Thursday, 30 July 2026

சம்பா நண்டு எப்படி இருக்கும்

 

 எத்தனை பேருக்கு இந்த நண்டு பிடிக்கும்..? இதன் சுவையை அடிச்சுக்கவே முடியாது அப்படி இருக்கும் எழுத்துக்களால் வடிக்கவே முடியாதே அந்தளவுக்கு இருக்கும்.. இதன் கால்கள்தான் ஹைலைட் இரண்டு கால்களும் நம் கை பெரிதில் இருக்கும் கால்களுக்கு தான் காசு.. வீட்டில் நண்டு சமைத்தால் இந்த கால் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதவர்கள் ஏராளம் 90s கிட்ஸ்க்கு இந்த அனுபவம் நிறைய இருக்கும்.. சிக்கனில் இப்பதான் லாலிப் பப்புன்னு கண்டு பிடிச்சு சாப்பிடாறாங்க ஆனால் நாங்க அப்பவே நண்டு காலில் லாலி பப்புன்னு சாப்பிட்டவங்க.

.

இந்த நண்டின் நெறி கூடுதலான சதைப்பற்றோடு இருக்கும்.. சாப்பிடும் போது ஒருவிதமான இனிப்போடு இருப்பது போல் இருக்கும் அதை சாப்பிட்டவங்களுக்கு கண்டிப்பா தெரியும்.. அதாவது கடல் நண்டை விட இதுவும் கடல் நண்டு மாதிரிதான் இது கடற்கரையில் வளரக்கூடியது... கடித்தால் கையே துண்டாகும் அந்தளவுக்கு பயங்கரம் ஆனால் அதன் சுவையோ அதைவிட பயங்கரமா இருக்கும்...


அந்த காலை கடித்து சாப்பிடுவது ரொம்ப கஷ்டம் அறுவா கொண்டு உடைத்து சாப்பிடுவோம் அந்தளவுக்கு கெட்டி ஒரு பத்து வருசத்திற்கு முன் ஒரு நண்டு 50, ,100 க்கு வாங்கினோம் இப்ப ஒரு நண்டு 1000 க்கும் மேல விலை போகுது.. இப்ப இந்த நண்டு கிடைப்பது அரிது எல்லாவற்றையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.... அதனால் நமக்கு கிடைப்பதில்லை அதோடு விலை நம்மை கிட்ட நெருங்க விடுவதில்லை... முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை அருகே உள்ள சுந்தரம் நசுவிணி ஆற்றிலும், ராஜாமடம் நசுவிணி ஆற்றிலும் இந்த நண்டுகள் மணலில் பதுங்கி கிடக்குமாம்... ஈசியா பிடித்து வருவார்களாம் எங்க மாமா அடிக்கடி சொல்வார்..

ஒரு நேரத்தில் ஈசியா கிடைத்த உணவுகள் இப்ப அதிக விலைக்கு விற்பதால் வாங்கி சமைப்பதற்கு முடிவதில்லை... யாரெல்லாம் இந்த நண்டு சாப்பிட்டு இருக்குறீங்க யாருக்கெல்லாம் பிடிக்கும்..? யாரெல்லாம் விலையின் காரணமாக சாப்பிடாமல் இருக்குறீங்க என்பதையும் சொல்லுங்க... கடல் உயிரனங்களில் அதிக சத்து உடையது நண்டு, இறால்,  திருக்கை, மத்தி, சூரை இவைகள் தான்... 

Wednesday, 29 July 2026

சுகிசிவம் அவர்கள் சொன்ன ஜோக்

ஒரு குட்டியான நகைச்சுவை கதை எப்பவோ கேட்டது சுகிசிவம் அவர்கள் சொன்னது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு நண்பர்கள் சந்தித்து கொண்டார்களாம், அந்த 
நண்பரை வரவேற்க வாசலிலே காத்திருந்து வந்தவுடன் கட்டித்தழுவி வீட்டுக்குள் 
அழைத்து போகும் போது அவரோட மகன் ஓடியாடி விளையாடி கொண்டு இருந்தானாம் வந்த 
நண்பரை அவனை பார்த்துவிட்டு சொன்னாராம் "அடடே... உம்பையனா? குண்டா 
கொழுகொழுன்னு  நல்லா இருக்கானே..." என்று சொல்லி வாய் மூடவில்லையாம் ஓடி 
வந்த பையன் 
கீழே விழுந்து கையை ஒடித்துக்கொண்டானாம் அப்பவே அவருக்கு மனதில் 
சுருக்கென்று தைத்ததாம் என்னடா இவன் சொன்னதும் இப்படி ஆச்சே என்று. 

அதன் பிறகு அந்த நண்பரை அழைத்து டைனிங் டேபில் அமர வைத்து வகை வகையாய் 
இலையில் சாப்பாடு, கூட்டு, பொறியல், பாயசாம், சுவிட், பழங்கள் என நிறைய 
வைத்து சாப்பிட சொன்னார்களாம் 
உடனே வந்த நண்பர் சொன்னாராம் "அடடே... சாப்பாடெல்லாம் அமர்க்களமா 
இருக்கே... தினமும் ஒரு நேரத்திற்கு இவ்வளவுமா சாப்பிடுறீங்க..?" 
என்றாராம். உடனே இவர் என்னாகுமோ தெரியலேயேன்னு நினைக்கும் போதே அங்கே 
வைத்திருந்த ஜக்கில் கை பட்டு சாப்பாட்டில் தண்ணீர் கொட்டிவிட்டதாம்.

அவருக்கு அப்போதே புரிந்து விட்டது இவர் இந்த மாதிரி எதிர்மறையான விஷயங்கள்
 சொன்னால் உடனே நடந்து விடுகிறதே என்று நினைத்தவர் இவரை வைத்து ஒரு நல்ல 
விஷயம் செய்வோம் நம்ம வயலில் நிறைய களை இருக்கிறது அதைப் பார்த்து எவ்வளவு 
களை இருக்கிறது என்று சொன்னால் களை மொத்தமும் அழிந்துவிடும் நமக்கும் களை 
எடுக்கிற கூலி மிச்சம் என்று நினைத்தப்படி 
சாப்பிட்டு முடிந்ததும் தன்னோட வயலுக்கு அழைத்து சென்றார். 

இந்த வயலைப் பாருங்க உங்களுக்கு என்ன தோணுது என்றார். வந்த நண்பர் உடனே 
சொன்னார் "இவ்வளவு களையிலும் இந்த பயிர் எப்படி செழிப்பா வளர்த்திருக்கு 
பாருங்க..." என்றாராம். 

அழைத்து வந்தவருக்கு பகிர் என்றதாம் அப்புறம் என்ன அந்த பயிர் விளங்கவா 
போகுது சர்வ நாசம் தான். இப்படியான நண்பர்கள் நம்மிடையும் இருக்கிறார்கள் 
இவர்களை கண்டால் நாம் விளகிதான் இருக்க வேண்டும். நண்பனுக்கு கஷ்டம் 
வந்தால் ஆறுதல் சொல்ல வேண்டும் அதற்காக இவ்வளவு கஷ்டத்திலும் நோய் நொடி 
இல்லாம நல்லா இருக்குறீயேன்னு சொன்னா எப்படி இருக்கும்.   

கல்லடி பட்டாலும் கண்ணடி படகூடாது என்று சும்மாவா சொன்னார்கள்.

- வீ. சந்திரா துவரங்குறிச்சி

மீனாட்சி சுந்தரேஷர் ஆலயம் துவரங்குறிச்சி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் இராம சமுத்திரம் என்று அழைக்கப்படும் துவரங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷர் ஆலயம் அமைந்துள்ளது. பசுமை நிறைந்த இடத்தில் செந்தாமரை குளக்கரையில் அமைந்திருக்கிறார் எம்பெருமான் ஈசன். இந்த கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி போன்ற பூஜைகள் தவறாமல் நடந்து வருகிறது. சங்கரர் இந்த குளத்தில் தாமரை மலர்களை பறித்து சிவனுக்கு பூஜை செய்ததாக வரலாறு சொல்கிறது. 
இந்த கோவில் பழுதடைந்த கிடந்த நிலையில் 2025 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. ஒரு வருட பூர்த்தியும் நிறைவு பெற்றது இந்த கோவில் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. துவரங்குறிச்சி செக்கடி பஸ் ஸ்டாப்பில் இறங்கி இடது புறமாக கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது. 
இந்த கோவிலுக்கு அனைவரும் வருக இறை ஆசி பெருக.. 

வீ. சந்திரா , துவரங்குறிச்சி

Monday, 21 July 2025

திருவெற்றியூர் பாகம்பிரியாள்

திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு ஒரு முறை என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா நான் மூனு பேரும் பாகம்பிரியால் கோவிலுக்கு போனோம்.இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கோவில் அது. என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா ரெண்டு பேரும் அந்த கோவிலுக்கு போகனும்னு ஒரு வருசமா உண்டியலில் காசு சேர்த்து அந்த காசுல பஸ் செலவு ஆரம்பிச்சு அந்த கோவிலுக்கு போற வரைக்கும் ஆகுற செலவு அந்த காசுல தான் செலவு பண்ணின்னாங்க. எனக்கும் அந்த காசுல தான் செலவு செய்து கூட்டிட்டு போனாங்க அங்க போன பிறகுதான் தெரியும் அந்த அம்மன் சிவனோடு இருக்கிற ஒரு கோவில் என்று அதற்கு முன் தெரியாது அதுவரை அம்மன் கோவில் என்றே நினைத்திருந்தேன். பாகம்பிரியாள் என்ற பெயர் தான் விளங்கியிருக்கிறது.  அந்த கோவில் அருகே இருக்கும் புற்றில் சேவல் பலி கொடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.



Tuesday, 27 May 2025

திருக்கடையுர் போகலாம் வாங்க

திருக்கடையூர் போகவேண்டும் என்று சட்டென்று தோண அம்மாவும் நானும் அதிகாலையிலயே மயிலாடுதுறை பயணித்தோம்.. பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி அங்கிருந்து கும்பகோணம் அங்கிருந்து மயிலாடுதுறை அங்கிருந்து திருக்கடையூர் சென்றடைந்தோம். சரியாக பட்டுக்கோட்டையில் இருந்து 6 மணிக்கு கிளம்பினோம்  பஸ் தான் மன்னார்குடிக்கு டிக்கெட் 20 ரூபாய் இருவருக்கும் 40 மன்னார்குடியில் 7 to 8  கும்பகோணம் 2 டிக்கெட்  50 ரூபாய் 9 மணிக்கு மயிலாடுறை சென்றுவிட்டோம். மயிலாடுறையில் 9 மணி to திருக்கடையூர் 10 மணி. 2 டிக்கெட் 60 ரூபாய். மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்ல பணம் இல்லை மகளீர்  இலவச பேருந்து அங்கிருந்து திருக்கடையூர் ஒரு மணி நேரம் ஆச்சு ஆக சரியாக 11 மணிக்கு கோவிலுக்கு வந்துவிட்டோம். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமா இருந்தது  நாங்கள் கோவிலுக்கு நுழையும் வேளையில் மேளத்தாளத்தோட நாதஸ்வரம் பழத்தட்டோடு வந்துகொண்டிருந்தார்கள் அது எங்களை வரவேற்பது போல் இருந்தது.. 



Thursday, 8 June 2023

திருவணைக்காவல் போகலாம் வாங்க

                  ரொம்ப நாளாக எந்த கோவிலுக்கும் போக நேரமில்லை. சமீபத்தில் எனது பிறந்த நாள் அன்று திருவணைக்காவல் கோவில் சென்றேன். தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் திருச்சிக்கு 1to1 பஸ் நின்றிருந்து தஞ்சையில் ஏறினால் திருச்சியில் தான் போய் இறங்க முடியும் வேற எங்கும் வண்டி நிற்காது. நான் அந்த பேருந்தில் ஏறினேன் பஸ்ஸில் ஏறியதும் ஜன்னல் ஓர சீட்டா பார்த்து உட்கார்ந்தேன் கன்ட்ரைக்கடர் டிக்கெட் ..டிக்கெட்... ம்மா.. இப்பவே டிக்கெட் வாங்கிடுங்கம்மா கன்ட்ரைக்டர் வரமாட்டார் என்று சொல்லிக்கொண்டே வந்தார் நான் ஆச்சரியத்தோடு திருச்சி ஒன்னு என்று பணத்தை நீட்டினேன். அவரும் டிக்கெட்டை கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றார். நடத்துநர் இல்லாத பேருந்தா என்ற வியப்பு எனக்குள் பரவாயில்லையே இது கூட நல்லாதான் இருக்கு என நினைத்துக்கொண்டேன். எனக்கு அருகே இருந்த பெண்ணுக்கும் அதே ஆச்சரியம்தான். பஸ் ஏறிய சற்று நேரத்தில் பஸ் கிளம்பியது என் அருகே இருந்த பெண் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தது. நான் பேக்கை திறந்து கடையில் வாங்கிய மசால் வடையை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு ஜன்னல் வழியே பார்வையை வீசினேன் நெடுஞ்சாலை மிக அழகாக இருந்தது. 5 வருடத்தில் நிறைய மாற்றம் தெரிந்தது வழியெங்கும் பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி சென்றேன். கையில் இருந்த மொபைலை எடுத்து திருச்சியை நோக்கி பயணம் என்று பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டேன் அன்று எனது பிறந்த நாள் என்பதால் சில நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள் அதற்கெல்லாம் நன்றியை தெரிவித்தேன் என்னதான் நம்மை நேரில் பார்க்காது பழகாது இருந்தாலும் மனம் நிறைந்து வாழ்த்து சொல்ற மனசு பெரிய மனசுதானே.. நம்மோடு பழகியவர்கள் கூட வாழ்த்து சொல்ல மனசு வராதா போது யாரோ எவரோ சொல்ற அந்த வாழ்த்து மனசுக்கு சந்தோஷம்தான். இந்த நவீன உலகத்தில் இது சற்று ஆறுதலான விஷயம்தான். சற்று நேரத்திற்கெல்லாம் திருச்சி வந்துவிட்டது எனக்கு இன்னும் வியப்பு கூடிவிட்டது ஒரு மணி நேரத்தில் இந்த பஸ் திருச்சி வந்துவிட்டதே என்று. பஸ்ஸை விட்டு இறங்கியதுமே திருவணைக்காவல் பஸ் எனக்காக ரெடியா நிற்பது போலவே நின்றது நான் பஸ் ஏறியதும் பஸ் புறப்பட்டது இந்த பஸ் திருவணைக்காவல் போகுமா என்று டிரைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏன்னா நாம தெரியாம ஏறிவிட்டு அப்புறம் அவர்களிடம் திட்டு வாங்கி இடையில் இறங்க கூடாதில்லையா அதனால். சற்று நேரத்தில் திருவணைக்காவல் வந்துவிட்டது நானும் இறங்கி மெல்ல நடந்தேன் சாலையில் இருப்பக்கமும் கடைகள் பூஜை பொருட்கள் இருந்தது ஒரு பூக்கடையில் பூ வாங்கினேன் நல்ல நெருக்கமாக கட்டிய மல்லியப்பூ  முழம் முப்பது ரூபாய் இரண்டு முழம் வாங்கினேன் சற்று தள்ளி ஒரு அர்ச்சனை கடையில் அர்ச்சனை வாங்கினேன் அம்பாளுக்கா? அய்யனுக்கா என்றார் கடைக்காரர் அய்யனுக்கே கொடுங்கோ என்றேன். அவரும் நான் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தார் நான் வாங்கிகொண்டு பணத்தை கொடுத்தேன் அவறும் புன்முறுவலோடு வாங்கிக்கொண்டு இதை பிள்ளை வையுங்கன்னு இலவச இணைப்பா அருகம்புல்லை நீட்டினார். 

Saturday, 8 April 2023

கெண்டை மீன் குழ்ம்பு|வறுவல்

பழைய முறையில் கெண்டை மீன்நகுழம்பு
செய்முறை:
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்


https://youtu.be/TTblYcxhQwE

Saturday, 29 October 2022

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் போகலாம் வாங்க




              ஒரு நாள் திடீர்னு சென்னைக்கும் பக்கத்துல இருக்கிற 
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு போகனும்னு தோணுச்சு நாம வழக்கமா அப்படித்தான் கிளம்புவோம். காலையில் 7 மணிக்கு கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு பஸ் ஏறினேன் நான் நினைச்சேன் பக்கத்துலதான் இருக்கும் போயிட்டு சீக்கிரம் வரலாம் னு அப்புறம் தான் தெரியுது அது சென்னையில் இருந்து 60கி.மீ னு அச்சச்சோ இது தெரியாம நாம பாட்டுக்கும் அசால்டா கிளம்பிட்டோமேன்னு உள்ளுக்குள்ள திக்..திக்.

Friday, 28 October 2022

புத்தக வாசிப்பு என்பது ஆழ்நிலை தியானம் போன்றது

முன்பெல்லாம் புத்தக வாசிப்பின் பசி எனக்கு அதிகமாக இருந்தது. கைகளில் புத்தகம் இல்லாத நாட்களை நான் வெறுமையாக உணர்ந்திருக்கிறேன். எழுத்துக்கூட்டி படித்த காலத்திலே ராணிகாமிஸ் படிக்கத் தொடங்கினேன் அதன் பிறகு தொடர்ந்து கொண்டே இருந்தது. படிக்காத புத்தகமும் இல்லை தெரியாத எழுத்தாளரும் அல்ல. படிக்க படிக்க நிறைய அனுபவம் கிடைத்தது ஆனால் மனிதர்களிடம் இருந்து விலக்கி வைத்தது. சாலை ஓரங்களில் கூட பேப்பர்களை பொரிக்கு வந்து படித்த நாட்கள் உண்டு அந்தளவுக்கு புத்தக புழுவாக என்னால் இப்போது ஒரு புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை. 

Sunday, 9 October 2022

ரவா அப்பம் செய்வது எப்படி

கீழே உள்ள லிங்கை அழுத்தி தெரிந்துகொள்ளவும்

https://youtu.be/ZEhCEw2i_C4