Thursday 8 June 2023

திருவணைக்காவல் போகலாம் வாங்க

                  ரொம்ப நாளாக எந்த கோவிலுக்கும் போக நேரமில்லை. சமீபத்தில் எனது பிறந்த நாள் அன்று திருவணைக்காவல் கோவில் சென்றேன். தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் திருச்சிக்கு 1to1 பஸ் நின்றிருந்து தஞ்சையில் ஏறினால் திருச்சியில் தான் போய் இறங்க முடியும் வேற எங்கும் வண்டி நிற்காது. நான் அந்த பேருந்தில் ஏறினேன் பஸ்ஸில் ஏறியதும் ஜன்னல் ஓர சீட்டா பார்த்து உட்கார்ந்தேன் கன்ட்ரைக்கடர் டிக்கெட் ..டிக்கெட்... ம்மா.. இப்பவே டிக்கெட் வாங்கிடுங்கம்மா கன்ட்ரைக்டர் வரமாட்டார் என்று சொல்லிக்கொண்டே வந்தார் நான் ஆச்சரியத்தோடு திருச்சி ஒன்னு என்று பணத்தை நீட்டினேன். அவரும் டிக்கெட்டை கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றார். நடத்துநர் இல்லாத பேருந்தா என்ற வியப்பு எனக்குள் பரவாயில்லையே இது கூட நல்லாதான் இருக்கு என நினைத்துக்கொண்டேன். எனக்கு அருகே இருந்த பெண்ணுக்கும் அதே ஆச்சரியம்தான். பஸ் ஏறிய சற்று நேரத்தில் பஸ் கிளம்பியது என் அருகே இருந்த பெண் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தது. நான் பேக்கை திறந்து கடையில் வாங்கிய மசால் வடையை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு ஜன்னல் வழியே பார்வையை வீசினேன் நெடுஞ்சாலை மிக அழகாக இருந்தது. 5 வருடத்தில் நிறைய மாற்றம் தெரிந்தது வழியெங்கும் பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி சென்றேன். கையில் இருந்த மொபைலை எடுத்து திருச்சியை நோக்கி பயணம் என்று பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டேன் அன்று எனது பிறந்த நாள் என்பதால் சில நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள் அதற்கெல்லாம் நன்றியை தெரிவித்தேன் என்னதான் நம்மை நேரில் பார்க்காது பழகாது இருந்தாலும் மனம் நிறைந்து வாழ்த்து சொல்ற மனசு பெரிய மனசுதானே.. நம்மோடு பழகியவர்கள் கூட வாழ்த்து சொல்ல மனசு வராதா போது யாரோ எவரோ சொல்ற அந்த வாழ்த்து மனசுக்கு சந்தோஷம்தான். இந்த நவீன உலகத்தில் இது சற்று ஆறுதலான விஷயம்தான். சற்று நேரத்திற்கெல்லாம் திருச்சி வந்துவிட்டது எனக்கு இன்னும் வியப்பு கூடிவிட்டது ஒரு மணி நேரத்தில் இந்த பஸ் திருச்சி வந்துவிட்டதே என்று. பஸ்ஸை விட்டு இறங்கியதுமே திருவணைக்காவல் பஸ் எனக்காக ரெடியா நிற்பது போலவே நின்றது நான் பஸ் ஏறியதும் பஸ் புறப்பட்டது இந்த பஸ் திருவணைக்காவல் போகுமா என்று டிரைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏன்னா நாம தெரியாம ஏறிவிட்டு அப்புறம் அவர்களிடம் திட்டு வாங்கி இடையில் இறங்க கூடாதில்லையா அதனால். சற்று நேரத்தில் திருவணைக்காவல் வந்துவிட்டது நானும் இறங்கி மெல்ல நடந்தேன் சாலையில் இருப்பக்கமும் கடைகள் பூஜை பொருட்கள் இருந்தது ஒரு பூக்கடையில் பூ வாங்கினேன் நல்ல நெருக்கமாக கட்டிய மல்லியப்பூ  முழம் முப்பது ரூபாய் இரண்டு முழம் வாங்கினேன் சற்று தள்ளி ஒரு அர்ச்சனை கடையில் அர்ச்சனை வாங்கினேன் அம்பாளுக்கா? அய்யனுக்கா என்றார் கடைக்காரர் அய்யனுக்கே கொடுங்கோ என்றேன். அவரும் நான் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தார் நான் வாங்கிகொண்டு பணத்தை கொடுத்தேன் அவறும் புன்முறுவலோடு வாங்கிக்கொண்டு இதை பிள்ளை வையுங்கன்னு இலவச இணைப்பா அருகம்புல்லை நீட்டினார்.