Sunday 20 December 2015

உதவிகரம் நீட்டியவர்கள்

              சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய திரை நட்சத்திரங்களை விட, சின்னத்திரை நட்சத்திரங்களை விட அதிகம் களத்தில் இறங்கி உதவி செய்தது "வானொலி அறிவிப்பாளர்கள் தான்" இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய வேண்டிய ஒன்று மழைக்காலங்களில் மின்சாரம் இல்லாமல் போனாலும் செய்திகள் மக்களிடையே கொண்டு செல்வது வானொலிதான். அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்து வானொலி அறிவிப்பாளர்கள்தான் அனைத்து வானொலி அறிவிப்பாளர்களுக்கும் நன்றி சொல்வதோடு பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

              முகமறிந்தவர்கள் எல்லாம் வெளியே வராத போது முகமறியாதவர்கள் களத்தில் இறங்கி உதவி செய்தது உண்மையில் பெருமைக்குரியது. எப்பவும் திரைக்கு பின்னுக்கு இருப்பவர்களே உண்மையான ஹீரோக்கள்.

Friday 18 December 2015

சிறுநீரக பிரச்சினைகள் தீர வேண்டுமா?

சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? ஆப்ரேஷன் செய்தும் பயனில்லையா? இனி கவலைய விடுங்க. மருந்து இல்ல, மாத்திரை இல்ல, அறுவை சிகிச்சை இல்ல.

Wednesday 16 December 2015

சென்னையில் உள்ள குப்பைகளை அகற்ற உடனடி தீர்வு

              அரசு நினைத்தால் சென்னையில் உள்ள குப்பைகளை உடனே அகற்றலாம். அதற்கு இரண்டே வழிகள் உள்ளன. 1. அனைத்து குப்பைகளையும் தீ வைத்து கொளுத்துவது. தீ வைத்தால் காற்று மாசுப்படும் என்று சமூக ஆர்வலர்கள் போர்க்கொடித் தூக்குவார்கள், இதை நாம் விட்டுவிடுவோம். 2 வது வழி சென்னைக்கு வெளியே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஒரு 4-5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இடத்தைப் பிடித்து அதில் ஏரிகள் போன்ற அமைப்பில் இரண்டு குழிகள் (அதாவது பள்ளங்கள்) வெட்டி அதில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று இரண்டாக பிரித்து தனித்தனியாக கொட்ட வேண்டும். அதன் அருகிலே கழிவுகளை அகற்றும் ஒரு சுத்திகரிப்பு தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.

பசலிக்கீரைக்க கூட்டு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:-

பசலிக் கீரை  - 1 கட்டு
பாசிப்பருப்பு - 50 கிராம்
பூண்டு - 1
பச்சை மிளகாய் - 6
தக்காளி - 2
தேங்காய் - 1 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
பெரியவெங்காயம் - 2
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

Thursday 3 December 2015

சென்னையில் வெள்ளம்

#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது

ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை சென்னையில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக ஒரு பெரிய தொகை கொடுத்தால் அதை வைத்து அவர்கள் இழந்ததை மீட்டு கொள்வார்கள்... ஆனால் அரசு என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை. அரிசி கொடுத்தேன், பருப்பு கொடுத்தேன், போர்வை கொடுத்தேன், தலா 10 ஆயிரம் பணம் கொடுத்தேன்னு யாரும் கணக்கு காட்டாமல் இருந்தால் சரி... இதுவரை