Friday 27 February 2015

சுழியம்

தேவையான பொருட்கள்:

 கடலைப்பருப்பு - 1/2 கிலோ 
வெல்லம் - 2
 தேங்காய் - 1
 ஏலக்காய் - சிறிது
 மைதா - 1/4 கிலோ
எண்ணெய் - 1/2 லிட்டர்

Wednesday 25 February 2015

மும்மூர்த்திகளின் தத்துவம்

            ஆக்கல் - காத்தல் - அழித்தல் இம்மூன்றும் இந்த உலகத்தில் எந்நேரமும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள். நடப்பது எதுவானாலும் இந்த மூன்று வகைக்குள் அடங்கியே ஆகவேண்டும்.

            இந்த மூன்று சக்திகளையும் மனிதன் உணர்ந்துகொள்ளவே இறைவனை இந்த மூன்று முக்கியமான கிரியைகளின் வடிவமாக நாம் வழிபடுகிறோம்.

Tuesday 24 February 2015

நட்பு என்பது எதுவரை?

சிலேட்டு குச்சியும் 
குச்சி மிட்டாயும்
கொடுக்கும் வரை
சில நட்பு..!

பேப்பர் பேனாவும் 
பென்சில் ரப்பரும்
கொடுக்கும் வரை
சில நட்பு..!

வயசு பசங்க /சிறுகதை

          ஊட்டி மலைபகுதியில் கதிர்கள் மறைய தொடங்கியது வெள்ளை வேட்டி போர்த்தியது போல் பனி பரவி கிடந்தது அந்த மலை உச்சியை நோக்கி இரு உருவங்கள் வேக வேகமாக நடந்து சென்று கொண்டு இருந்தது அது ஒரு ஆணும் பெண்ணும்... அப்போது இவர்கள் செல்லும் பாதையின் பக்கவாட்டில் இருந்து ஒரு உருவம் கருப்பு கம்பளி போர்வையை போத்திக்கொண்டு ஒரு கையில் கம்புடனும் மறுகையில் டார்ச் லைட்டுடனும் வந்து கொண்டிருந்தது.

           "யாரது... யாரது... அங்க போறது கேக்குறேன்ல... நில்லுங்க" என்றவாறு விரைந்து வந்தது. யாரோ ஒருவர் தம்மை அழைக்கும் சத்தம் கேட்டு நின்றனர் இருவரும். கிட்ட நெருங்கி வந்த அந்த கருப்பு உருவத்திற்கு அறுபது வயதிற்கும்.

Monday 23 February 2015

ஜபம் செய்வது எப்படி?

             மனிதனை நல்வழிப்படுத்தி சகல சௌபாக்கியங்களையும் அளிக்கவல்லது ஜபம். எப்படி ஜபம் செய்யத் தொடங்குவது? வாங்க பார்க்கலாம்.

            உங்கள் வீட்டில் தனிமையான ஓர் அறையைத் தேர்ந்தெடுங்கள். சுவரில் உங்கள் மனதுக்கினிய சுவாமி அல்லது தேவியின் படத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் கண் பார்வை இருக்கும் மட்டத்தில் அவருடைய பாதம் கண்ணில் படும்படி படத்தை மாட்டுங்கள். கீழே உட்கார ஒரு பாயையோ, பலகையையோ போட்டுக்கொண்டு உட்காருங்கள். காலை சௌகரியமாக சப்பணம் போட்டு உட்கார்ந்து ஜபத்தை ஆரம்பியுங்கள்.

Sunday 22 February 2015

பாடும் வானம்பாடி சூப்பர் சிங்கர்ஸ்

              ஒரு நேரத்தில் வாய்ப்புக் கிடைக்காமல் அலைந்த கலைஞர்கள் ஏராளம். ஆனால் இன்று திறமையானவர்களைத் தேடி வாய்ப்புகள் வருகிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் வெற்றி காண்கிறார்கள். அந்தப் பணியை விஜய் டிவி சிறப்பாக செய்து வருகிறது.

            நேற்று சூப்பர் சிங்கரில் ஸ்பூர்த்தி என்ற 9 வயது சிறுமி எத்தனை அழகாக பாடி முதல் இடத்தை தட்டிச்சென்றது. அந்தக் குழந்தையை பார்க்கையில் பொறாமையாக இருக்கிறது. இந்த வயதில் நாம் என்ன செய்தோம் என்று, இப்பவும் எதுவும் செய்யவில்லை மேடை ஏறினாலை கை, கால் உதறுகிறது. ஆனால் இந்த சிறுமிகள் எவ்வளவு தைரியமாக பயம் இல்லாமல் பாடுகிறார்கள்.

Saturday 21 February 2015

தினசரி சிவன் வழிபாடு

                     ஞாயிற்றுக்கிழமை

போற்றியோ நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
 போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை
 போற்றியோ நமச்சிவாய புறம் என்னப் போக்கல் கண்டாய்
 போற்றியோ நமச்சிவாய சயசய போற்றி போற்றி

கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1/4 கிலோ 
வெல்லம் - 1 
தேங்காய் - 1 மூடி 
பாசிப்பருப்பு - 50 கிராம்

Friday 20 February 2015

இம்சை

பூனையை மடியில கட்டுறதும்
 நமக்கு பிடிச்சவங்களை
 மனசுல வைக்கிறதும் ஒன்னு

Thursday 19 February 2015

அல்சர் எப்படி வருகிறது?

            நேரத்திற்கு சாப்பிடாததால் தான் அல்சர் வருவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் இல்லை, நேரத்திற்கு சாப்பிடுபவர்களுக்கு தான் இந்த அல்சரே வருகிறது.

          பசிக்காமலே நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பதற்காக பசித்தோ, பசிக்காமலோ, அல்லது அதிக உணவோ எடுத்துக்கொள்பவர்களுக்கு தான் இந்த அல்சர் வருகிறது. அந்த உணவு செரிமானம் ஆகாமல் வயிற்றில் தங்கி அது ஒரு கழிவாக மாறி நாளடவில் அது புண்ணாக உருவெடுத்து வலியை கொடுக்கிறது. கடைசியில் கேன்சராகவும் மாறுகிறது.

Monday 16 February 2015

பிறவிப் பாவங்களைக் களையும் ராமநாதர்

         இராவண வதம் முடிந்து இலங்கையிலிருந்து சீதையுடன் பாரதத்திற்குத் திரும்பிய இராமர். வானர வீரர்கள் புடைசூழக் கந்தமாதனம் வந்து சேர்ந்தார். அப்போது அகஸ்தியர் முதலான ரிஷிகள் அங்கு வந்து இராமரைத் துதித்து, சிவபக்தனாக விளங்கிய இராவணனை அழித்த பாவம் விலக ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்று இராமருக்கு ஆலோசனை வழங்கினார்.

             இராமர் ஆஞ்சநேயரிடம் மாருதி நீ கைலாயத்திற்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவா என ஆணையிட்டார். ஆஞ்சநேயர் கயிலையை அடைந்தார். சிவபெருமானிடமிருந்து சிவலிங்கம் ஒன்றைப் பெற்று கந்தமாதனம் நோக்கி விரைந்தார். ஆனால் அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் குறிக்கப்பட்ட நல்ல நேரம் முடியப் போவதை முனிவர்கள் தெரிவித்தனர்.

சிவராத்திரி

            சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்போர்

             மஞ்சள் அல்லது சிவப்பு ஆடை அணிந்து பகலில் இளநீரும் இரவில் துளசி தண்ணீரும் அருந்தலாம். முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருத்தி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் இரவு கண்விழித்திருந்து அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி பாராயணம் செய்து விரதத்தை முடிக்கலாம்.

விரதங்களும் அதன் பலன்களும்

             மாசி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவராத்திரியும், மாசி மகமும் தான். மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் வருவது சிவராத்திரி விரதமிருந்து இரவு முழுவதும் கண்விழித்து சிவபுராணம் பாராயணம் செய்வது நல்லது.

Sunday 15 February 2015

மாற்றம்

உன்...
நினைவுகள் வரும்போதெல்லாம்
நிலவைப் பார்த்து - நான்
ஆறுதல் பட்டுக்கொள்கிறேன்..!

உன்னைப் போலவே - அதுவும்
சில நாள் வளர்வதும்
சில நாள் தேய்வதுமாக இருக்கிறது
நீ செய்கின்ற அதே தவறை
நிலவும் செய்வதால்
நீதான் நிலவோ என்று
எண்ணிவிட்டேன் - இனி
வெகு விரைவில் உனை
 மறக்கக் கூடும் ஏன் தெரியுமா?

Saturday 14 February 2015

இறால் பக்கோடா

தேவையான பொருட்கள்:

இறால் - 1/2 kg
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு துறுவல் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - சிறிது
கடலை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

ஏதோ... நினைவுகள் மனதிலே வருகிறதே..!

       
  நினைவுகள் என்பது எத்தனை ஒரு அழகான விஷயம். ஏதோ ஒன்றை தேட போய் ஏதோ ஒன்று என் கையில் சிக்கியது. 2004 ல் இலங்கை வானொலிக்கு நான் எழுதிய இலக்கிய கட்டுரைகள், கவிதைகள், எனக்குப் பிடித்த அறிவிப்பாளர் வந்த போது ஒலித்த பாடலின் தொகுப்புகள், அவருக்கு எழுதிய கடிதங்கள், சிறுகதைகள் என அடங்கிய ஒரு நோட்டு புத்தகம். அதை எடுத்து பார்க்கும்போது ஏனோ... என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்த வைத்தது. இன்னும் சில பாடல்களை எங்காவது கேட்கும்போது இது என் பாட்டு, இது அந்த அறிவிப்பாளருக்குப் பிடித்தப்பாட்டு, அப்போது அவர் அப்படிச் சொன்னார் என்று அப்படியே செவி வழியே வந்து போகிறது. அந்தவகையில் எனக்குப் பிடித்தப் பாடலையும், எனக்காக அன்று ஒலித்தப் பாடலையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன்.

Friday 13 February 2015

கும்மிபாட்டு

             நாட்டுப்புற இலக்கியங்களில் கும்மிபாட்டும், ஒப்பாரியும் முக்கியமான ஒன்று பல வருடங்களுக்கு முன்பு யாராவது இறந்தாலோ அல்லது பெண்கள் பூப்பெய்தினாலொ இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இப்போது பல இடங்களில் அது காணாமல் போய் வெகு காலமாயிற்று. எனக்கு 7- 8 வயது இருக்கும் போது எப்படி ஒரே மாதிரி கும்மியடிக்கிறார்கள் என்று வேடிக்கைப் பார்த்ததுண்டு. இப்போது அதே கும்மியடி பாடலைக் கேட்டுக்கொண்டே இதை பதிவு செய்கிறேன்.

தஞ்சாவூர் சமையல் /பாசிப்பருப்பு சாம்பார்


தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 100 கிராம்
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 5, 6
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் - 1/2 மூடி 
சீரகம் - 1 ஸ்பூன் 
உருளைக்கிழங்கு - 2
கத்தரிக்காய் - 2 
கடுகு - சிறிது 
கறிவேப்பிலை - சிறிது 
மஞ்சள்தூள் - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப

Thursday 12 February 2015

தஞ்சாவூர் சமையல் / முளைக்கீரை கூட்டு

தேவையான பொருட்கள்:-

முளைக்கீரை - 1 கட்டு 
தக்காளி - 1 
பாசிப்பருப்பு - 50 கிராம் 
தேங்காய் - 1 கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம் 
பூண்டு - 1
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5

Wednesday 11 February 2015

காதலர் தினம்

         
                காதலர் தினம் நம் இந்திய கலாசாரத்தில் இல்லாத ஒன்று. மேற்கத்திய கலாசாரத்தைதான் நம் காதலர்கள் கொண்டாடுகிறார்கள். சரி, இந்த தினம் என்றால் என்ன? எய்ட்ஸ் ஒழிப்பு தினம், போலியோ ஒழிப்பு தினம் இப்படி நிறைய சொல்லலாம். அதாவது, நமக்கு ஆபத்து தரக்கூடிய நமக்கு தீமை தரக்கூடிய ஒன்றை ஒழித்தப் பிறகு அதை ஒரு தினமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த காதலர் என்பது ஒரு துக்க நாள் "வேலன்டைன்" என்ற ஒருவன் இறந்த நாளைதான் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆக ஒரு காதல் இறந்ததை, ஒரு காதலன் இறந்ததைதான் இன்றைய காதலர்கள் அதை சந்தோஷமாக , உல்லாசமாக, கடற்கரையிலும், ஹோட்டல்களிலும் மறைவான இடங்களிலும் கொண்டாடப்படுகிறதா? இந்த காதலர் தினம் பெற்றோருக்குதான் துக்கத்தினமோ?

தஞ்சாவூர் சமையல் / நாட்டுக்கோழி குழம்பு

தேவையான பொருட்கள்:-

நாட்டுக்கோழி - 1கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
 தக்காளி - 3
தேங்காய் - 1/2 மூடி
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
பட்டை - சிறு துண்டு
கசகசா - சிறிது
மிளகு - சிறிது
முழு பூண்டு - 1 
இஞ்சி - பெரிய துண்டு
 மிளகாய்த்தூள் - 1 கரண்டி
 மல்லித்தூள் -1 கரண்டி
 சோம்பு - 1 ஸ்பூன்
 கொத்தமல்லி - சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய் தேவைக்கேற்ப
 உப்பு - தேவைக்கேற்ப

Saturday 7 February 2015

தஞ்சாவூர் சமையல் / இறால் சுரக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:-

 இறால் - 1/2 கிலோ
சுரக்காய் - சிறியது/ பாதி
 தக்காளி - 2
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 முழு பூண்டு - 1
மிளகாய்த்தூள் - 3 டேபிள் ஸ்பூன்
 மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
 தேங்காய் - 1/2 மூடி
 புளி - சிறு நெல்லிக்காய் அளவு
 எண்ணெய்- தேவைக்கேற்ப
 உப்பு - தேவைக்கேற்ப
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு

விளையும் பயிர் / சிறுகதை

             மெரினா கடற்கரை... இதமான காற்று வீசிக்கொண்டு இருந்தது. அந்த வெள்ளை வெளேர் மணற்பரப்பில் கைகளை தலைக்கு வைத்துக்கொண்டு கண்களை மூடியபடி படுத்திருந்தான் கோபி. சற்று தூரத்தில் ஒரு காதல் ஜோடி சிரித்து, சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர் அதன் அருகில் ஒரு சிறுவன்

         "சார்... சார்... சுண்டல் வாங்கிகோங்க சார்.. கடைசியா ரெண்டு பொட்டலம்தான் சார் இருக்கு வாங்கிகோங்க சார் நல்லா இருக்கும்" என்று கெஞ்சியபடி இருந்தான்.

Tuesday 3 February 2015

தெரிந்த விஷயம் தெரியாத கேள்விகள்

              ஆன்மீகவாதிகளின் மூட நம்பிக்கை என்ற ரீதியில் நிறைய கேள்விகளை நாத்திகவாதிகள் கேட்கிறார்கள். தெருவில் கிடக்கும் சாணியை மிதித்து விட்டால் ச்சீசி... இது சாணி என்கிறார்கள் அதையே பிடித்து வைத்து சாமி என்கிறார்கள். ஆடு, கோழிகளை சாமிக்கு பலிகொடுக்கிறார்கள் அதுவும் உயிர்தானே அதை காப்பாற்ற இந்த சாமி ஏன் முன் வரவில்லை என்று அறிவு சார்ந்த ஆயிரம் கேள்விகளை கேட்கிறார்கள். இதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும் போதுமென்று நினைக்கிறேன்.

உண்மை

நட்புக்கும் காதலுக்கும்
உள்ள சின்ன வித்தியாசம்
என்ன தெரியுமா?
நட்பு கொடுக்கிறது
 காதல் எதிர்பார்க்கிறது..!

மவுன மொழி

மலர்கள் பேசிக்கொள்கிறது
 மவுன மொழியில்
 நமக்கான நட்பைப் பற்றி!

ஏமாற்றம்

உன் பெயரில் இருக்கும்
 முதல் எழுத்தை பார்த்து
அடிக்கடி ஏமாந்து போகிறேன் - அது
 நீ இல்லை என்று தெரிந்த பிறகு

ஆபாசம், வன்முறை தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை தேவையானதா?

            மக்கள் சினிமாவை விட அதிகம் பார்ப்பது தொலைக்காட்சிதான். சீரியல்கள் பெண்களிடம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. முன்பு தொலைக்காட்சிகளில் ஆபசம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது அவர்களும் எதார்த்தத்தை சொல்கிறோம் என்று ஆபாசமாகவே எடுக்கிறார்கள். கதைக்குள் ஏன் ஆபாசம் வருகிறது? வெள்ளித்திரைகளும் சரி, சின்னத்திரைகளும் சரி ஆபாசத்தை நம்பியே எடுக்கிறார்கள். இதில் அப்படி என்ன இருக்கிறது. ஆபாசத்தின் மூலம் வன்முறைகள் தூண்டப்படுகிறது. அதில் பேசப்படும் வசனங்கள் கூட குடும்பத்தோடு பார்க்கும் போது நெளிய வைக்கிறது. இதை தவிக்கலாமே, நீங்களும் குடும்பத்தோடு பார்க்கும் போது எப்படி உணர்கிறீர்கள் இதை கருத்தில் உணர்ந்து ஆபாசத்தை தவிர்க்க தணிக்கை செய்ய வேண்டும்.