இலக்கை
இயம்புவது இலக்கியம் குறிக்கோளைச் சுவைப்பட கூறுவது இலக்கியம் என்கிறார்
நாவலர் சோமசுந்தர பாரதியார். கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம்
இந்நான்கும் கொண்டது இலக்கியம் அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே
என்கிறது நன்னூல்.
பிறன்மனை நோக்காத பேராண்மையை இராமயணம் வலியுறுத்துகிறது இந்த இப்பிறவிக்கு
இருமாந்தரைச் சிந்தையாலும் தொடேன் என்கின்றான் இராமன். பிறன்மனை நோக்கினான்
இராவணன் பெண்ணாசையால் பேரழிவை சந்திந்தான் மண்ணாசையால் மாபெரும் அழிவை
சந்தித்தான் துரியோதணன் இதனை தெளிவாக விளக்குகிறது நூல்கள்.
பழந்தமிர் நாகரித்தையும் பண்பாட்டையும் பறை சாற்றுவதாக இலக்கியங்கள்
கூறுகிறது.
"முந்தை இருந்து நட்போர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்"
என்கிறது நற்றினை
"நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்"
என்கிறது புறனாறு.