90s கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சிறிய உருண்டையில் இருந்து பெரிய உருண்டை வரை கடைகளில் விற்பனை செய்வார்கள்.. தேங்காய் பர்ப்பி தட்டையாக இருக்கும் அது அச்சில் வடிவமைக்கப்பட்டது. சாதாரண தேங்காய் மிட்டாய் இல்லங்க சத்தானதும் கூட அந்த டைம்ல நாம சாப்பிட்டது எல்லாமே சத்தானதுதான்.. வறுத்த நிலக்கடலை, பட்டாணி, எள்ளுருண்டை, கடலைமிட்டாய் இந்த மாதிரி புரோட்டின் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் சிநாக்ஸ் பட்டியலில் இருந்தது இப்போது அப்படி இல்லையே...
எனக்கு இந்த தேங்காய் மிட்டாய் எப்பவும் ஸ்பெஷல்தான் சின்னதில் இருந்து பெரிசு வரை வாங்கி டப்பாவில் அடைத்து வைத்துவிடுவேன் அதை ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடுவது வழக்கம் ஏன் பிடிக்குது எதுக்கு பிடிக்குதுன்னு காரணம் கேட்டால் தெரியாது ஆனால் பிடிக்கும். இப்ப தேங்காய் மி்ட்டாய் எத்தனை பேர் சாப்பிடுவாங்கன்னு நினைக்கிறீங்க ரொம்ப குறைவான குழந்தைகள்தான் சாப்பிடுவார்கள்..
இந்த மாதிரி சத்தான தின்பண்டங்கள் இப்போது யாரும் சாப்பிடுவதில்லை. நூடுல்ஸ், சாக்லெட், பிஸ்கட், பர்க்கர் என மாறிவிட்டார்கள்...இப்ப இருக்கிற குழந்தைகள் யாராவது அவிச்ச சோளம் சாப்பிடுறாங்களா பாருங்க அந்த சோளத்தில் எத்தனை சத்துக்கள் இருக்கிறது அதை கூட குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. பெற்றோர்கள் தயவுசெய்து சத்தான தின்பண்டங்களை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குங்கள்...அதுதான் ஆரோக்கியம்.



.jpeg)



