Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Saturday, 21 February 2015

தினசரி சிவன் வழிபாடு

                     ஞாயிற்றுக்கிழமை

போற்றியோ நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
 போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை
 போற்றியோ நமச்சிவாய புறம் என்னப் போக்கல் கண்டாய்
 போற்றியோ நமச்சிவாய சயசய போற்றி போற்றி

Monday, 16 February 2015

விரதங்களும் அதன் பலன்களும்

             மாசி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவராத்திரியும், மாசி மகமும் தான். மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் வருவது சிவராத்திரி விரதமிருந்து இரவு முழுவதும் கண்விழித்து சிவபுராணம் பாராயணம் செய்வது நல்லது.

Thursday, 16 October 2014

மானதத் தந்தி (Telepathy)

          மனிதனின் பலமான எண்ணங்கள் தலையை ஊடுருவி, மன ஆகாயத்தின் சுற்று வட்டத்தில் அலைக்கழித்துப் பாயும். இந்த மன அலைகள் ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றியதாகயிருந்தால் அறிவுத்தன்மையுள்ள அவ்வலைகள் அவரை நோக்கி நேராகச் சென்று, அவருடைய மனதைத் தாக்கி, எண்ணத்துக்குரிய மனத்திரிபை உண்டாக்க, அதை அம்மனத்துக்குரியவர் ஏதோ எண்ணம் என்ற பெயரில் அறிகிறார். ஆனால் இதற்கு ஒரு நியமம் இருக்க வேண்டும்.

          ஒருவர் மற்றொருவருக்கென மன அலையை அனுப்பும் சமயத்தில் அதைப் பெறவேண்டியவர் வேறு நினைவில் ஆழ்ந்து, இருக்கக்கூடாது பலமான எண்ணம் ஏதுமில்லாமல் இருக்க வேண்டும். பிரிந்து வாழும் காதலர்கள், நண்பர்கள், உறவினர்களிடையே இத்தகைய மானதத்தந்தி பரிமாற்றாங்கள் அடிக்கடி நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. மனதின் மூலமாகச் செய்தியை அனுப்பவும், அறியவும் பழகிய ஒரு நண்பர் உலகில் எவ்வளவு தூரத்தில் வசித்தாலும் ஒருவருக்கொருவர் செய்திகளையும், உருவங்களையும் பரிமாறி கொள்ளமுடியும.

          ஒருவர் தூரத்தில் உள்ள தன் நண்பருக்கு மனதின் மூலம் காட்சிகளை அனுப்ப முடியும். டெலிகிராப், டெலிபோன், போன்றவைகள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையும் சாத்தியமானதுதான் இந்த டெலிபதி (Telepathy). தன் நண்பர் வெளியூர் சென்றாலும் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் சம்மந்தப்பட்ட இரு நண்பர்களும் அறிந்து கொள்ள முடியும். அல்லது நம் மனதுக்குரியவர்களிடம் இருந்து நாம் நினைத்த நேரத்தில் கடிதமோ அல்லது டெலிபோனோ வரும் அதை வைத்தே நாம் புரிந்து கொள்ள முடியும்.

          இந்த விளக்கத்துக்குப் பின் மானதத் தந்தியை பற்றிய ஐயப்பாடு யாருக்கும் இருக்காதாகையால் இதன் உண்மையைப் பரிட்சித்தறிந்து தெரிந்து கொள்ளலாம். மானதத்தந்தி சாதனைக்கு குறைந்தது இருவர் இருக்க வேண்டும் மனதில் ஒரு உருவை, சப்தத்தை, உறுதியாகப் பிடித்து, உணர்வை அதில் நிலைநாட்டச் செய்வதன் மூலம் அதை அப்படியே வெளிமன ஆகாயத்தில் அனுப்பும் பண்பை பெற்றிருக்க வேண்டும்.

          ஒரே வீட்டின் வெவ்வேறு மூலைகளிலும் இருந்து குறித்த நேரத்தில் அவரவர் இடத்தில் அமைதியாக வசதியாக உட்கார்ந்து கொள்ளவேண்டும். முன்பே அனுப்புபவர் இன்னாரென்று அறிபவர் முடிவு செய்திருக்க வேண்டும். அனுப்புபவர் உருத்தையோ, சப்தத்தையோ மணத்தையோ எதை அனுப்பவேண்டுமோ அதைத் தெளிவாக மனதில் நிறுத்தி வைத்து உணர்வை அதில் ஊன்றி, வெளியில் அனுப்ப வேண்டும்.

           அறிபவர் அதே சமயம் எதையும் நினைக்காமல் மனதில் உதிப்பதை அறியும் நிலையில் இருந்து மனதில் உதிப்பவைகளை அறிந்து ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். பலர் சாதகம் செய்வதாயிருந்தால் ஒருவர் அனுப்புபவராகவும, மற்றவர்கள் அறிபவர்களாகவும் இருந்து இதைப் பழகலாம்.

            வாசகர்களே நீங்களும் பரிட்சித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

Wednesday, 10 September 2014

ஆன்மிகம் / சிவன் கோவில் வழிபாடு


           
                சிவன் கோவிலுக்கு நாம் அடிக்கடி செல்கிறோம். சிலர் சிவமூர்த்தியையும், கோவிலை சுற்றி சின்ன சின்ன ஆலயங்களில் அமைந்துள்ள தெய்வங்களையும் வணங்குவது வழக்கம். சிலர் சிவமூர்த்தியை மட்டும் வணங்கி விட்டு திருபிவிடுவர் அப்படி அல்லாமல் ஏனைய அனைத்து தெய்வங்களையும் வழிபடவேணடும். தினசரி பூஜை, புனஷ்காரம், கற்பூர ஆராதனை என்று வழிபாடுகள் இருப்பதால் சிறிய கோவில் என்றாலும் தெய்வசக்தி உச்சச்தில் இருக்கும். சிவபெருமான் கோவில்களில் கர்ப்ப கிரகத்தின் தெற்கு புறமாய் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை சிவனுக்கு அடுத்தபடியாக வழிபடவேண்டும்.

             அதன்பின் வெளியே உள்ள தெய்வங்களை  வணங்குதல் வேண்டும் நவஹிரகங்களை ஒன்பது முறை சுற்றி வரவேண்டும். நவஹிரக வழிபாடு முடிந்தவுடன் ஸ்ரீ சண்டகேஷ்வரை வணங்க வேண்டும் வழிபாடுகள் முடிந்தபின் உணவருந்த செல்லுதல் நல்லது.