இளைய நிலா
என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (33)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (11)
- மருத்துவம் (25)
Thursday, 30 July 2026
தஞ்சை பெரிய கோவில்
சம்பா நண்டு எப்படி இருக்கும்
எத்தனை பேருக்கு இந்த நண்டு பிடிக்கும்..? இதன் சுவையை அடிச்சுக்கவே முடியாது அப்படி இருக்கும் எழுத்துக்களால் வடிக்கவே முடியாதே அந்தளவுக்கு இருக்கும்.. இதன் கால்கள்தான் ஹைலைட் இரண்டு கால்களும் நம் கை பெரிதில் இருக்கும் கால்களுக்கு தான் காசு.. வீட்டில் நண்டு சமைத்தால் இந்த கால் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதவர்கள் ஏராளம் 90s கிட்ஸ்க்கு இந்த அனுபவம் நிறைய இருக்கும்.. சிக்கனில் இப்பதான் லாலிப் பப்புன்னு கண்டு பிடிச்சு சாப்பிடாறாங்க ஆனால் நாங்க அப்பவே நண்டு காலில் லாலி பப்புன்னு சாப்பிட்டவங்க.
.இந்த நண்டின் நெறி கூடுதலான சதைப்பற்றோடு இருக்கும்.. சாப்பிடும் போது ஒருவிதமான இனிப்போடு இருப்பது போல் இருக்கும் அதை சாப்பிட்டவங்களுக்கு கண்டிப்பா தெரியும்.. அதாவது கடல் நண்டை விட இதுவும் கடல் நண்டு மாதிரிதான் இது கடற்கரையில் வளரக்கூடியது... கடித்தால் கையே துண்டாகும் அந்தளவுக்கு பயங்கரம் ஆனால் அதன் சுவையோ அதைவிட பயங்கரமா இருக்கும்...
அந்த காலை கடித்து சாப்பிடுவது ரொம்ப கஷ்டம் அறுவா கொண்டு உடைத்து சாப்பிடுவோம் அந்தளவுக்கு கெட்டி ஒரு பத்து வருசத்திற்கு முன் ஒரு நண்டு 50, ,100 க்கு வாங்கினோம் இப்ப ஒரு நண்டு 1000 க்கும் மேல விலை போகுது.. இப்ப இந்த நண்டு கிடைப்பது அரிது எல்லாவற்றையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.... அதனால் நமக்கு கிடைப்பதில்லை அதோடு விலை நம்மை கிட்ட நெருங்க விடுவதில்லை... முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை அருகே உள்ள சுந்தரம் நசுவிணி ஆற்றிலும், ராஜாமடம் நசுவிணி ஆற்றிலும் இந்த நண்டுகள் மணலில் பதுங்கி கிடக்குமாம்... ஈசியா பிடித்து வருவார்களாம் எங்க மாமா அடிக்கடி சொல்வார்..
ஒரு நேரத்தில் ஈசியா கிடைத்த உணவுகள் இப்ப அதிக விலைக்கு விற்பதால் வாங்கி சமைப்பதற்கு முடிவதில்லை... யாரெல்லாம் இந்த நண்டு சாப்பிட்டு இருக்குறீங்க யாருக்கெல்லாம் பிடிக்கும்..? யாரெல்லாம் விலையின் காரணமாக சாப்பிடாமல் இருக்குறீங்க என்பதையும் சொல்லுங்க... கடல் உயிரனங்களில் அதிக சத்து உடையது நண்டு, இறால், திருக்கை, மத்தி, சூரை இவைகள் தான்...
Wednesday, 29 July 2026
சுகிசிவம் அவர்கள் சொன்ன ஜோக்
மீனாட்சி சுந்தரேஷர் ஆலயம் துவரங்குறிச்சி
Monday, 21 July 2025
திருவெற்றியூர் பாகம்பிரியாள்
திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு ஒரு முறை என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா நான் மூனு பேரும் பாகம்பிரியால் கோவிலுக்கு போனோம்.இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கோவில் அது. என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா ரெண்டு பேரும் அந்த கோவிலுக்கு போகனும்னு ஒரு வருசமா உண்டியலில் காசு சேர்த்து அந்த காசுல பஸ் செலவு ஆரம்பிச்சு அந்த கோவிலுக்கு போற வரைக்கும் ஆகுற செலவு அந்த காசுல தான் செலவு பண்ணின்னாங்க. எனக்கும் அந்த காசுல தான் செலவு செய்து கூட்டிட்டு போனாங்க அங்க போன பிறகுதான் தெரியும் அந்த அம்மன் சிவனோடு இருக்கிற ஒரு கோவில் என்று அதற்கு முன் தெரியாது அதுவரை அம்மன் கோவில் என்றே நினைத்திருந்தேன். பாகம்பிரியாள் என்ற பெயர் தான் விளங்கியிருக்கிறது. அந்த கோவில் அருகே இருக்கும் புற்றில் சேவல் பலி கொடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
Tuesday, 27 May 2025
திருக்கடையுர் போகலாம் வாங்க
திருக்கடையூர் போகவேண்டும் என்று சட்டென்று தோண அம்மாவும் நானும் அதிகாலையிலயே மயிலாடுதுறை பயணித்தோம்.. பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி அங்கிருந்து கும்பகோணம் அங்கிருந்து மயிலாடுதுறை அங்கிருந்து திருக்கடையூர் சென்றடைந்தோம். சரியாக பட்டுக்கோட்டையில் இருந்து 6 மணிக்கு கிளம்பினோம் பஸ் தான் மன்னார்குடிக்கு டிக்கெட் 20 ரூபாய் இருவருக்கும் 40 மன்னார்குடியில் 7 to 8 கும்பகோணம் 2 டிக்கெட் 50 ரூபாய் 9 மணிக்கு மயிலாடுறை சென்றுவிட்டோம். மயிலாடுறையில் 9 மணி to திருக்கடையூர் 10 மணி. 2 டிக்கெட் 60 ரூபாய். மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்ல பணம் இல்லை மகளீர் இலவச பேருந்து அங்கிருந்து திருக்கடையூர் ஒரு மணி நேரம் ஆச்சு ஆக சரியாக 11 மணிக்கு கோவிலுக்கு வந்துவிட்டோம். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமா இருந்தது நாங்கள் கோவிலுக்கு நுழையும் வேளையில் மேளத்தாளத்தோட நாதஸ்வரம் பழத்தட்டோடு வந்துகொண்டிருந்தார்கள் அது எங்களை வரவேற்பது போல் இருந்தது..


.jpeg)




