Thursday 30 June 2016

நீதிமன்றமும் காவல் நிலையமும் எதற்கு?

நீதிமன்றமும் காவல் நிலையமும் இனி தேவையில்லையா...?

 ஆட்கள் நடமாடும் இரயில் நிலையத்தில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள் சுற்றியிருந்தவர்கள் யாரும் தடுக்கவில்லை, ரோந்து போலிஸ் வரவில்லை, இரயில் காவல் நிலை அதிகாரிகள் வரவில்லை, கொலை செய்தவன் போட்டோ தெளிவாக பதிவாகி இருக்கிறது போலிஸ் இன்னும் விசாரணை தான் செய்து கொண்டு இருக்கிறது கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் பொது மக்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்று எல்லோருமே வலைதளத்திலும் தொலைகாட்சியிலும் கூறிக்கொண்டு  இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தலைவர் சொல்கிறார் கொலையுண்ட பெண்ணின் மீது யாரும் ஒரு கர்சிப் கூட போட மனமில்லை என்று , ஒருவேளை கர்சிப் போட்டிருந்தால் இது கொலையாளி விட்டு சென்ற கர்சிப் என போலிஸ் துப்பு துலக்கும்.

Wednesday 1 June 2016

காத்திருப்பு

நீரற்ற நதிக்கரையில்
காத்திருக்கும் கொக்கைபோல்
யாருமற்ற நந்தவனத்தில்
உனக்காக காத்திருக்கிறேன்..!