Saturday 31 January 2015

தண்டனை

என் எழுத்துக்கள் அத்தனையும்
 உனக்காக படைக்கப்பட்டவை
 நீயோ வாசகனாக வந்து வாசித்து
 ஏனோ தானோவென்று
 விமர்சித்து விட்டு போகிறாய் ..!

Thursday 29 January 2015

நட்பின் அடையாளங்கள்

          "எதையும் எதிர்பார்த்து வாழ்வது நட்பல்ல எதார்த்தமாய் வாழ்வதுதான் நட்பு"

 பாலும் தேனும் உனக்கு நான் தருவேன் பதிலுக்கு பாசத்தையும் அன்பையும் மட்டும் நீ எனக்குத் தந்தால் போதும் என்பதும் நட்புதான்..!

 தூரத்தில் இருக்கும் நண்பனை
 உயரத்தில் வைத்து அழகு பார்ப்பதும்
 நட்புதான்..!

Tuesday 27 January 2015

மருத்துவம்/பெண்கள் கர்ப்பம் தரிக்க

1. அத்தி விதையை பாலில் அரைத்து தினமும் வெறும் வயிற்றில் 2 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கருத்தரிக்கும். 

 2. புதிய அமுக்கிராக்கிழங்கின் பொடியை மாதவிடாய் ஆகும் தேதிக்கு முன்பு 10 நாளும் மாதவிடாய் ஆன 10 நாளும் தொடர்ந்து அரை டம்ளர் சுடு தண்ணீரில் கலக்கி சர்க்கரை சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றிலும் மாலையிலும் இரண்டு வேளை ஒவ்வொரு மாதவிலக்கு ஏற்படும் காலத்தில் 12 மாத விலக்கு அதாவது ஒரு வருடம் சாப்பிட்டால் ஒரு வருடத்திற்குள் மாதவிலக்கு ஏற்படுவது நின்றுவிடும் அந்த நின்று போன மாதவிலக்கு மூலம் கருத்தரித்துள்ளார் என்று பரிசோதனை மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

Wednesday 21 January 2015

சீரியல் கொலைகள்

                நாம் டிவி பார்ப்பதே ஒரு ரிலாக்ஸ்காகதான் அதில் வரும் சீரியல்கள் நம்மை எரிச்சலூட்டுகின்றன. சன் டிவி ல தெய்வ மகள்னு ஒரு சீரியல் போகுது அதில் வில்லத்தனம் செய்பவர்கள் எதிலும் மாட்டிக்கொள்ள மாட்டார்கள் ஆனால் எதிர்மறையாக நல்லவர்கள் மாட்டிக்கொள்வார்கள். நான் நினைக்கிறேன் சினிமாவில் சரியான நேரத்தில் ஹீரோக்கள் வந்து வில்லனை அடிப்பதும், ஜெயிப்பதும் வாடிக்கையாகிப்போனதால் ஒரு மாற்றத்திற்காக சீரியலில் வில்லத்தனம் ஜெயிப்பதாக காட்டுவோம் என பார்முலாவை மாற்றிவிட்டார்களோ?

எல்லைக் கோடு

சீதைக்கு அன்று லட்சுமணன்
கோடு போட்டான் இன்று
நிறைய சீதைகள் தங்களுக்குதானே
ஒரு எல்லைக் கோடு
போட்டுக்கொண்டார்கள்..!

நம்பிக்கை

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாய்
 மாறும்போது வருத்தங்களை
 வார்த்தைகளாக வடி பிடித்தவர்கள்
 படித்துவிட்டு போகிறார்கள்..!

 விளக்கினை நம்பி 
 விட்டில் பூச்சிகள் இல்லை 
 நேரமும் காலமும்
 எதை எதிர்பார்த்து ஓடுகிறது
 நீயும் அதுவாக மாறு..! 

Sunday 18 January 2015

பூக்களால் காயம்
செய்தது யார்...
நீயா..?

Wednesday 14 January 2015

பொங்கல் பண்டிகை

நகரத்தில்
 தரைக்கு மாப்பும்
 சுவற்றுக்கு பெயிண்டும் 
கேஸ் அடுப்பில் பொங்கல்
என முடிந்து விடுகிறது..!

Saturday 10 January 2015

தஞ்சாவூர் ஸ்பெஷல்/வெங்காயக் குழம்பு

தேவையான பொருட்கள்:-

 சின்ன வெங்காயம் - 200 கிராம்
 தக்காளி - 3
 தேங்காய் - 1 கப்
 வெந்தயம் - சிறிதளவு
சோம்பு - 1 ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - தேவையான அளவு
 தனியாத்தூள் - தேவையான அளவு
 புளி - சிறிய எலுமிச்சை அளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய் - தேவைக்கேற்ப
 உப்பு - தேவைக்கேற்ப

Friday 9 January 2015

மின்சாரம்

நீ...
நீர்வீழ்ச்சிக்கு பிறந்தவளா?
உன் கண்களிலிருந்து
மின்சாரம் பாய்கிறதே..!

அறிந்ததும் அறியாததும்

              காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழவேண்டும். இதை முதல் ஒழுக்கம் என ஆசாரக் கோவை கூறுகிறது. வேதங்களும் இதையே வலியுறுத்துகின்றன. இந்துமத சாஸ்திரங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும் என கூறுகின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4.00 மணியாகும். அப்போது எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு, நன்கு குளித்துவிட்டு, கடவுளை தியானிப்பது மிகச் சிறப்பாகும்.

Thursday 8 January 2015

மருத்துவம்/ உங்களுக்கு சைனஸ் பிரச்சனையா இனி கவலைய விடுங்கள்

                           தேனீர் தயாரிக்க 

தேவையான பொருட்கள்:

 லவங்கம் - 5 அல்லது 6 
வெற்றிலை - 2
தேன் - தேவையான அளவு

அழகிய புகைப்படங்கள்

தன் அழகைக் கண்டு 
தனக்குத் தானே
முத்தமிட்டு கொள்கிறதோ..?
                                                இந்த மான்..!

Wednesday 7 January 2015

சுவடு


மீத்தேன் சுரண்டல்

            காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எரிவாயு என்ற பெயரில் நீர்வள ஆதாரத்தை உறிஞ்சுவிட்டு நஞ்சு பொருளை பூமியில் கலந்து பசுமையாக இருக்கின்ற விளைநிலங்களை தார்பாலைவனமாக ஆக்கப் போகிறது மத்திய அரசு. மீத்தேன் எரிவாயு திட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை காவு கொடுக்கப் போகிறது. சுடுகாடாக மாற்றப்போகிறது. விவசாயத்தை நம்பி வாழ்கின்ற விவசாயிகள், உழவர்கள் எங்கே தங்கள் நிலம் பறி போகுமோ என்ற பீதியில் இருக்கிறார்கள்.

            மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்கு கிடைக்கிறது, சாண எரிவாயு மீத்தேன்தான் பூமிக்கு மேலே கழிவு பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறை பகுதியில் மீத்தேன் இருக்கிறது.

Tuesday 6 January 2015

சிலந்தி வலை

சிலந்தி வலையில்
 சிக்குண்ட வண்டுகள்
 இணையதள நண்பர்கள்..!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

              இதுவரை ஆன்மிகம், மருத்துவம், கதை, கவிதை என்று படித்து உங்களுக்கு போரடித்திருக்கும். அதனால் இன்று சற்று வித்தியாசமாக உங்களை பேருந்தில் பயணிக்க அழைத்துச் செல்லப்போகிறேன்.

              பேருந்தில் பயணம் செய்ய எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்கு பேருந்தில் பயணம் செய்ய ரொம்ப பிடிக்கும்.      பேருந்தில் போகும்போது அதில் ஒலிக்கின்ற பாடல்கள் அனைத்தும் நம் மனதை ஏதோ ஒருவகையில் தொட்டுவிடும்.

             அந்த பாடல்களை கேட்டப்படி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சாரல் காற்று முகத்தில் வீச காதோரம் பறக்கும் முடியை ஒதுக்கியபடி ஓடும் வயல்களையும், மரங்களையும், கட்டிடங்களையும் கடந்து நம் மனதிற்கு பிடித்த நினைவுகளுடன் செல்வது ஒரு தனிசுகம் தான். பேருந்தில் நம் மனதிற்கு பிடித்த பாடல்கள் ஒலிக்கும் போது 100 பேர் இருந்தாலும் நான் தனித்து உணர்வேன்.


          நீங்கள் எப்படி சரி வாருங்கள் பாடல்களை கேட்போம்.

Monday 5 January 2015

கல்வெட்டு

என் இதய சுவட்டில் t
  உனது நினைவுகளை
 பதித்து வைத்திருக்கிறேன்
 கல்வெட்டாய்..!

Sunday 4 January 2015

உடல் எடை குறைய வேண்டுமா?

              உடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற  ஒரு மருந்து சொல்லபோகிறேன்.

 தேவையான பொருட்கள்:-

சீரகம் - 25 கிராம் 
பட்டை - 25 கிராம் 
லவங்கம் - 25 கிராம் 
மிளகு - 25 கிராம்
தேன் - பெரிய பாட்டிலில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

தேடலின் தேடல்

            தேடல் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்சியம் இல்லாதது. தேடல் நம்மைவிட மற்றவர்களுக்கு தான் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. நாம் நமக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காகதான் வாழ்கிறோம். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளார்கள், கலைஞர்கள் இவர்களின் பங்களிப்புகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அந்தவகையில் சில தொகுப்புகளை உங்களுக்காக நான் தேடி தொகுக்கிறேன்.

             கிரிகர் ஜோகன் மெண்டல் ஆஸ்திரிய அகஸ்தினியத் துறவி தான் சார்ந்த துறவி மடத்திலேயே தொடக்க கல்வியையும் பின்பு வியன்ன பல்கலைகழகத்தில் அறிவியல் மற்றும் கணிதமும் பயின்றார். ஆசிரியர் பயிற்சி சான்றிதழல்த் தேர்வில் தோல்வியடைந்தாலும் இவருடைய அறிவியல் ஆர்வம் குறையவில்லை. மடத்திலேயே தோட்டப் பட்டாணிச் செடியின் கலப்பின ஆய்வினை மேற்கொண்டார். கணிதம், அறிவியல் இரண்டையும் இணைத்து கணக்கிதலை வெளியிட்டு மரபுவழிக் கடத்தல் விதிகளை வெளியிட்டார்.

சிக்கன் லெக் பிரைய்

தேவையான பொருட்கள்:

கோழிக்கால் - 2
இஞ்சி பூண்டு அரைத்தது - 2 ஸ்பூன்
கடலைமாவு- சிறதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
முட்டை - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப

Friday 2 January 2015

நட்பு

உன்னால் மட்டும்
 எப்படி முடிகிறது
 என்னிடம் பொய்யாக
 நடிப்பதற்கு..!

சிப்பிக்குள் முத்து ...

"கடைசி வரை
உன் கூடவே இருப்பேன்"
என்ற நண்பிகள்
 எப்போதாவது போன்
செய்து பேசுகையில்
கொஞ்சம் கோபம்
வரத்தான் செய்கிறது..!

 "போன் பண்ணினா
எடுக்கமாட்டியா எத்தனை
தடவை உனக்கு கால் பண்றது?"
என முதல் தடவை கால்
பண்ணிட்டு நம்மையே
திட்டும் நண்பிகளை
கோபத்தையும் மறந்து
சிரித்துக்கொண்டு
சமாளிக்க வேண்டியிருக்கு..!

இதயம்

உன்னை நினைத்தே
இறந்துவிட போகிறது
என் இதயம்..!

Thursday 1 January 2015

மோட்சபுரி காசியில் முக்தி அருளும் விஸ்வநாதர்

        திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள் நிறைந்த காசி அகிலேஸ்வரனின் அம்சம். காசியில் மட்டும் கயிலைநாதனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

       பரமேஸ்வரன் முன்பொரு சமயம் கைலாசத்தை விட மேன்மையான தலம் தரணியில் எங்காவது இருக்கிறதா என்று பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்தார். வந்தவர் காசியை அடைந்தார். அந்நகரின் மேன்மையைக் கண்டு கைலாயத்தையே மறந்தார். இங்கேயே இருந்து விட்டார்.