Tuesday 23 June 2015

மீட்டாத வீணை (சிறுகதை)

                   பட்டுக்கோட்டை நீதிமன்றம் உயரமான நெட்டிலிங்க மரங்கள் நடுவில் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. ஆங்காங்கே வெள்ளை வேஷ்டிகளும், கறுப்பு அங்கிகளுமாக தெரிந்தன. வாரத்தின் முதல்நாள் கூட்டம் நிரம்பி வழிந்தது, ஒரே கூச்சலும் இரைச்சலுமாக இருந்தது. அங்கே ஸ்கூட்டியில் வந்த இறங்கிய சுவாதி வண்டியை ஒரமாக பார்க் செய்து விட்டு சாவியை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தை ஒட்டிய தனது அலுவலக அறைக்குள் நுழைந்தாள். மாநிற தேகம், எடுப்பான தோற்றம், கம்பீரமான நடை கையில் கறுப்பு கோட்டு அவள் ஒரு அட்வகேட் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லியது.

                 "சரவணன்.. சரவணன்... வண்டியில என் பைல் இருக்கு எடுத்துட்டு வாங்க..."
                "வந்துட்டேன் மேடம்..." என்றபடி ஓடிபோய் பெட்டியை திறந்து பைலை எடுத்துக்கொண்டு "குட்மார்னிங் மேடம்..." என்றான் குமஸ்தா சரவணன்.
பதிலுக்கு வணக்கத்தை வைத்தவள் "நேற்று ஒரு பேமிலி வந்தாங்களே அபிராமி சுந்தர் அவங்க வந்திருக்காங்களா..?"

Wednesday 3 June 2015

என் உயிர்

நீ
பவுர்ணமி நிலவா
மாதத்திற்கு ஒருமுறை
வந்து போவதற்கு..!

நீ
வாரத்தின் முதல் நாளா?
வாரம் ஒருமுறை
வந்துபோவதற்கு..!

நீ
இரவா? பகலா?
தினமும் வந்துபோவதற்கு..!

நீ
என் உயிர்
ஒரு நொடி வராமல்
போனாலும் மறு நொடி
என் இதயம் துடிப்பது
நின்றுவிடும்..!