Saturday 18 April 2020

காற்றின் மொழி

        வணக்கம்...நேயர்களே இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது நேயர் விருப்பம்.. நேரம் இப்போது சரியா காலை 9 மணி 55 நிமிடம் ஆகிறது. நிகழ்ச்சியின் நிறைவு பகுதிக்கு வந்துவிட்டோம் இப்போது லைன்னில் ஒரு நேயர் காத்திருக்கிறார்... "வணக்கம் .. வணக்கம் .. லைன்ல இருக்குறீங்க பேசுங்க...  யார் எங்கிருந்து பேசுறீங்க..?"

"வணக்கம் ... வணக்கம்... அக்கா..  மருதமுனையில் இருந்து நிஷாந்தன் கந்தையா கதைக்கிறன் ரொம்ப நாளா ட்ரைப் பண்ணிட்டு இருந்தனான் லைன் கிடக்கல இன்றைக்குத்தான்  கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷம் அக்கா  உங்கட வாஸ் என்றால்  எனக்கு ரொம்ப இஷ்டம் அக்கா உங்க நீண்ட கால ரசிகன் அக்கா.. "

"அப்படியா... ரொம்ப சந்தோஷம் நிஷாந்தன் சரி சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும்..?" என்றாள் சரித்தபடி

"அக்கா... வசீகரா படத்துல இருந்து பூப்போல தீ போல மான் போல மழைப் போல வந்தாள்
சாங் தருவிங்களா?"

"சரி நிஷாந்தன் யார் யாருகெல்லாம் பாடல் வேண்டும்..."

 "எனக்காகவும் எங்கட குடும்பத்தார் நண்பர்கள்,ரேடியோ கேட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் கேட்போம் அக்கா உங்க கூட கதைச்சதில் ரொம்ப சந்தோஷம்  அக்கா..நன்றி" எனக்கூறியபடி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

"நிஷாந்தன் நீங்க கேட்டப் பாட்டு இதோ வந்துட்டு இருக்கு இப்போது நான் விடை பெறும் நேரமும் வந்திடுச்சு உங்களிடம் இருந்து விடைப் பெற்றுக்கொள்ளும் நான் கெளரி வணக்கம் நேயர்களே... என்று கூறியபடி ஒலிநாடாவை சுழலவிட்டு ஸ்டியோவை விட்டு வெளியே வந்தாள் கெளரி..