Sunday 20 March 2016

கோபம் யாருக்கெல்லாம் வருகிறது?

            சட்டென கோபம் யாருகெல்லாம் வருகிறது? ஒரு சின்ன சிந்தனை ஒரு ஆய்வு என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.

             இதிகாசங்களில் நாம் படித்திருப்போம் வசிஷ்டர் முனிவர், துறுவாசர் போன்ற முனிவர்களுக்கு அதிக கோபம் வரும் இவர்களின் சாபங்களுக்கு ஆளாக கூடதென்று கடவுள்கள் பயந்தாக படித்திருக்கிறோம். கடவுளே பயப்படுகிறார்கள் என்றால் என்னவாக இருக்கும்? அத்தனை சக்தி அந்த முனிவருக்கு உண்டா? என்று நமக்கு சந்தேகம் எழும். சக்தி உண்டு ஏனென்றால் அவர்களின் தவவலிமைதான் அந்த சக்தி. தான் எடுத்துக்கொண்ட செயலில் உள்ள பவித்திரத்தன்மைதான் அது அதாவது உதாரணத்திற்கு நான் பொய் சொல்ல மாட்டேன் என்று ஒருவர் உறுதியோடு இருந்தால் அவர் வாக்கு பழிக்கும். ஏனெனில் அந்த பவித்திரத்தன்மை சக்தியாக மாறுகிறது. இதுதான் கடவுள், இதுதான் நம்பிக்கை, இதுதான் சாமி நாம் மேற்கொண்ட கொள்கைகள் மீது நாம் எடுத்துக்கொள்ளும் அதீத சிரத்தை தான் கடவுள்.

Thursday 17 March 2016

இயற்கையிடம் கற்றுக்கொள்வோம்

இயற்கையிடம் கற்றுக்கொள்வோம் செய்நன்றி அறிதலை :


                ஒரு செடிக்கு நீர் ஊற்றினால் செடி நிறையபூக்களைத் தருகிறது...
ஒரு தென்னை மரத்திற்கு நீர் ஊற்றினால் இளநீர், தேங்காய், மட்டை, பாலை, என வகைகளில் பயன்படுத்துவதற்கு உதவுகிறது...

Sunday 6 March 2016

நட்பில் பிரச்சினை வர காரணம் என்ன?

மன ரீதீயில் ஓர் அலசல்:

              முன்பு கடிதம் என்ற ஒரு அழகான மனஉணர்வு இருந்தது. படிக்கும் போதே அடடா என்று தோன்றும், இந்த கடிதம் முடியாமல் நீண்டு கொண்டே போகாதா என்று தோன்றும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனெனில் இந்த கடிதம் எழுதிமாதங்கள் ஆகலாம், வாரங்கள் ஆகலாம், நாட்கள் ஆகலாம் இருப்பினும் ஏக்கத்தோடு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே தவிர கோபமோ அதனால் சண்டையோ பிரச்சினையோ இருக்காது. காரணம் கடிதம் கிடைத்து படிக்காமல் கூட இருக்கலாம், வேலையாக இருக்கலாம், பதில் எழுத பிடிக்காமல் கூட இருக்கலாம், அதனால் எந்த பிரச்சினையும் வருவதில்லை ஏனெனில் அவர் எந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கிறார் என்று தெரியாது என்பதால். அடுத்து குறுஞ்செய்தி அதாவது SMS ஒன்று வந்தது அதுவும் கிட்டதட்ட கடிதம் போன்ற ஒரு உணர்வை தந்தது. இதிலும் எந்த பிரச்சினையும் இல்லை ஏனெனில் இதற்கும் பதில் உடனடியாக அனுப்பலாம் அல்லது சற்று தாமதமாக கூட அனுப்பலாம் இதிலும் பிரச்சினை வராது.

Saturday 5 March 2016

தஞ்சாவூர் ஸ்பெஷல் / சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 1
சுண்டைக்காய் (பச்சை) - 1 கைப்பிடி
தக்காளி - 2
பூண்டு - 1
சின்னவெங்காயம் - 25 கிராம்
மிளகாய்தூள் - தேவைக்கேற்ப
மல்லித்தூள் - தேவைக்கேற்ப
வெந்தயம் - சிறிது
சோம்பு - 1 ஸ்பூன்
புளி - எழிமிச்சை அளவு
தேங்காய் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப