Friday 20 May 2016

தடாகம்

அல்லி தடாகம்
ஆளில்லாத நந்தவனம் போல்
வெறுமையாக...!

காற்று வாங்க போனேன்

கடற்கரை மணலில்
காலார நடந்து சென்று
ஓரிடம் பிடித்தமர்ந்தேன்
பால் போல் பொங்கி வந்த
கடலன்னை நான் இருக்கும்
இடம் நோக்கி மெல்ல வந்து
என் கால்களை வருடி போனாள்
நான் மெய்சிலிர்த்து போனேன்...!

Friday 6 May 2016

இன்றைய கல்வியின் தரம் என்ன?

இன்றைய கல்வியின் தரம் என்ன?

            பக்கத்து வீட்டு பெண் +2 exam English (I)  paper எழுதிவிட்டு வந்துச்சு "என்னப்பா exam easy யா..? என்றேன்.  கொஞ்சம் கஷ்டம் அக்கா நான் படிச்ச essay வரல second lesson இருந்து வந்திருக்கு எங்க மிஸ் அதை படிக்க சொல்லல நாங்களும் படிக்கல இப்ப நானா எழுதி  வைச்சேன் னு சொன்னுச்சு. என்னப்பா சொல்ற எப்பவும் first 5 lesson ம் last 2 lesson ம் படிக்க சொல்வாங்களே என்றேன். எங்க மிஸ் அப்படி சொல்லலக்கா... என்றது நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் அந்த பெண் அரசு பள்ளியில் படிக்கும் போது 10th school second வந்துச்சு உடனே அந்த பெண் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் +1- +2 சேர்ந்துச்சு ஏன்னா அங்கதான் நல்ல class எடுக்குறாங்களாம். இதில் கொடுமை என்னவென்றால் ஒரு பாடத்தை இரண்டு வருடம் படிக்கிறார்கள் அப்படி படித்தும் இரண்டாவது பாடத்தில் வந்த essay யை எழுத முடியவில்லை இதுதான் தனியார் கல்வி.

Tuesday 3 May 2016

கனவு / மினி கதை




     நள்ளிரவு.... கத்தியோடு ஒரு உருவம் தன்னை நெருங்கி வருவதைக் கண்டு "யாராவது என்னைக் காப்பாத்துங்க... காப்பாத்துங்க...ப்ளீஸ் என்னை விட்டுரு ஒன்னும் செஞ்சிராதே..." கத்தினான் வேலு.

         அந்த உருவம் மெல்ல நெருங்கி வருகிறது இவனுக்கு நாக்கு குழறுகிறது...கால்கள் ஓட முடியாமல் நடுங்குகிறது குரலெடுத்து கத்துகிறான் சத்தம் வெளியே வரவில்லை.

வோட்டுக்கு துட்டு / மினி கதை



            "ப்ரியாம்மா.... ப்ரியாம்மா... "

            " என்ன ஆன்டி " ப்ரியா வெயியே வந்து கேட்டாள்.

            " அம்மா எங்கே...? ஒரு ஆளு பைக்ல வந்தாரு நல்லா வெள்ளையும் சொல்லையுமா இருந்தாரு எதிர்த்த வீட்டுக்கு போறதுக்கு வழிக்கேட்டாரு நானும் சொன்னேன். அவரு வோட்டுக்கு பணம் கொடுக்க வந்தவராம் ஒரு வோட்டுக்கு ஆயிரமாம் அவங்க வீட்டுல ஒரு ஓட்டுதான் ஆயிரம் ரூபா கொடுத்தாராம். எங்க வீட்டுல நாலு வோட்டு எங்களுக்கு கொடுக்கல உங்க வீட்டுல இரண்டு வோட்டு உங்களுக்கும் கொடுக்கல. எங்களுக்கு கொடுக்கலன்னாலும் பரவாயில்லை பாவம் நீங்க எவ்வளவு கஷ்டப்படுறீங்க உங்களுக்கு கொடுத்திருக்கலாம் இல்ல, ஆள்பார்த்து ஆள் கொடுக்குறான் எந்த கட்சிகாரன்னு தெரியல " ரொம்ப ஆதங்கப்பட்டார் பக்கத்து வீட்டு ஆன்டி.