Wednesday 1 June 2016

காத்திருப்பு

நீரற்ற நதிக்கரையில்
காத்திருக்கும் கொக்கைபோல்
யாருமற்ற நந்தவனத்தில்
உனக்காக காத்திருக்கிறேன்..!



பட்டாம்பூச்சிகள் உல்லாசமாய்
பறந்து செல்கிறது...
சில்வண்டுகள் சிங்காரமாய்
ரீங்காரம் செய்து போகின்றது..!

காக்கை குருவிகள்
கானம்பாடி கலைந்து போகிறது - ஆனால்
நீ கடைசிவரை  வரவேயில்லை - இருப்பினும்
நினைவுகள் மட்டும் நீந்துகிறது
நீயில்லா நந்தவனத்தில்
சருகோட சருகாய் அடிக்கிற காற்றில்
அங்குமிங்கும் அழைந்தபடி...!

No comments:

Post a Comment