Tuesday, 27 May 2025

திருக்கடையுர் போகலாம் வாங்க

திருக்கடையூர் போகவேண்டும் என்று சட்டென்று தோண அம்மாவும் நானும் அதிகாலையிலயே மயிலாடுதுறை பயணித்தோம்.. பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி அங்கிருந்து கும்பகோணம் அங்கிருந்து மயிலாடுதுறை அங்கிருந்து திருக்கடையூர் சென்றடைந்தோம். சரியாக பட்டுக்கோட்டையில் இருந்து 6 மணிக்கு கிளம்பினோம்  பஸ் தான் மன்னார்குடிக்கு டிக்கெட் 20 ரூபாய் இருவருக்கும் 40 மன்னார்குடியில் 7 to 8  கும்பகோணம் 2 டிக்கெட்  50 ரூபாய் 9 மணிக்கு மயிலாடுறை சென்றுவிட்டோம். மயிலாடுறையில் 9 மணி to திருக்கடையூர் 10 மணி. 2 டிக்கெட் 60 ரூபாய். மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்ல பணம் இல்லை மகளீர்  இலவச பேருந்து அங்கிருந்து திருக்கடையூர் ஒரு மணி நேரம் ஆச்சு ஆக சரியாக 11 மணிக்கு கோவிலுக்கு வந்துவிட்டோம். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமா இருந்தது  நாங்கள் கோவிலுக்கு நுழையும் வேளையில் மேளத்தாளத்தோட நாதஸ்வரம் பழத்தட்டோடு வந்துகொண்டிருந்தார்கள் அது எங்களை வரவேற்பது போல் இருந்தது.. 




முதல் முறையாக நான் எந்த கோவிலுக்கு சென்றாலும் அம்பாளுக்கு புடவை சாத்துவது வழக்கமா அமைந்துவிடும்.. இந்த முறையும் அப்படியே புடவை வாங்க வேண்டும் என்ற எந்த ஐடியாவும் இல்லை கோவிலை நெருங்கிய உடனே அங்கிருந்த கடையில் அருமையான பிங்க் நிற கலரில் ஒரு புடவை வாங்கினேன்.. ரோஜாப்பு மாலை சகிதம் அய்யனையும் அபிராமி தாயாரையும் பார்க்க சென்றாச்சு. அங்கே மூன்று அர்ச்சனை செய்ய வேண்டுமாம் அதனால் மூன்று அர்ச்சனை, 150 ரூபாய்க்கு வாங்கினேன்.. மூன்று அர்ச்சனை செய்ய வேண்டுமென்று தெரியாது வியாபாரிகள் ரெடியாக வைத்திருக்கிறார்கள் நானும் வாங்கிவிட்டேன் ஒரே இடத்தில் மூன்று தெய்வமும் இருக்கும் போல அதனால் தான் மூன்று அர்ச்சனை செய்ய வேண்டும் போல நினைச்சு சென்றேன் ஆனால் மூவர் சன்னதியும் தனித்தனியாக தான் இருக்கிறது உள்ளே சென்ற பிறகு தான் விபரமே புரிந்தது ஒவ்வொரு சன்னதிக்கும் கட்டுப்பாடற்ற கூட்டம் அலைமோதுவதால் புதிதாக செல்வோருக்கு ஒன்றும் புரியவில்லை அப்படித்தான் எனக்கும் புரியாமல் இருந்தது ஒவ்வொரு சன்னதிக்கும் தனித்தானியாக கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி எம்பெருமான் ஈசனையும் கால சம்கார மூர்த்திக்கும் அர்ச்சனை செய்தோம் அவை இரண்டும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதி கொடி மரத்துக்கு வெளி பிரகாரத்தில் தனி தாயார் சன்னதி இருக்கு நிறைய பேர் அங்கு தடுமாறி நின்றது தாயார் சன்னதி எங்கிருக்கு என்றுதான்  நானும் அப்படித்தான் தேடினேன் புதிதாக செல்வோருக்கு கண்டிப்பாக குழப்பமாக இருக்கும் அபிராமி அம்பாளையும் தரிசனம் செய்தோம்.. அம்பாளுக்கு வாங்கிய புடவை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அந்த புடவையில் அம்பாளுக்கு ஜோடித்தால் அருமையாக இருக்கும் என எனக்கு உள்ளுக்குள் ஒரு கற்பனை  அத்தனை கூட்டத்திலும் தத்தளித்து  தூரத்தில் இருந்து புடவையை நான் நீட்ட இந்த கூட்டத்தில் சாமிய பார்ப்பதே கஷ்டம் இதில் புடவை சாத்துவதை நாம் எப்படி பார்ப்பது நாம பார்க்கவில்லை என்றாலும் நமது புடவை அம்பாளுக்கு போய் சேர்ந்தால் சரி என மனநிலையில் நான் நிற்க அந்த நேரத்தில் எனக்கு முன்னாடி நின்ற பெண் உங்க புடவை சாத்துறாங்க பாருங்க என எனக்கு இடம் கொடுக்க ஒருவாறு பார்த்துவி்ட்டேன் மனசுக்கு நிறைவு அந்த பெண் சொல்லவில்லை என்றால் என்னால் பார்த்திருக்கவே முடியாது அந்த பெண்ணுக்கு நன்றி... புடவை, தங்கம் வெள்ளி என எந்த பொருளாக இருந்தாலும் அலுவலகத்தில் தனி ரசீது வாங்க வேண்டும் அதற்கு 100 ரூபாய் வாங்கிகொள்கிறார்கள் அர்ச்சனைக்கு ஒரு அர்ச்சனைக்கு தனியாக 5 ரூபாய் என ஒருவழியாக சாமி கும்பிட்டாச்சு.. 




அதுபோக 60/60, 80/80 கல்யாணம் செய்கின்றவர்கள் மாலை மாற்றிக்கொள்ள ஐயரிடம் சொல்லிவிட்டால் அவர்களே பூஜை செய்து விடுகிறார்கள் அதற்கு தனி பணம் கொடுக்க வேண்டும். ஆனால் என்ன க்யூ இல்லை முன்னாடி வந்தவங்க பின்னாடி வந்தங்க என தள்ளிக்கொண்டும் இடித்துக்கொண்டும் சாமி சரியாக கும்பிட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது அதை கொஞ்சம் கோவில் நிர்வாகம் கவனிக்க வேண்டும். வயதானவர்கள் தான் அதிகம் வருகிறார் அப்போ ஒருத்தரை ஒருத்தர் தள்ளினால் அவர்கள் தடுமாறி விழ நிறைய வாய்ப்பு இருக்கு எங்கம்மா மயக்கம் வருதுன்னு வெளியே போயிடுச்சு அவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்தது சாமியை பார்க்கத்தான் ஆனால் அதையும் பார்க்க முடியவில்லை என்று பலருக்கு வருத்தம். 12 மணியளவில் நடை சாத்திவிடுவார்கள் என  கூட்டம் வந்து தள்ளுகிறது ஆனால் நடை சாத்தவில்லை அதனால் நீங்கள் அமைதியாக கும்பிடலாம். கூகிளில் 12 மணிக்கு நடை சாத்துவதாக போட்டிருப்பதால் அந்த கூட்டம் சேர்கிறது. அதன்பிறகு மறுமுறை கூட்டம் குறைந்ததும் எங்கம்மாவை அழைத்து போய் சாமியை காட்டினேன். 


இங்குதான் எனக்கொன்று தோன்றியது வயது இருக்கும் போதே எல்லா கோவிலுக்கும் சென்று வந்துவிட வேண்டும் வயதான பிறகு அந்த கூட்டத்தில் நாம் சாமியை பார்க்கவும் முடியாது அதற்கு நமது உடல் நிலையும் இடம் கொடுக்காது வயது இருக்கும் போதே போகவேண்டிய கோவிலுக்கு சென்று வந்துவிடுவது நல்லது. ஏனென்றால் நம்மால் நம் கூட வந்தவர்களுக்கும் சிரமம் கொடுக்க கூடாது நம்மால்   அவர்களுக்கும் கஷ்டம். வயசு இருக்கும் போதே நீங்களும் சென்று வந்துவிடுங்கள் வயதான பிறகு ரொம்ப கஷ்டம். 


இந்த கோவில் எங்கே இருக்கிறது என்றால் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கப்பாடி வட்ட்தில் திருக்கடையூர் கிராமத்தில்  இருக்கிறது. முன்பு தஞ்சை மாவட்டத்திலும் அதன்பிறகு நாகப்பட்டிணம் மாவட்டத்திலும் இருந்தது இப்போது மயிலாடுதுறையை மாவட்டமாக மாற்றியதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது.திருக்கடையூர் அபிராமி அந்தாதி பாடல் பெற்ற தலம். சம்பந்தர், அப்பர் சுந்தரர் ஆகியோரால் தேவராம் பாடப்பெற்று. காவேரி தென்கரையில் 47 வது சிவ தலமாகும். குங்கிலிக்காய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலங்களில் ஒன்று இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்து தள்ளினார் என்பது நம்பிக்கை..


மூலவர் அமிர்தகடேசுவரர்

உற்சவர்: காலசம்கார மூர்த்தி

தாயார்: அபிராமி

தலவிருட்சம் : வில்வம்


வரலாற்று காரணம் என்னவென்றால் இத்தலத்தில் மார்க்கண்டேயனின் ஆயுட்காலம் நிறைவடைய எமன் பாசக்கயிற்றை அவன் மீது வீச உடனே மார்க்கண்டேயன் சிவ லிங்கத்தை கட்டி அணைக்க சிவ லிங்கத்தின் மீது பாசக்கயிறு விழ சிவன் உருவ வடிவம் எடுத்து காலால் எமனை எட்டி உதைத்து நெற்றிக்கண்ணால் எரித்து கொன்றுவிட்ட பிறகு மார்க்கண்டேயனை காப்பாற்றினார் எனபது இத்தலத்தின் வரலாறு. அதனால் தான் வயது முதிர்ந்தவர்கள் தன் ஆயுட்காலம் நீடிக்க மணி விழா, பவள விழா சதாபிஷேசகம் என விழா எடுத்து கொண்டாடுகிறார்கள் இதற்கு மற்றொரு சிறப்பும் உண்டு தை அமாவாசை அன்று அம்பிகையின் முக அழகை கண்டு மெய்மற்று இன்று பவுர்ணமி என்று சரபோஜி மன்னரிடம் சொல்ல மன்னர் உடனே கோபமுற்றை அமாவாசை தினத்தை பவுர்ணமி என்று எப்படி சொன்னாய் கேட்க அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பவுர்ணமி ஆக்கினார் என்பது வரலாறு. 


இப்படி பல சிறப்பு அம்சம் கொண்ட இறைவன் இறைவியை தரிசனம் செய்தோம் என்ற மனநிறைவோடு நான் வீடு வந்து சேர்ந்தேன் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள் விடுமுறை நாட்களில் செல்லாதீர்கள் மற்ற நாட்களில் செல்லுங்க சிறப்பாக தரிசனம் செய்யலாம்.

Thursday, 8 June 2023

திருவணைக்காவல் போகலாம் வாங்க

                  ரொம்ப நாளாக எந்த கோவிலுக்கும் போக நேரமில்லை. சமீபத்தில் எனது பிறந்த நாள் அன்று திருவணைக்காவல் கோவில் சென்றேன். தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் திருச்சிக்கு 1to1 பஸ் நின்றிருந்து தஞ்சையில் ஏறினால் திருச்சியில் தான் போய் இறங்க முடியும் வேற எங்கும் வண்டி நிற்காது. நான் அந்த பேருந்தில் ஏறினேன் பஸ்ஸில் ஏறியதும் ஜன்னல் ஓர சீட்டா பார்த்து உட்கார்ந்தேன் கன்ட்ரைக்கடர் டிக்கெட் ..டிக்கெட்... ம்மா.. இப்பவே டிக்கெட் வாங்கிடுங்கம்மா கன்ட்ரைக்டர் வரமாட்டார் என்று சொல்லிக்கொண்டே வந்தார் நான் ஆச்சரியத்தோடு திருச்சி ஒன்னு என்று பணத்தை நீட்டினேன். அவரும் டிக்கெட்டை கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றார். நடத்துநர் இல்லாத பேருந்தா என்ற வியப்பு எனக்குள் பரவாயில்லையே இது கூட நல்லாதான் இருக்கு என நினைத்துக்கொண்டேன். எனக்கு அருகே இருந்த பெண்ணுக்கும் அதே ஆச்சரியம்தான். பஸ் ஏறிய சற்று நேரத்தில் பஸ் கிளம்பியது என் அருகே இருந்த பெண் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தது. நான் பேக்கை திறந்து கடையில் வாங்கிய மசால் வடையை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு ஜன்னல் வழியே பார்வையை வீசினேன் நெடுஞ்சாலை மிக அழகாக இருந்தது. 5 வருடத்தில் நிறைய மாற்றம் தெரிந்தது வழியெங்கும் பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி சென்றேன். கையில் இருந்த மொபைலை எடுத்து திருச்சியை நோக்கி பயணம் என்று பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டேன் அன்று எனது பிறந்த நாள் என்பதால் சில நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள் அதற்கெல்லாம் நன்றியை தெரிவித்தேன் என்னதான் நம்மை நேரில் பார்க்காது பழகாது இருந்தாலும் மனம் நிறைந்து வாழ்த்து சொல்ற மனசு பெரிய மனசுதானே.. நம்மோடு பழகியவர்கள் கூட வாழ்த்து சொல்ல மனசு வராதா போது யாரோ எவரோ சொல்ற அந்த வாழ்த்து மனசுக்கு சந்தோஷம்தான். இந்த நவீன உலகத்தில் இது சற்று ஆறுதலான விஷயம்தான். சற்று நேரத்திற்கெல்லாம் திருச்சி வந்துவிட்டது எனக்கு இன்னும் வியப்பு கூடிவிட்டது ஒரு மணி நேரத்தில் இந்த பஸ் திருச்சி வந்துவிட்டதே என்று. பஸ்ஸை விட்டு இறங்கியதுமே திருவணைக்காவல் பஸ் எனக்காக ரெடியா நிற்பது போலவே நின்றது நான் பஸ் ஏறியதும் பஸ் புறப்பட்டது இந்த பஸ் திருவணைக்காவல் போகுமா என்று டிரைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏன்னா நாம தெரியாம ஏறிவிட்டு அப்புறம் அவர்களிடம் திட்டு வாங்கி இடையில் இறங்க கூடாதில்லையா அதனால். சற்று நேரத்தில் திருவணைக்காவல் வந்துவிட்டது நானும் இறங்கி மெல்ல நடந்தேன் சாலையில் இருப்பக்கமும் கடைகள் பூஜை பொருட்கள் இருந்தது ஒரு பூக்கடையில் பூ வாங்கினேன் நல்ல நெருக்கமாக கட்டிய மல்லியப்பூ  முழம் முப்பது ரூபாய் இரண்டு முழம் வாங்கினேன் சற்று தள்ளி ஒரு அர்ச்சனை கடையில் அர்ச்சனை வாங்கினேன் அம்பாளுக்கா? அய்யனுக்கா என்றார் கடைக்காரர் அய்யனுக்கே கொடுங்கோ என்றேன். அவரும் நான் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தார் நான் வாங்கிகொண்டு பணத்தை கொடுத்தேன் அவறும் புன்முறுவலோடு வாங்கிக்கொண்டு இதை பிள்ளை வையுங்கன்னு இலவச இணைப்பா அருகம்புல்லை நீட்டினார். 

Saturday, 8 April 2023

கெண்டை மீன் குழ்ம்பு|வறுவல்

பழைய முறையில் கெண்டை மீன்நகுழம்பு
செய்முறை:
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்


https://youtu.be/TTblYcxhQwE

Saturday, 29 October 2022

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் போகலாம் வாங்க




              ஒரு நாள் திடீர்னு சென்னைக்கும் பக்கத்துல இருக்கிற 
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு போகனும்னு தோணுச்சு நாம வழக்கமா அப்படித்தான் கிளம்புவோம். காலையில் 7 மணிக்கு கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு பஸ் ஏறினேன் நான் நினைச்சேன் பக்கத்துலதான் இருக்கும் போயிட்டு சீக்கிரம் வரலாம் னு அப்புறம் தான் தெரியுது அது சென்னையில் இருந்து 60கி.மீ னு அச்சச்சோ இது தெரியாம நாம பாட்டுக்கும் அசால்டா கிளம்பிட்டோமேன்னு உள்ளுக்குள்ள திக்..திக்.

Friday, 28 October 2022

புத்தக வாசிப்பு என்பது ஆழ்நிலை தியானம் போன்றது

முன்பெல்லாம் புத்தக வாசிப்பின் பசி எனக்கு அதிகமாக இருந்தது. கைகளில் புத்தகம் இல்லாத நாட்களை நான் வெறுமையாக உணர்ந்திருக்கிறேன். எழுத்துக்கூட்டி படித்த காலத்திலே ராணிகாமிஸ் படிக்கத் தொடங்கினேன் அதன் பிறகு தொடர்ந்து கொண்டே இருந்தது. படிக்காத புத்தகமும் இல்லை தெரியாத எழுத்தாளரும் அல்ல. படிக்க படிக்க நிறைய அனுபவம் கிடைத்தது ஆனால் மனிதர்களிடம் இருந்து விலக்கி வைத்தது. சாலை ஓரங்களில் கூட பேப்பர்களை பொரிக்கு வந்து படித்த நாட்கள் உண்டு அந்தளவுக்கு புத்தக புழுவாக என்னால் இப்போது ஒரு புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை. 

Sunday, 9 October 2022

ரவா அப்பம் செய்வது எப்படி

கீழே உள்ள லிங்கை அழுத்தி தெரிந்துகொள்ளவும்

https://youtu.be/ZEhCEw2i_C4

Thursday, 22 September 2022

ஏக்கம் குட்டிக்கதை

அம்மா... அம்மா... ஒரு நாளைக்கு தியேட்டருக்கு போயிட்டு சினிமா பார்த்திட்டு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வருவோமா..." பொன்னி ஆசையாக தன் அம்மாவிடம் கேட்டாள்.

" ஆமா... நீ வேணா போய் சாப்பிடு எனக்கு வேணாம்" அம்மா மல்லிகா முகத்தை சுழித்தபடி சொன்னாள்.

"உனக்கு ஞாபகம் இருக்காம்மா இருபது வருசத்துக்கு முன்னாடி முருகைய்யா தியேட்டர்ல படம் பார்த்துட்டு வருவோம் அதுக்கு எதிரே ஒரு சின்ன ஹோட்டல் ஒன்னு இருக்கும் அதுல எல்லாரும் சாப்பிட்டுட்டு இருப்பாங்க சோறு, மீனு, கறி, முட்டையின்னு வெளுத்துக்கட்டுவாங்க. நான் ஆசையா பார்த்துகிட்டு உன்கிட்ட கேட்பேன் நீ.. அதுக்கெல்லாம் காசு இல்ல ஒரு சாப்பாடு பதினைஞ்சு ரூபான்னு சொல்லிட்டு கூட்டிட்டு வந்திருவே... ஒரு நாள் கூட வாங்கி தந்தது இல்ல. தியேட்டருக்கு போனா பாப்கார்ன் கேட்டு அழுவேன் வயிறு வெந்து போயிரும்னு அதையும் வாங்கி தரவே மாட்டே.. இப்ப என்னகிட்ட அதை வாங்குற அளவுக்கு காசு இருக்கு ஆனால் இப்பவும் நீயும் வர மாட்டேங்கிற என்னையும் வாங்கி சாப்பிட விட மாட்டேங்கிறே.. ஏம்மா என்றாள் தழுதழுத்த குரலில்..

மல்லிகாம்மாவால் ஒன்றுமே பதில் சொல்ல முடியல இதுதான் அவர்கள் இயல்பு..

Monday, 19 September 2022

வாலை மீன் குழம்பு செய்வது எப்படி


தேவையான பொருட்கள்: 


வாலை மீன் 1 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 1 கப்
பச்சைமிளகாய்- 7
புளி- ஏலுமிச்சை அளவு
குழம்பு மசாலா - தேவைக்கு ஏற்ப
வெந்தையம்  - 1 ஸ்பூன்
சீரகம்- சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் சிறிது.
கடலெண்ணெய்- தேவைக்கேற்ப


செய்முறை: 



கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Saturday, 10 September 2022

மீனும் நண்டும் 20. நிமிஷத்துல சமைக்க முடியுமா?

மீனும் நண்டும் ஒரே நேரத்தில் எப்படி சமைக்கிறதுன்னு பார்க்கலாம். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்க


https://youtu.be/JQaL8kNGomc

Wednesday, 7 September 2022

இம்மையில் நன்மை தருவார் ஆலயம் போகலாம் வாங்க


                 கடந்த சில வருடங்களா எங்கேயும் போக முடியல கொரோனா காலம் என்பதை விட வேலை பளு,  நேரமில்லை இப்படி பல காரணங்கள் சொல்லலாம். சட்டென்று ஒரு யோசனை மதுரை இம்மையில் நன்மை தருவார் ஆலயம் செல்லாம் என்று தோன்றியது. சரி ஞாயிற்றுக்கிழமை போகலாம் என முடிவு செய்தாச்சு. சனிக்கிழமை இரவு மொபைலில் 4 மணிக்கு அலாரம் வைத்து விட்டு தூங்க ஆரம்பித்தேன். முழிச்சுப் பார்த்தால் காலை 6 மணி