)

Friday 3 August 2018

வாழ்க்கையின் தத்துவம்

இட்லியை சாப்பிடும் போது...

ஒருவர் :      "இந்த இட்லிய கொஞ்சம் சின்னதா ஊத்தி இருந்தால் 2 இட்லி கூட சாப்பிடலாம் இவ்வளவு பெரிசாவா ஊத்துறது... "

மற்றொருவர் : "இட்லிய இன்னும் கொஞ்சம் பெரிசா ஊத்தி இருக்கலாம் 2 சாப்பிட்டாலும் கம்முன்னு இருக்கும்... "

Monday 30 July 2018

காலனை வென்ற கலைஞர் மற்றுமொரு மார்க்கண்டேயன்

இப்போது வருகின்ற பதிவுகள் பார்க்கும் போது கலைஞரை திட்டித்தான் வருகிறது. என்ன காரணம் சொல்லி திட்டுகிறார்கள் தெரியுமா? அவருக்கு மூன்று மனைவிகள், ஊருக்கு ஒரு பொண்டாட்டி, 2g ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை இந்த மூன்றுதான் அவருடைய பெருங்குற்றமாக கருதப்படுகிறது.

மூன்று மனைவிகள் :

இவருக்கு மூன்று மனைவிகள் தவறதுதான் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கையோடு வாழாமல் மூன்று மனைவிகளை திருமணம் செய்தது தவறுதான். ஆனால் இன்று எத்தனை ஆண்கள் ஒரு மனைவியோடு மட்டும் வாழ்கிறார்கள் பிற பெண்களை அக்காவாகவும், தங்கையாகவும் எத்தனை ஜென்மங்கள் பார்க்கின்றார்கள்? அப்படி நினைத்திருந்தால் ஊருக்குள் ஏன் பாலியல் குற்றங்கள் நடக்குது?

Saturday 21 July 2018

சிகப்பி

காலை மணி 9 ஆடி வெள்ளி என்பதால் நான் சாமி படங்களை துடைத்துக்கொண்டு இருந்தேன் வெளியே ஏதோ சத்தம் கேட்டது படங்களை அப்படியே போட்டுவிட்டு வெளியே ஓடிபோய் பார்த்தால். சிகப்பி பாதி தென்னை மரம் உயரத்திற்கு பறந்து போய்கொண்டு இருந்தாள். ஆஹா குஞ்சை பருந்து தூக்கிவிட்டதா என்று என் கண்கள் அங்குமிங்கும் தேடியது ஆனால் ஒன்றும் என் கண்ணில் சிக்கவில்லை.. சிறிது நேரத்தில் கலவரமுகத்துடன் சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள் சிகப்பி. சிகப்பி நான் வளர்க்கும் கோழி, அவள் நாலு குஞ்சுகளுக்கு தாய் ஏழு குஞ்சுகளை பொரித்தாள் மூன்று இறந்து போனது. தற்போது நாலு குஞ்சுகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறாள். அவள் பெரும் கோவக்காரி முட்டை அடை வைக்கும் வரை என்னை சுத்தி வருவாள் அடைகாத்து குஞ்சு பொரித்துவிட்டால் பத்திரகாளியாக மாறி கொத்தி விடுவாள் வளர்க்கும் என்னையே அவள் விட்டு வைப்பத்தில் என்றால் கூட வளரும் கோழி, நாய்களை சும்மா விடுவாளா ராட்ஷியாக பிடிங்கி எடுத்துவிடுவாள்.

Wednesday 18 July 2018

ஆயுதம் ஏந்துவோம்

பெண்கள் இரவில் தனியாக செல்ல வேண்டாம்

முகநூலில் புகைப்படம் வைக்க வேண்டாம்

தெரியாத ஆண்களோடு பேச வேண்டாம்

உங்களுடைய சுய விவரங்களை தெரியாத நபர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்

வெளியில் செல்லும் போது நகைகள் அணிய வேண்டாம்

Tuesday 12 June 2018

யார் தமிழன்?

          இன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக்கிறார்களோ அவர்கள் தான் ஹீரோ... அந்த காலக்கட்டம் மாறிவிட்டது. சினிமாவில் நடித்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் அதை வைத்து நிறைய உதவிகள் செய்யலாம். ஆனால் அந்தளவுக்கு யாருக்கும் மனசு இருப்பதில்லை. சில பேர் கொஞ்சம் வசதி இருந்தாலே இல்லாதவங்களுக்கு படிப்போ சாப்பாட்டிற்கோ கஷ்படுறவங்களுக்கு உதவி செய்ய முன் வருகிறார்கள் ஆனால் பணத்தை கட்டி வைத்திருப்பவர்களுக்கு அந்தளவுக்கு மனசில்ல அதனால்தான் சிலர் மீது நமக்கு மிகுந்த கோபம் வருகிறது ஆத்திரம் வருகிறது அவரோடும் இவரோடும் ஒப்பிட்டும் பேசுறோம் திட்டுறோம் இது எல்லாரையும் நாம் சொல்வதில்லை ஒரு சில பிரபலமானவர்களைதான் இதற்கு காரணம் இருக்கிறது. சில கேட்கிறார்கள் அவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சான் அவன் ஏன் மக்களுக்கு கொடுக்கணும்னு கேட்கிறான் நல்ல கேள்விதான் அதே நேரத்தில் அவனைவிட வசதியில் குறைந்தவன் மக்களுக்கு செய்கிறானே அவன் என்ன இளிச்சவாயனா? நமக்கு கேட்கத்தோணுவதில் தவறு இல்லையே..?

Tuesday 10 April 2018

செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல்


இனிமையான எல். ஆர். ஈஸ்வரி பாடல் கேட்க வேண்டுமா கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

வளையோசை கலகலகலவென பாடல்


வளையோசை கலகலகலவென இந்த பாடல் கேட்க வேண்டுமா கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

Monday 9 April 2018

காவிரி மேலாண்மை வாரியமும் மவுன விரதமும்

ஒரு ப்ளாட் பாராத்தில தள்ளு வண்டியில சாப்பாட்டுக்கடை வைச்சிருக்கிறவன் சாப்பிடலாம்னு உட்கார்ந்தா பசிக்கு சாப்பிட சாப்பாடு இருக்காது கடைசி பருக்கையை கூட காசாக்க நினைச்சு கொடுத்திருவான். ஆறு மாசம் இரவு பகலா கஷ்டப்பட்டு நிலத்தை உழுது உரம் போட்டு மண்ணை பதப்படுத்தி விதையிட்டு பயிராக்கி அதை பிரிச்சு வேற இடத்தில நட்டு காத்திருந்தா அது வளர தண்ணி இருக்காது ஆத்துல தண்ணி வரும்னு காத்திருந்தா அது வராது அப்புறம் கடனை உடனை வாங்கி போர் போட்டு தண்ணி பாச்சி கதிர் அறுத்து வீட்டுக்கு கூட கொண்டு வராம களத்து மேட்டுலேயே விலை பேசி வித்துட்டு அந்த விவசாயி களைச்சி போயி ரேஷன் கடையில் புழுத்த அரிசியில் பழைய கஞ்சி குடிக்கிறவன் விவசாயி.

நான் பூவெடுத்து song

நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால இந்த பாடலை கேட்க கீழே உள்ளே இணைப்பை சொடுக்கவும்


Saturday 7 April 2018

Tuesday 20 March 2018

பள்ளிப் பருவத்திலே / குறுநாவல்

(வணக்கம் இதனால் வரை தொடராக எழுதி வந்த பள்ளிப் பருவத்திலே சிறுகதையை இணைத்து குறுநாவலாக  மாற்றியிருக்கிறேன் நன்றி)


            சுதா சில வருடங்களுக்கு பிறகு அவளது பள்ளித்தோழியான கலா வீட்டிற்கு இப்போதுதான் முதல் முறையாக செல்கிறாள் . கலா எத்தனையோ முறை அழைத்தும் சுதா போகவில்லை இன்றும் அவள் போயிருக்க மாட்டாள் சென்னையில் ஒரு வேலை விஷயமாக சென்றதால் அப்படியே அவளை பார்க்கலாமே என்று செல்கிறாள். கலாவிடம் ஏற்கனவே தான் வருவதாக சொல்லியிருந்தாள். ஒருவழியாக சென்னை வந்து இறங்கியதும் ஒரு ஆட்டோ பிடித்து அட்ரஸ் சொல்லிவிட்டு இப்போது கலா நம்மை எப்படி ரிசிவ் செய்யும் அதே போன்று இருக்குமா?  இல்லை வேறு விதமாக இருக்குமா என யோசித்தபடி இருந்தாள் சிறிது தூரம் வந்ததும் இந்த ஏரியா தானே என மெல்ல ஆட்டோவுக்கு வெளியே தலையை நீட்டி எட்டிப்பார்த்தாள் கொஞ்ச தூரத்தில் கலா நின்றுக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு ஆட்டோகாரரிடம் அதோ அந்த ஹேட்டுக்கு முன்னாடி நிப்பாட்டுங்க என்றாள். ஆட்டோவும் அங்கே ஓரங்கட்டியது அவர் கேட்ட ஐம்பதை திணித்துவிட்டு ஆட்டோவை விட்டு இறங்கினாள் சுதா.

              கலா வாயெல்லாம் பல்லாக "வா..வா.. இப்பதான் உனக்கு வர்றதுக்கு வழி தெரியுதா ஒரு போன் இல்ல ஒன்னும் இல்ல நானா பேசினாதான் உண்டு எம்புள்ளைங்க ரெண்டும் டெய்லி கேட்கும் என்னம்மா ப்ரண்டு ப்ரண்டுன்னு சொல்வே ஒரு போன் கூட பேசுறாங்க இல்லன்னு நான் அவங்களுக்கு ஏதாவது சொல்லி சமாளிப்பேன் " என்றபடி மூச்சுவாங்க மேலே கூட்டிச்சென்றாள் கலா.. பத்து பதினைஞ்சு குடித்தனம் இருக்கும் அபார்ட்மென்ட் வரிசையாக வீடு அதில் ஒரு வீட்டின் முன் நின்று செப்பலை இங்கேயே கழட்டி போடு வீட்டுல பூஜையறை தனியா இல்ல ஹால்தான் வைச்சுருக்கோம்  அதான் நாங்க உள்ள போடுறதுல்ல என்றபடி உள்ளே சென்றாள் கலா. சுதா அவள் பின்னே ஒன்றும் பேசாமல் சென்று கொண்டு வந்த பேக்கையும், வாங்கிட்டு வந்த பழங்களையும் அங்கே வைத்துவிட்டு நிமிர்ந்தவள் வீட்டை கண்களாலே அளந்தாள் சின்னதா ஒரு ஹால், அதையொட்டி ஒரு பெட்ரூம்,அதையொட்டி ஒரு ரூம் அதன் அருகே பாத்ரூம் அதன் அருகிலே சின்னதாய் ஒரு கிச்சன். இதையெல்லாம் பார்த்தபடி நின்றவளின் கையில் இந்த தண்ணிய குடி என்று சொம்பை திணித்தாள் கலா.

Monday 19 March 2018

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள் (சிறுகதை)

       

           "அம்மா... அம்மா... " என்று அழைத்தபடி அங்கிருந்த ஷேரில் அமர்ந்தான் கண்ணன்.

       "என்ன சொல்லு எனக்கு வேலையிருக்கு" என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் கண்ணனின் அம்மா ராசாத்தி.

       "எங்க கலேஜ்ல படிக்கிற ரமேஷ் அக்காவுக்கு மேரேஜ் என்னை கூப்பிட்டுருக்கான் நானும் போகனும்மா..." என்றான் மெல்ல.

        "யாருடா அது அன்னைக்கு போன்ல பேசினானே அவனா?"


        "இல்லம்மா இவன் வேற என்னம்மா நான் போகட்டுமா..."

Wednesday 7 March 2018

பள்ளிப்பருவத்திலே 4

       

            நட்பென்று வந்து விட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய தூண்டு் இல்லையா என்னதான் நம் உறவுகள் இருந்தாலும் நண்பர்கள் கூட பேசுவது, அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பது, அவர்களுக்காக காத்திருப்பது வரவில்லை என்றால் கோபப்படுவது, சண்டை போடுவது, கொஞ்ச நேரம் பேசாமல் இருப்பது பிறகு எதுவுமே நடக்காதது போல் பேசுவது இது எல்லாமே நட்பில் மட்டும்தான் முடியும். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை எல்லா உறவுமே நட்பில் மொத்தமாக ஒருவரிடம் அடங்கிவிடுகிறது அதனால்தான் ஒவ்வொருக்கும் நட்பென்றால் ஒரு தனி பிரியம் ஏற்படுகிறதோ என்னவோ. கலா சுதாவை விட்டு பிரிந்த பிறகு வள்ளி மட்டுமே சுதாவின் இதயத்தில் முழுமையாக இடம் பிடித்திருந்தாள். வள்ளிக்கா என்ன வேண்டுமென்றாலும் செய்ய காத்திருந்தாள். சமையலில் தொடங்கி டிரெஸ் வரை அவளுக்காக பார்த்து பார்த்து செய்து அழகு பார்த்தாள் சுதா.

Friday 2 March 2018

பிஞ்சிலே பழுத்த பழம் (3)

                                                    -தொடர்ச்சி
           



               சிறுவயதில் காதல் என்பது ஒரு இன கவர்ச்சியே அது அத்தனை பக்குவபடாதது. எப்போதும் அது வாழ்க்கைக்கு ஒத்து வராது இன்றைய பிள்ளைகள் அதை மறுக்கிறார்கள் நல்லா உல்லாசமாக சுத்துகிறார்கள் தியேட்டர், பீச் என்று இரவில் செல்கிறார்கள் கேட்டால் பாய் பிரண்ட் தட்ஸ்ஆல் னு சொல்லிட்டு போறாங்க இன்னொரு பக்கம் வீட்டில் பார்க்கின்ற பையனையோ பெண்ணையோ கல்யாணம் செய்து விட்டு எல்லாவற்றையும் மறந்து விட்டு போய்விடுகிறார்கள் இதுதான் இன்றைய உண்மையான காதல். இப்படிதான் கண்ணனுக்கும் நிர்மலாவுக்கும் காதல் காட்டுத் தீ போல் படர்ந்தது சைவமாக இருந்த காதல் அசைவாக மாறியது.

Tuesday 20 February 2018

பள்ளிப் பருவத்திலே (3)

                 மறுநாள் வழக்கம் போல் கிளாஸ்சுக்கு சுதா கிளம்பிக்கொண்டிருந்தாள். கலா அம்மா  வந்து சொன்னார் "சுதா இன்னைக்கு அவ வரலையாம் நாளைக்கு வர்றேன்னு சொன்னாள் நீ பொயிட்டு வந்திருது அவ என்னமோ எதையோ பறிக்கொடுத்த மாதரி உம்னு அடைச்சு போயி இருக்கா இராத்திரி அவா அப்பா கூட என்னவோ கேட்டுப்பார்த்தார் ம்கூம்.. அவ அசரலையே ... " என்றார்.

Saturday 17 February 2018

விரிசல்

நான் போகிறேன்
மெல்ல மெல்ல
உன்னை விட்டு..!

Tuesday 30 January 2018

பள்ளிப் பருவத்திலே( 2)

            நட்பும் காதலும் கிட்டதட்ட ஒன்றுதான் காதலில் எப்படி பிரிவு , பரிவு, துன்பம்,இன்பம், அன்பு பாசம் எதிர்பார்ப்பு, ஏக்கம், சண்டை, கொஞ்சல் கெஞ்சல் இருக்கிறதோ அது எல்லாமே நட்பிலும் உண்டு ஆனால் இரண்டிற்கும் ஒரே ஒரு நூழிலை  வித்தியாசம் தான் காதலில் அசைவம் உண்டு நட்பில் அது இல்லை அதனால்தான் அது புனிதமாக சொல்லப்படுகிறது. உறவுகளைவிட உயர்வாக கருதப்படுகிறது கணவன் மனைவிக்குள் உறவு இல்லையெனில் விவாகரத்து வாங்க உரிமை உண்டென்று அரசு சொல்கிறது அதற்கு சட்டத்திலும் இடமுண்டு கண்வனையும் மனைவியையும்  இணைப்பது உறவு அது இல்லை என்றால் தனித்தனியே பிரிந்து போகிறார்கள் ஏனெனில் அதுதான் வாழ்க்கை என்கிறார்கள் ஆனால் நட்பில் அப்படி பந்தம் இல்லை என்றாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறதே எப்படி அதற்கு பெயர் தான் நட்பு. இவையெல்லாம் உணர்ந்தவர்களால் மட்டுமே நட்பை வளர்க்க முடியும். ஆனால் ஆழமான நட்பில் பொறாமை வந்துவிட்டால் அதை விட கொடுமை எதுவுமே இல்லை. இவர்கள் நட்பிலும் அது வந்தது சுதாவுக்கும் கலாவுக்கு இடையிடையே ஆயிரம் சண்டைகள் வந்தாலும் கொஞ்ச நேரத்தில் சமாதானம் ஆகிவிடும் இவர்கள் இருவருக்கும் நடுவில் யாரும் வரதா வரை. ஆனால் இவர்கள் இடையில் புதிதாக ஒரு பெண் வந்தாள். இவர்கள் வீட்டிற்கு அருகிலே ஒரு ஹாஸ்பிட்டல் இருந்தது அங்கே புதிதாக ஒரு நர்ஸ் வந்தாள். பெயர் வள்ளி ஒல்லியான தேகம், நல்ல கருப்பு ஆனால் கலையான முகம் அதற்கு தகுந்தார் போல் கலகலவென பேச்சு சுதாவுக்கு பார்த்த உடனே அவரை ரொம்ப பிடித்து போனது தன் கூட பேசாத ஒரு ஆளைவிட கலகலவென ஒரு ஆள் பேசுவதை கேட்டதும் பிடித்து போனதோ என்னவோ இது கலாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனெனில் சுதாவிடம் பேசுவதற்காகதான் கலா அவள் வீட்டிற்கே வருகிறாள் அந்த நேரத்தில் வள்ளியும் வந்து பேசிக்கொண்டு இருப்பது பிடிக்கவில்லை அது உள்ளுக்குள்ளே பொறாமையை வளர்த்தது.

Saturday 27 January 2018

பள்ளிப்பருவத்திலே (சிறுகதை)

                          
                 சுதா சில வருடங்களுக்கு பிறகு அவளது பள்ளித்தோழியான கலா வீட்டிற்கு இப்போதுதான் முதல் முறையாக செல்கிறாள் . கலா எத்தனையோ முறை அழைத்தும் சுதா போகவில்லை இன்றும் அவள் போயிருக்க மாட்டாள் சென்னையில் ஒரு வேலை விஷயமாக சென்றதால் அப்படியே அவளை பார்க்கலாமே என்று செல்கிறாள். கலாவிடம் ஏற்கனவே தான் வருவதாக சொல்லியிருந்தாள். ஒருவழியாக சென்னை வந்து இறங்கியதும் ஒரு ஆட்டோ பிடித்து அட்ரஸ் சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தவள் கலா நம்மை எப்படி ரிசிவ் செய்யும் அதே போன்று இருக்குமா?  இல்லை வேறு விதமாக இருக்குமா என யோசித்தபடி இருந்தாள் சிறிது தூரம் வந்ததும் இந்த ஏரியா தானே என மெல்ல ஆட்டோவுக்கு வெளியே தலையை நீட்டி எட்டிப்பார்த்தாள் கொஞ்ச தூரத்தில் கலா நின்றுக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு ஆட்டோகாரரிடம் அதோ அந்த ஹேட்டுக்கு முன்னாடி நிப்பாட்டுங்க என்றாள். ஆட்டோவும் அங்கே ஓரங்கட்டியது அவர் கேட்ட ஐம்பதை திணித்துவிட்டு ஆட்டோவை விட்டு இறங்கினாள் சுதா.

Wednesday 24 January 2018

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சமர்ப்பணம்

உண்மையில் மனம் மகிழ்ந்து இந்த பதிவை இடுகிறேன்... வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களைப் பார்த்து முதலில் நாம் வெட்கப்பட வேண்டும் ஏன் தெரியுமா? முன்னாடி நாம சொல்வோம் இங்கே படித்துவிட்டு வெளிநாட்டில் போய் வசிக்கிறான் வெளிநாட்டில் போய் வசிக்கிறான்னு ஆனால் இன்றைக்கு வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் சாதி்த்ததை தமிழ்நாட்டில் இருக்கும் நாம்மால் ஒன்றையும் அசைக்க கூட முடியல இதான் உண்மை. மலேசியா, சிங்கப்பூர் கனடா, இலங்கை, ஆஸ்திரேலியா இங்கெல்லாம் தமிழன் போய் வசித்தான் அங்கெல்லாம் இன்று தமிழ் தலை நிமிர்ந்து வாழ்கிறது. இங்கிருந்து போன ஒவ்வொரு தமிழனும் பச்சை தமிழன் அதனால் போன இடத்தில் தன் இனத்திற்காக தன் மொழிக்காக போராடி வெளிநாட்டிலே இன்று தனக்கென்று ஒரு இடம் பிடித்து அமர்ந்திருக்கிறான். ஆனால் நாம் தமிழ்நாட்டிலே பிறந்து இங்கேயே வளர்ந்து, இங்கேயே படித்து ஒரு பயனும் இல்லையே...