Showing posts with label கடடுரை. Show all posts
Showing posts with label கடடுரை. Show all posts

Sunday, 10 January 2016

சட்ட மன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் செய்ய போவது என்ன

            இப்போது பரபரப்பாக பேசப்படுகின்ற விஷயம் வருகின்ற சட்ட மன்ற தேர்தல். இதுவரை இலவசங்களையும், பணத்தையும் கொடுத்து ஓட்டு வாங்கிய அரசியல் கட்சிகள் இனி விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் மக்கள் விழித்துக்கொண்டார்கள் அவர்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை நல்ல தார்சாலைகள், நீர்நிலை ஏரிகளை ஆழப்படுத்துதல், பாலங்கள் அமைத்தல், பள்ளி, சுகாதாரநிலையம் போன்ற அத்தியவாசிய திட்டங்கள்தான் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள்.

Wednesday, 9 September 2015

இந்தியா வல்லரசு ஆகும் அரசு நினைத்தால்

           நம்ம இந்தியா வல்லரசு ஆகும் வல்லரசு ஆகும்னு எல்லோரும் ஒரு பக்கம் கனவு காணுறாங்க. இன்னொரு பக்கம் இந்தியா ஏழை நாடு என்று ஒரு பக்கம் விமர்சனம் பண்றாங்க. இதற்கு என்ன செய்யலாம்? ஒன்று ஒவ்வொரு குடும்பத்திலும் கட்டாயம் ஒருவருக்கு வேலைவாய்ப்பை அரசு கொடுக்க வேண்டும். அல்லது ஒரு குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவி கொடுத்தால் இந்தியா ஏழை என்று யார் சொல்ல முடியும். அந்த குடும்பங்கள் அதை வைத்து தனது வளத்தை பெருக்கிக் கொள்ளும் புதிய தொழில்த்துறைகள் முளைக்கும் அனைவரும் முன்னேற்ற பாதையில் செல்வார்.

Saturday, 22 August 2015

பாலியல் வன்முறைகளை தடுக்க எளிய வழி

                   பாலியல் வன்முறைகள் ஆங்காங்கே நடக்கிறதே என்று ஆதங்கப்படும் பெண்களா நீங்கள்? நமது தங்கையோ? அக்காவோ? குழந்தைகளோ? எப்படி பயமில்லாமல் அனுப்புவது என்று கவலைப்படும் பெண்களா நீங்கள்? காம கொடூரங்களைக் கண்டு கொந்தளிக்கும் சமூக அக்கறையுள்ள பெண்களா நீங்கள்? வாருங்கள் ஒன்றாக இணைந்து ஆபாச ஆசாமிகளை வளைத்துப் பிடித்து வேறோடு அழிப்போம்.