Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, 18 April 2020

காற்றின் மொழி

        வணக்கம்...நேயர்களே இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது நேயர் விருப்பம்.. நேரம் இப்போது சரியா காலை 9 மணி 55 நிமிடம் ஆகிறது. நிகழ்ச்சியின் நிறைவு பகுதிக்கு வந்துவிட்டோம் இப்போது லைன்னில் ஒரு நேயர் காத்திருக்கிறார்... "வணக்கம் .. வணக்கம் .. லைன்ல இருக்குறீங்க பேசுங்க...  யார் எங்கிருந்து பேசுறீங்க..?"

"வணக்கம் ... வணக்கம்... அக்கா..  மருதமுனையில் இருந்து நிஷாந்தன் கந்தையா கதைக்கிறன் ரொம்ப நாளா ட்ரைப் பண்ணிட்டு இருந்தனான் லைன் கிடக்கல இன்றைக்குத்தான்  கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷம் அக்கா  உங்கட வாஸ் என்றால்  எனக்கு ரொம்ப இஷ்டம் அக்கா உங்க நீண்ட கால ரசிகன் அக்கா.. "

"அப்படியா... ரொம்ப சந்தோஷம் நிஷாந்தன் சரி சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும்..?" என்றாள் சரித்தபடி

"அக்கா... வசீகரா படத்துல இருந்து பூப்போல தீ போல மான் போல மழைப் போல வந்தாள்
சாங் தருவிங்களா?"

"சரி நிஷாந்தன் யார் யாருகெல்லாம் பாடல் வேண்டும்..."

 "எனக்காகவும் எங்கட குடும்பத்தார் நண்பர்கள்,ரேடியோ கேட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் கேட்போம் அக்கா உங்க கூட கதைச்சதில் ரொம்ப சந்தோஷம்  அக்கா..நன்றி" எனக்கூறியபடி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

"நிஷாந்தன் நீங்க கேட்டப் பாட்டு இதோ வந்துட்டு இருக்கு இப்போது நான் விடை பெறும் நேரமும் வந்திடுச்சு உங்களிடம் இருந்து விடைப் பெற்றுக்கொள்ளும் நான் கெளரி வணக்கம் நேயர்களே... என்று கூறியபடி ஒலிநாடாவை சுழலவிட்டு ஸ்டியோவை விட்டு வெளியே வந்தாள் கெளரி..

Saturday, 21 July 2018

சிகப்பி

காலை மணி 9 ஆடி வெள்ளி என்பதால் நான் சாமி படங்களை துடைத்துக்கொண்டு இருந்தேன் வெளியே ஏதோ சத்தம் கேட்டது படங்களை அப்படியே போட்டுவிட்டு வெளியே ஓடிபோய் பார்த்தால். சிகப்பி பாதி தென்னை மரம் உயரத்திற்கு பறந்து போய்கொண்டு இருந்தாள். ஆஹா குஞ்சை பருந்து தூக்கிவிட்டதா என்று என் கண்கள் அங்குமிங்கும் தேடியது ஆனால் ஒன்றும் என் கண்ணில் சிக்கவில்லை.. சிறிது நேரத்தில் கலவரமுகத்துடன் சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள் சிகப்பி. சிகப்பி நான் வளர்க்கும் கோழி, அவள் நாலு குஞ்சுகளுக்கு தாய் ஏழு குஞ்சுகளை பொரித்தாள் மூன்று இறந்து போனது. தற்போது நாலு குஞ்சுகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறாள். அவள் பெரும் கோவக்காரி முட்டை அடை வைக்கும் வரை என்னை சுத்தி வருவாள் அடைகாத்து குஞ்சு பொரித்துவிட்டால் பத்திரகாளியாக மாறி கொத்தி விடுவாள் வளர்க்கும் என்னையே அவள் விட்டு வைப்பத்தில் என்றால் கூட வளரும் கோழி, நாய்களை சும்மா விடுவாளா ராட்ஷியாக பிடிங்கி எடுத்துவிடுவாள்.

Monday, 19 March 2018

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள் (சிறுகதை)

       

           "அம்மா... அம்மா... " என்று அழைத்தபடி அங்கிருந்த ஷேரில் அமர்ந்தான் கண்ணன்.

       "என்ன சொல்லு எனக்கு வேலையிருக்கு" என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் கண்ணனின் அம்மா ராசாத்தி.

       "எங்க கலேஜ்ல படிக்கிற ரமேஷ் அக்காவுக்கு மேரேஜ் என்னை கூப்பிட்டுருக்கான் நானும் போகனும்மா..." என்றான் மெல்ல.

        "யாருடா அது அன்னைக்கு போன்ல பேசினானே அவனா?"


        "இல்லம்மா இவன் வேற என்னம்மா நான் போகட்டுமா..."

Monday, 17 July 2017

கனவே கலையாதே

            மாலை 5 மணி ரிங்....ரிங்... ரிங்... போன் அடித்துக்கொண்டே இருந்தது அம்மாவிடம் இருந்து போன்.  போனை எடுத்து காதில் வைத்து "என்னம்மா.." என்றேன்.

               மறுமுனையில் அம்மா "ம்மா.. நம்ம குட்டிமணிக்கு வெறிபுடிச்சிடுச்சும்மா.." என்று ஒரே அழுகை.

             "என்னம்மா சொல்றே.. அப்படி எதும் இருக்காது நீ ஏதாவது உளராதே.."

Friday, 5 August 2016

பாட்டி சொன்ன மந்திரம் / சிறுகதை


       
                //பாட்டி சொன்ன மந்திரம் //



             கோயம்பேடு பேருந்து நிலையம் எப்போதும் போல் பலவித இரைச்சல்களோடு நிரம்பி வழிந்தது கூட்டம், அங்குமிங்கும் பல சத்தங்களுக்கு இடையில் கேட்டது கண்டக்டரின் குரல்.   திருச்சி... திருச்சி... திருச்சி போறவங்கல்லாம் வண்டில ஏறுங்க.... கண்டக்டர் கத்திக்கொண்டு இருந்தார். வாங்கம்மா... திருச்சியா... வாங்க வாங்க..." வலுக்கட்டாயமாக அழைத்தர். இல்லையென கண்களால் பதில் சொல்லிய படி ஒரு டிராவல் பேக் பின்னால் இழுக்க,  தோளில் மாட்டியிருந்த ஹேன்பேக் இன்னொரு பக்கம் சரிந்து கொட்ட அதை சரிசெய்துகொண்டே மன்னார்குடி பஸ் நிக்கிறதா என பார்த்துக்கொண்டே வேகமாக நடந்து சென்றாள் காவியா.. நாலைந்து பஸ்களை கடந்து மன்னார்குடி பஸ் நின்றது. டிக்கெட் வாங்கலாம் என்று அருகே சென்றால் கண்டக்டரைச் சுற்றி ஒரே கூட்டம். சார் ... கும்பகோணம் ஒன்னு, சார்... மன்னார்குடி ஒன்னு... சார் ... நீடாமங்கலம் ஒன்னு ஒருவர் மேல் ஒருவர் கைகளை நீட்டிய நின்றனர் பயணிகள். அதற்கு நடுவே கைகளை நீட்டி " சார்.. மன்னார்குடி ஒன்னு லேடிஸ் " என்றாள் காவியா. கண்டக்டர் கண்ணாடிக்கு இடையில் மேலே பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் மற்றவர்களுக்கு டிக்கொடுக்க தயாரானார். சிறிது நேர காத்திருப்புக்கு பின் பணத்தை வாங்கிக்கொண்டு சீட் நம்பர் ரெண்டுல உட்காரும்மா " என்றபடி டிக்கெட்டை கொடுத்தார்.

Thursday, 22 October 2015

நிறம் மாறாத பூக்கள் / சிறுகதை

              நிவேதா... அவசர அவசரமாக சமைத்துக்கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் ஒருவித சோகம் குடிக்கொண்டிருந்தது. இதற்கு காரணம் தன் அன்பான கணவன் தன்னை விட்டு சென்றுவிடுவானோ என்ற கவலைதான் இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதம்தான் ஆகிறது. அருண்மொழி  நல்ல அழகானவன் ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிகிறான். திடீரென்று ஒருநாள் நெஞ்சுவலி என்று மயங்கி விழுந்தவனை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி சென்று பார்த்தபோது. டாக்டர் சொன்ன விஷயம் இவளுக்கு அதிர்ச்சியை தந்தது. இவன் இன்னும் ஆறுமாதத்திற்குதான் உயிரோடு இருப்பார் என்று சொன்னவுடன் இவளுக்கு அந்த நொடியே பாதி உயிர் போய்விட்டது போல் உணர்ந்தாள். தன் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வலம் வந்தாள். அந்த கவலைதான் இவளுக்கு ஏதோ சுயநினைவு வந்தவளாய் மணியை பார்த்தாள். மணி எட்டைத் தாண்டிக்கொண்டிருந்தது.

Tuesday, 23 June 2015

மீட்டாத வீணை (சிறுகதை)

                   பட்டுக்கோட்டை நீதிமன்றம் உயரமான நெட்டிலிங்க மரங்கள் நடுவில் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. ஆங்காங்கே வெள்ளை வேஷ்டிகளும், கறுப்பு அங்கிகளுமாக தெரிந்தன. வாரத்தின் முதல்நாள் கூட்டம் நிரம்பி வழிந்தது, ஒரே கூச்சலும் இரைச்சலுமாக இருந்தது. அங்கே ஸ்கூட்டியில் வந்த இறங்கிய சுவாதி வண்டியை ஒரமாக பார்க் செய்து விட்டு சாவியை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தை ஒட்டிய தனது அலுவலக அறைக்குள் நுழைந்தாள். மாநிற தேகம், எடுப்பான தோற்றம், கம்பீரமான நடை கையில் கறுப்பு கோட்டு அவள் ஒரு அட்வகேட் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லியது.

                 "சரவணன்.. சரவணன்... வண்டியில என் பைல் இருக்கு எடுத்துட்டு வாங்க..."
                "வந்துட்டேன் மேடம்..." என்றபடி ஓடிபோய் பெட்டியை திறந்து பைலை எடுத்துக்கொண்டு "குட்மார்னிங் மேடம்..." என்றான் குமஸ்தா சரவணன்.
பதிலுக்கு வணக்கத்தை வைத்தவள் "நேற்று ஒரு பேமிலி வந்தாங்களே அபிராமி சுந்தர் அவங்க வந்திருக்காங்களா..?"

Thursday, 2 April 2015

நான் கடவுள் / ஒருபக்க கதை

              காரைக்குடி பேருந்து நிலையம் அரியக்குடி பெருமாள் கோவிலுக்கு செல்வதற்காக பஸ்க்கு காத்திருந்தேன். அருகில் என் தோழியின் மகள் கடைகளைச் சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றாள். தோழி தனக்குத் தெரிந்த ஒருவருடன் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தாள்.

              அப்போது என்னருகில் ஒரு குரல் திரும்பிப் பார்த்தேன் அழுக்கு சேலையும், பரட்டை தலையும், முகத்தில் அதிக சுருங்கங்களோடு வயது முதிர்ந்த பாட்டி "அம்மா... தர்மம் பண்ணுங்கம்மா... மயக்கமா வருதும்மா... காபித்தண்ணி குடிக்க காசுயிருந்தா குடுங்கம்மா..." என்றார். என் தோழியின் மகள் முகத்தை சுழித்து வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

Tuesday, 24 February 2015

வயசு பசங்க /சிறுகதை

          ஊட்டி மலைபகுதியில் கதிர்கள் மறைய தொடங்கியது வெள்ளை வேட்டி போர்த்தியது போல் பனி பரவி கிடந்தது அந்த மலை உச்சியை நோக்கி இரு உருவங்கள் வேக வேகமாக நடந்து சென்று கொண்டு இருந்தது அது ஒரு ஆணும் பெண்ணும்... அப்போது இவர்கள் செல்லும் பாதையின் பக்கவாட்டில் இருந்து ஒரு உருவம் கருப்பு கம்பளி போர்வையை போத்திக்கொண்டு ஒரு கையில் கம்புடனும் மறுகையில் டார்ச் லைட்டுடனும் வந்து கொண்டிருந்தது.

           "யாரது... யாரது... அங்க போறது கேக்குறேன்ல... நில்லுங்க" என்றவாறு விரைந்து வந்தது. யாரோ ஒருவர் தம்மை அழைக்கும் சத்தம் கேட்டு நின்றனர் இருவரும். கிட்ட நெருங்கி வந்த அந்த கருப்பு உருவத்திற்கு அறுபது வயதிற்கும்.

Saturday, 7 February 2015

விளையும் பயிர் / சிறுகதை

             மெரினா கடற்கரை... இதமான காற்று வீசிக்கொண்டு இருந்தது. அந்த வெள்ளை வெளேர் மணற்பரப்பில் கைகளை தலைக்கு வைத்துக்கொண்டு கண்களை மூடியபடி படுத்திருந்தான் கோபி. சற்று தூரத்தில் ஒரு காதல் ஜோடி சிரித்து, சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர் அதன் அருகில் ஒரு சிறுவன்

         "சார்... சார்... சுண்டல் வாங்கிகோங்க சார்.. கடைசியா ரெண்டு பொட்டலம்தான் சார் இருக்கு வாங்கிகோங்க சார் நல்லா இருக்கும்" என்று கெஞ்சியபடி இருந்தான்.

Monday, 8 December 2014

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்/ சிறுகதை

                                               கதை தொடர்ச்சி

          இரவு ராசாத்தி சமையல் செய்துக்கொண்டிருந்தாள். அனிதா பக்கத்து ரூமில் நாளைக்கான பாடங்களை படித்துக்கொண்டிருந்தாள். கண்ணன் மெல்ல வந்தான் பேக்கை தன் ரூமில் வைத்தவன் சமையலறை பக்கம் சென்றான். "என்னம்மா சமையலா" என்றான். உடனே கோபத்தோடு தலையை வெடுக்கென்று திருப்பி "எங்கேடா போய் தொலைஞ்சே ரெண்டு நாளா... எங்க போனே.. நீ.. புள்ளையா.. நீ.. என்னைக்காவது உண்மையை சொல்றீயா ப்ராடு.. ப்ராடு.. மூஞ்சிய பாரு.. " ஏக வசனத்தில் திட்டி தீர்த்தாள்.

               "என்னம்மா.. இப்படி கோபமா பேசுறீங்க., நான் என்னம்மா தப்பு செஞ்சேன்.. நான் கல்யாணத்துக்கு தாம்மா போனேன்..." என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.

Saturday, 29 November 2014

கனவு சிறுகதை


            காலை நேரமது மழை லேசாக தூரிக்கொண்டு இருந்தது. ஆங்காகங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது . கருவேலங்காடு நிறைந்த அப்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடிசை  வீடுகள்.

       அந்த வீடுகளுக்கு சற்றுத் தள்ளி ஒரு மண் சாலை அதில் எப்போதோ போடப்பட்டது. அந்த மண் சாலையில் இப்பவோ அப்பவோ என்று விழும் நிலையில் பழுதடைந்த மின்கம்பம் ஒன்று நின்று கொண்டிருந்தது. போதுமான சாலை வசதியோ மின்சார வசதியோ மருத்துமனை வசதியோ இல்லாத கிராமம் அது.
         
          அந்த குடிசை வீட்டின் முன் சுள்ளிகளை வெட்டிக்கொண்டிருந்தாள் வேளாயி... ஒல்லியான தேகம், எண்ணெய் தேய்க்காத தலை, கழுத்தில் தாலி இல்லை கிழிந்து போன சேலையும் நைந்து போன ரவிக்கையுமாய் காட்சித்தந்தாள். "என்ன கருமம் புடிச்ச மழையிது தொண தொணன்னு பேஞ்சுகிட்டு ஒரேதா பேஞ்சும் தொலைக்கவும் மாட்டேங்குது நம்ம பொழப்பையும் கெடுத்துகிட்டு" என்றவாறு உள் நோக்கி குரல் கொடுத்தாள்.

Friday, 28 November 2014

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள் சிறுகதை

                                   -தொடர்ச்சி

          பஸ் ஸ்டாண்டை நெருங்கியதும் ஜன்னல் வழியாக நிர்மலாவைத் தேடினான் கண்ணன். நிர்மலா நகத்தை கடித்து துப்புவதும், கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தால் அவள் கோபத்தில் இருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்லியது போய் சமாதானம் செய்ய வேண்டும் என நினைத்தப்படி பஸ்சை விட்டு இறங்கி நிர்மலாவிடம் சென்றான்.

          "என்னங்க இப்படி லேட் பண்ணிட்டிங்க கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?"

        "என்ன செல்லம் பண்றது கிளம்பிதானே வரமுடியும் அம்மா ஒரு வேலை சொல்லிட்டாங்க" "சரி சரி வாங்க பஸ் நிக்கிது" இருவரும் கொடைக்கானல் பஸ்சில் இடம் பார்த்து ஏறி அமர்ந்தனர். நிர்மலாதான் பேச்சை ஆரம்பித்தாள். "என்னங்க நாம மேரேஜ்னு பொய் சொல்லிட்டு கிளம்பி வந்துட்டோம் அவங்களும் நம்பிட்டாங்க ஆனாலும் பயமா இருக்குங்க"

Thursday, 27 November 2014

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்..! சிறுகதை

         "அம்மா... அம்மா... " என்று அழைத்தபடி அங்கிருந்த ஷேரில் அமர்ந்தான் கண்ணன்.

       "என்ன சொல்லு எனக்கு வேலையிருக்கு" என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் கண்ணனின் அம்மா ராசாத்தி.

       "எங்க கலேஜ்ல படிக்கிற ரமேஷ் அக்காவுக்கு மேரேஜ் என்னை கூப்பிட்டுருக்கான் நானும் போகனும்மா..." என்றான் மெல்ல.

        "யாருடா அது அன்னைக்கு போன்ல பேசினானே அவனா?"

        "இல்லம்மா இவன் வேற என்னம்மா நான் போகட்டுமா..."

         "சரி.. சரி.. போகலாம் அதுக்கு முன்னாடி கடையில போய் சிலிண்டரை மாத்தி வைச்சுட்டு போ டேட் முடிஞ்சிட்டு அப்புறம் தீர்ந்து போச்சுன்னா தரமாட்டான்.."

Friday, 14 November 2014

¤முகநூல்¤ சிறுகதை

         "ஏய்... பவித்ரா மணி என்ன? அம்மா அதட்டலாக கேட்டாள்.

         "மணி 12 உங்களுக்கு மணி பார்க்கத் தெரியதா?"

         "அது எனக்குத் தெரியும் மணி 12 ஆகுது தூங்காம அப்படி என்னடி பேஸ்புக்ல பார்த்துட்டு இருக்க"

          "ஒரு ட்ராயிங் போட்டேன் ஒரு ஸ்டெட்டஸ் போட்டேன் லைக்கும், கமான்ஸ்ம் போட்டு இருக்காங்க அதான் தேங்க்ஸ்னு ரிப்ளே பண்ணிட்டு இருக்கேன்"

          "ஏன்டி உனக்கு அறிவு இருக்கா எப்ப பாரு பேஸ்புக் பேஸ்புக்" "நீங்களும் இதுல அக்கவுண்ட் வைச்சு பாருங்க அப்றம் இப்டி சொல்லமாட்டிங்க. நான் ஒரு கருத்து சொன்னா நூறு லைக் விழும் ஐம்பது கமான்ஸ் விழும் இதெல்லாம் உங்ககிட்ட சொன்னா நீங்க கண்டுக்கவே மாட்டிங்க அதனாலதான் பேஸ்புக் போறேன் இது ஒரு தனி உலகம்மா இதுல விழுந்துட்டா திரும்பி வர மனசே வராது. இதுல தான் அம்பானிக்கும் ப்ரண்ட் ரிக்ஹொஸ்ட் கொடுக்கலாம்."

          "ஏதோ எக்ஸாம் இருக்குன்னு அப்ளிக்கேஷன் போட்டியே ஏதாவது படிச்சியா? முதல்ல இந்த நெட்கார்டு போட்டு பார்க்கிறீயே அது உன்னோட காசு இல்ல முதல்ல நீ சொந்த கால்ள நில்லு அதுக்கப்புறம் உன் சொந்த கருத்தைப் போடு உனக்கே சொந்த காலில் நிக்க தகுதி இல்லாதப்ப நீ மத்தவங்களுக்கு எப்படி கருத்து சொல்வ.

¤சந்தியா¤ சிறுகதை

           காலை நேரமது யூனிபார்ம் அணிந்த பிள்ளைகள் ஸ்கூலுக்கு வேகமாக சென்று கொண்டிருந்தனர். ஆய்சா மட்டும் வருகின்ற ஒவ்வொரு பஸ்சையும் விட்டுவிட்டு தூரத்தில் பார்வையை போட்டப்படி நின்றுக்கொண்டிருந்தாள்... அவள் பார்வை யாருக்காவோ வெயிட்டிங் என்பதை சொல்லாமல் சொன்னது. அடிக்கடி கடிகாரத்தை பார்ப்பதும் எரிச்சலாக தூரத்தை வெறிப்பதுமாக இருந்தவளின் பிரகாஷமானது...

          "ஹாய்... ஆய்ஷா! என்ன ரொம்ப நேரமா அய்யாவுக்காக வெயிட்டிங்கா..." என்றபடி வண்டியை நிறுத்தினான் குமார்.

            "இல்லைங்க சார்... வந்து அஞ்சு நிமிஷம் தான் ஆகுது என்று நக்கலாக கூறிவிட்டு இன்னும் கொஞ்ச நேரம் லேட்டா வந்திருந்தா பஸ் புடிச்சு ஆபிஸ் போயிட்டு உனக்கு ஒரு குட்பாய் சொல்லிட்டு போயிருப்பேன்.."

           "சாரிம்மா... சாரி.. ரியலி வெரிசாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு அதுக்கு இத்தனை கோபமா..? அங்காளபரமேஸ்வரியே நேரில் பார்த்த மாதிரி இருக்கு சீக்கிரம் வண்டியில ஏறி உக்காரும்மா உன்னை ஆபிஸ்ல விட்டுட்டு போறேன்..."

Sunday, 7 September 2014

¤ சுமைகள் ¤


              சுரேஷ் அவசர அவசரமாக ஆபிஸ்க்கு கிளம்பிகொண்டிருந்தான் ஒரு தனியார் கம்பெனி ஒன்றில் மேனேஜிங் டைரக்டர் உத்தியோகம் பார்க்கிறான்.

             "கவிதா... கவிதா... ஆபிஸ்க்கு டைம் ஆச்சு லன்ஜ்பாக்ஸ் எடுத்துட்டுவா.."

              "ஏன்ங்க இப்படி கத்துறீங்க இதோ வந்துட்டேன் அப்பப்பா அவனை கூட ஸ்கூலுக்கு அனுப்பிட்டேன் உங்களை அனுப்புறதுக்குள்ள போதும்போதும்ன்னு இருக்கு.."

             "என்ன அவன் ஒழுங்கா படிக்கிறானா... மார்க் ரொம்ப குறைஞ்சு இருக்கு... "

             "ஆமாங்க அவன் புக் எடுக்குறதே இல்ல சொன்னா எங்க கேக்குறான்"

             "சரிசரி நான் அவன்கிட்ட பேசுறேன் ஆங்.. அப்பாவுக்கு உடம்பு சரி இல்லயாம்    ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போகச் சொன்னார் அவர் சொல்லி ஒருவாரமாச்சு எனக்கும் நேரம் கிடைக்கல சாய்திரம் அழைச்சிட்டு போறேன்னு சொல்லு"

            "ஏங்க... நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க உங்க அப்பாவ ஓல்டு ஏஜ் ஹோம்ல சேர்த்துரலாங்க என்னால வச்சுகிட்டு சமாளிக்க முடியல சளி தொல்லை வேற.."

           "என்ன கவிதா சொல்ற நீ என்னை பெத்த பாவத்த தவிர வேற என்ன பாவம் செஞ்சாங்க இங்கேயே ஒரு மூலையில இருந்துட்டு போகட்டுமே..."

          "இங்க பாருங்க உங்ககிட்ட எத்தனையோ தடவை சொல்லியாச்சு நீங்க கேக்குறதா இல்ல இனிமே என்னால பொறுமையா இருக்க முடியாது இங்க சும்மாதானே இருக்காங்க அத அங்க போய் இருக்கட்டுமே அவங்களும் நல்லா கவனிச்சுப்பாங்க மாசம் மாசம் பணம் அனுப்பிறளாம்..."

          "சரி சரி சாய்ந்திரம் ஒரு முடிவடு வர்றேன்..."

          மறுநாள் மனைவியின் ஆலோசனைப்படி அப்பாவை ஓல்டு ஏஜ் ஹோம்ல சேர்த்துவிட்டான்.

          வருடங்கள் நகர்ந்தன மகன் அருண் ஒருநாள் திடீரென்று ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றான் சுரேஷ்க்கும் கவிதாவுக்கும் அதிர்ச்சி

            "என்னப்பா... இப்படி செஞ்சிட்ட பெத்த எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல..."

           "என்னப்பா... சொல்றீங்க யார்கிட்ட சம்மதம் கேட்கனும் எனக்கு அவளை
பிடிச்சுருக்கு அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு நாங்க கல்யாணம்
பண்ணிக்கிட்டோம்"

          "பெத்தவங்ககிட்ட சம்மதம் வாங்குறதெல்லாம் அந்த காலம் இது டொண்டி பர்ஸ்டு செஞ்சுரி புரிஞ்சுகோங்க என்றபடி புது மனைவியை அழைத்துச் சென்றான் அருண்.

            சில வருடங்களுக்கு பிறகு சுரேஷ்சும் கவிதாவும் அந்த ஓல்டு ஏஜ்  ஹோமில் சேர்க்கப்பட்டனர் சுரேஷ் அப்பாவை போய் பார்த்தான் அவர் ரொம்ப மெலிந்து காணப்பட்டார் அப்பா.. அப்பா.. மெல்ல அழைத்தான்.

             அவர் தட்டு தடுமாறி கண்ணாடி எடுத்து போட்டப்படி யாரு.. யாரு.. யாரு என்ன கூப்பிட்டது...? நான்தான்ப்பா சுரேஷ் வந்திருக்கேன் நல்லா இருக்குறீங்களாப்பா..."

             "வாப்பா.. சுரேஷ் நல்லா இருக்குறீயா உன்னை கண்ணால பார்க்க முடியலங்குற குறைய தவிர நான் நல்லா இருக்கேன் நீயும் தவறாம பணம் அனுப்புற இல்ல என்னை நல்லா கவனிச்சுகுறாங்கப்பா..." என்றார் சிறு நடுக்கத்தோடு

         "என்னை மன்னிச்சுருங்கப்பா உங்கள சுமையின்னு நினைச்சு எந்த ஹோம்ல விட்டேனோ அதே ஹோம்ல இப்ப நானும் உங்க மருகளும் வந்திருக்கோம் முதுமை என்பது எல்லாருக்கும் வரும்னு நினைக்காம இருந்துட்டோம் நான் செஞ்ச தவறுக்கு கடவுளே எங்களை தண்டிச்சுட்டார் என அப்பாவின் கால்களைக் கட்டிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழுதான் சுரேஷ்.

                    முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பது உண்மை

Thursday, 31 July 2014

¤மாறியது நெஞ்சம்¤

                   சண்முக சுந்தரம் மதிய வெயில் மண்டையை பிளக்க மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார் "ம்ம்ம்... என்ன வெயில் இப்படி கொளுத்துது..." என்றவாறு மாட்டின் வாலை முறுக்கி தட்டி அதட்டினார் அவரின் அதட்டலுக்கு பயந்து மாடு வீட்டுக்கு விரைந்து சென்றது. 

                  வீட்டுக்கு வந்த சண்முக சுந்தரம் மாட்டை அவிழ்த்து கொட்டகையில் கட்டி 
வைக்கோல் போட்டு தண்ணி காட்டிவிட்டு கொல்லைபுறம் சென்று தொட்டியில் இருந்த 
தண்ணீரில் முகம் கைகால்களை கழுவிக் கொண்டு வந்தார். 

                 "என்ன சுந்தரி... சாப்பாடு ரெடியா..?" 

                "இதோ... ரெடியாட்டுங்க" என்றவாறு சாப்பாட்டு தட்டை வைத்து அதில் சாதம்,
வெண்டைக்காய் பொறியல், சாம்பார் என போட்டு வைத்தாள் அவரது மனைவி சுந்தரி. 

                சண்முகசுந்தரம் சாப்பிட்டுக் கொண்டே "எங்க உம்புள்ள இன்னும் வரலயா..." 
என்றார். 

               "இல்லங்க காலையில போனவன் இன்னும் காணும் மணி ரெண்டாச்சு மதியம் சாப்பிட கூட வரல பாவம் புள்ள என்ன பண்றானோ..." எனக் கவலையோடு சொன்னாள் சுந்தரி. 

              "இன்னும் கொஞ்சம் மோரை ஊத்து என்றவர் எதுக்கு அவனுக்கு இந்த வேண்டாத வேலை நான் அப்பவே சொன்னேன் கேட்டாதானே..."  

             "என்னமோங்க அவனுக்கு இந்த வயகாட்டு வேலை பிடிக்கல நான் படிச்ச படிப்புக்கு ஆபிஸ் உத்தியோகம்தான் பார்ப்பேன்னு பிடிவாதமா இருக்கான்" 

              சண்முகசுந்தரம் சாப்பிட்டு முடித்துவிட்டு தரையில் கையை ஊன்றி மெல்ல 
எழுந்தபடி "என்னமோ போங்க நீயும் ஓம்புள்ளையும் வேலை தேடுறானாம் வேலை..." 
என்றபடி வெளியே சென்று கை கழுவி விட்டு வந்து திண்ணையில் அமர்ந்தார்.

              அப்போது மகன் மகேஷ் வந்தான் "வாப்பா... இன்டர்வியூ நல்லபடியா முடிஞ்சுதா 
வேலை கிடைச்சுருமா..."  

            "நல்லபடியா முடிஞ்சுத்துப்பா நீங்க மனசு வைச்சா வேலை கிடைச்ச மாதிரிதான்" 
என்றான் தயங்கிபடி. 

            "என்னப்பா... சொல்றே நான் மனசு வைக்கணும்..?" என்றார் புரியாமல். 

            "இன்டர்வியூ எல்லாம் சும்மா கண்துடைப்புப்பா நாலு லெட்சம் பணம் 
கொடுத்துட்டா வேலை கிடைச்சிடும் அதுக்கு நீங்கதான் மனசு வைக்கணும்" 


           மகனின் பேச்சைக் கேட்ட சண்முகசுந்தரம் கலகலகலவென சிரித்தபடி "என்னது... 
என்னது... பணம் கட்டணுமா? ஏம்பா இந்த பணத்தை கட்டிதான் வேலைக்கு சேரனுமா 
நம்ம கொல்லையில நூறு பேரு வேலை பார்க்குறாங்க நீ என்னடான்னா இன்னொருத்தன் கிட்ட கட்டி கைட்டி வேலை பார்க்க நிக்கிற" என்றவர் மேலும் தொடர்ந்தார் 

            "ஏம்பா... நமக்கு நஞ்சையும் புஞ்சையும் ஏக்கர் கணக்குல இருக்கு அதோடு ஏழு 
தலைமுறைக்கு உக்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு பணம் காசு சேர்த்து வைச்சுருக்கேன் அப்படி இருக்கும்போது வேலை தேடி ஏன் அலையுற... இந்த வேலை பார்த்துதான் நாம சாப்பிட போறமா? எத்தனையோ இடத்துல இளைஞர்கள் சொந்த வீடும் இல்லாம, நிலமும் இல்லாம வெறும் படிப்பை மட்டும் நம்பி வேலைக்கு கம்பெனி கம்பெனியா ஏறி இறங்குறாங்க... ஆனா அவங்களுக்கு இந்த வேலை கிடைக்குறதுல்ல காரணம் உன்ன மாதிரி பணக்கார இளைஞர்கள் பணத்தைக் கட்டி அந்த வேலையை தட்டி 
பறிச்சுகுறதாலதான். வருமானமே இல்லாத இளைஞனுக்கு இந்த வேலை கிடைச்சா எவ்வளவு உதவியா இருக்கும் கீழ்நிலையில இருக்குற அவங்க கொஞ்சம் மேல்நிலைக்கு வரட்டுமே பணக்கார நாம வாழிவிட்டு ஒதுங்கி நிற்போம் நீ உன் படிப்பை வீணாக்க வேணாம் இந்த விவசாயத்துல அத பயன்படுத்து படிப்பு அறிவு வளர்த்துக்கதான்னு நினைச்சுக்க அதுல ஒரு சந்தோஷம் கிடைக்கும்"  

             மகேஷ் ஒன்றுமே பேசாமல் சாப்பிட்டுவிட்டு போய் படுத்தான் படுத்தவன் அப்பா 
சொன்னதை சிந்தித்தவன் ஒரு முடிவோடு தூங்கிபோனான். 

            மறுநாள் காலை கணேஷ் "அம்மா... அம்மா... நான் வயலுக்குப் போறேன் அப்பாவுக்கு சாப்பாடு ஏதாவது கொண்டுபோகணுமா?" என்றவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள் சுந்தரி. 

           "என்னப்பா... சொல்ற வயலுக்கு போறீயா? என்ன திடீர்னு 

           "ஆமாம்மா... இனிமே அப்பாவுக்கு உதவியா இருக்கலாம்னு நினைக்கிறேன்" என்றவனை நம்பமுடியாதவளாய் "இந்தப்பா இதுல மோர் இருக்கு அப்பாகிட்ட கொடுத்திரு" என்று ஒரு தூக்குசட்டியை கொடுத்தாள் புன்னகைத்தப்படி 
     
                                                            








               கணேஷ் அந்த தூக்குசட்டியை தூக்கி கொண்டான் நடந்தான் சிறிது நேரத்திற்கு
பிறகு வயல் வந்து சேர்ந்தான் பச்சை பசேல் என்று வயல் அதில் இவனின் காலடி 
சத்தம் கேட்டு செந்நாரைக் கூட்டங்கள் கும்பலாக மேலே பறந்து சென்றது 
காற்றில் ஆடும் நாற்றுக்கள் அங்குமிங்கும் அசைந்தபடி இவனை வரவேற்பது போலவே 
இருந்தது அந்த காட்சிகள் மனதிற்கு ஒரு புத்துணர்வை தந்தது. 

            தூரத்தில் மகன் வருவதைக் கண்ட சண்முகசுந்தரம் உள்ளுக்குள் மகிழ்ந்தார். மகன் அருகே வந்ததும் "வாப்பா... இப்பதான் வர வழி தெரிஞ்சுதா? விவசாயம் ஒன்னும் தவறான தொழில் இல்லப்பா ஏன் எல்லாரும் அறுவறுப்பா பார்க்குறீங்க உங்கள மாதிரி படித்த இளைஞர்கள் தங்கள் அறிவை பயன்படுத்தி பொறுப்பா பார்த்துகிட்டா நம்மா நாட்டுக்கு ஏன் பஞ்சம் வரப்போகுது புதுசு புதுசா யோசிங்க விவசாயத்து ஒரு புரட்சியை உண்டு பண்ணுங்க நம்ம நாட்டுக்கு உணவு பஞ்சமே வராது யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்ல அதோடு பெத்த புள்ள கஞ்சி ஊத்தலன்னாலும் நாம பார்க்கிற விவசாயம் நமக்கு கஞ்சி ஊத்தும்பா" என்றவர் அர்ந்தம் பொதிந்த பார்வையுடன் மகனை நோக்கினார். 

              அவரின் வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்த கணேஷ் நெற்கதிர் போல் தலை குனிந்து கேட்டுக்கொண்டிருந்தான். 

                                                                 *** முற்றும் *** 

ஸ்ரீசந்திரா

Tuesday, 17 June 2014

ஞானோதயம் சிறுகதை

             

              காலை 8 மணி கணேஷ் படுக்கையைவிட்டு எழுந்து கைகளை மேலே தூக்கி சோம்பல் முறத்தப்படி கொல்லைப்புறம் சென்று முகம் கழுவி பல் விளக்கிவிட்டு வந்து திண்ணையில் அமர்ந்தான்.

               கணேஷின் தாய் கமலம் டம்ளரில் காபியை மகனிடம் கொடுத்தப்படி "ஏம்பா... நீ எங்கேயாவது வெளியில போற வேலை இருக்கா" என்றாள் மெதுவாக

            "ஏன் கேக்குற..." என்றான் சற்று எரிச்சலுடன்.

            "இல்ல கடையில சாமான் கொஞ்சம்தான் இருக்கு டவுனுக்கு போய் வாங்கிட்டு வரணும் நீ கொஞ்ச நேரம் கடையை திறந்து பார்த்துகிட்டா" என்று சொல்லி முடிக்கும்முன்.

             கணேஷ் "இதபாரும்மா... இந்த பொட்டி கடையில உக்காறா வைக்கவா என்னை இவ்வளவு படிக்க வைச்ச... என்னால முடியாது நீ போறதுன்ன கடையை பூட்டிட்டு போ" என்றான் சற்றே உரத்த குரலில். கமலம் ஏதோ சொல்ல நினைத்தவளாய் வாய்திறந்த போது

               "அம்மா... அம்மா..." என்று வெளியே குரல் கேட்கவே எட்டிபார்த்தாள் அங்கே ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். "என்னப்பா... என்ன வேணும் உனக்கு"

              "நான் இன்ஸிடெண்ட் காபி பவுடர் விற்பனை செய்யுறேன்... ஒரு பாக்கெட்டின் விலை 20 ரூபா வாங்குறீங்களா..? ரொம்ப நல்லா இருக்கும் ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் பவுடர் கொட்டி கலக்கினால் போதும் காபி ரெடி சாப்பிட்டு பாக்குறீங்களா..." என்றவன் பிளாஸ்கில் கொண்டுவந்த வெந்நீரை ஊற்றி அதில் பவுடரை கலந்து கொடுத்தான்.

              வாங்கி குடித்தவள் காபி நல்ல மணத்துடன் நன்றாக இருக்கவே "ஒரு இரண்டு பாக்கெட் கொடுப்பா" என்றவள் ஐம்பது ரூபாய் பணத்தையும் கொடுத்தாள் பணத்தை வாங்கியவன் மீதி பணத்தை கொடுப்பதற்கு ஷர்ட் பாக்கெட்டில் இருந்து மணிபர்சை எடுத்தபோது அதிலிருந்து ஐடென்டிகார்டு நழுவி அங்கே விழுந்தது. வெளியே வந்தகணேஷ் கண்ணில் பட்டது குனிந்து எடுத்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அதில் ஆர்.சரவணன் எம்.எஸ்சி., மேத்ஸ் பாரதிதாசன் யுனிவர்சிட்டி என்றிருந்தது அதே ஆச்சரியத்தார் சார்.. சார்.. ஒரு நிமிஷம் நில்லுங்க என்றான். தன்னை யாரோ கூப்பிடுவதை உணர்ந்த அந்த இளைஞன் நின்று திரும்பி பார்த்தான்.

Friday, 9 May 2014

கனவு மெய்பட வேண்டும்


                     சுந்தரம்பிள்ளை அந்த காலைவேளையில் வேர்க்க விறுவிறுக்க பார்வையை தூரத்தில் போட்டப்படி வாசலுக்கும் வீட்டுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.

                    அவருக்கு வயது அறுபது இருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் தான் உயிரோடுஇருக்கும்போதே தன் ஒரே மகளுக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்று மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கிறார். ஆனால் தகுந்த மணமகன் இதுவரை அமையவில்லை. இப்ப கூட மாப்பிள்ளை வீட்டுக்காரர்களின் வருகைக்காக காத்துகொண்டிருக்கிறார். " பத்துமணிக்கெல்லாம் வறேன்னு சொன்னாங்க இன்னும்வரலேயேன்னு" நினைக்கும்போதே வாசலில் கார் வந்து நின்றது அதிலிருந்து பத்து பேர் வந்து இறங்கினார்கள்.

                  சுந்தரம்பிள்ளை வாய் நிறைய பல்லாக "வாங்க வாங்க எல்லாரும் வாங்க " என சிரித்தப்படியே வரவேற்றார். வந்தவர்களை வீட்டுக்குள் அழைத்து அங்கிருந்த ஷோபாவில் அமர வைத்தார். நேரம் கரைந்து கொண்டிருந்தது அப்ப ஒருத்தர் பொண்ண வரச்சொல்லுங்க என்றார்.