Wednesday 30 September 2015

மாதுளை / மூலிகை மருத்துவம்

மாதுளம் பழத்தை தொடர்ந்து நாற்பது நாட்களுக்கு உட்கொண்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும். வயிறு தொடர்பான பல நோய்கள் குணமாகும். உணவுக்குப் பின் ஒரு மணி நேரங்கழித்து உண்பது நல்லது.

Thursday 24 September 2015

நினைவு பெட்டகம்

தெருவில் தற்செயலாய்
கிடைத்த வைரத்தை
வெல்வெட் பெட்டியில்
வைத்து பாதுகாப்பதுபோல்
உன் நினைவுகளை
என் உள்ள பெட்டகத்தில்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
யாருமில்லாத போது
அந்தப்பெட்டியை திறந்து
பார்த்து உனது நினைவில்
மூழ்கிபோகிறேன்...
நீயோ ஏதும் அறியாததுபோல்
விலகிபோகிறாய்!  



Tuesday 22 September 2015

இலவங்கம் / மூலிகை மருத்துவம்

இந்த பக்கத்தில் பதிவிடும் அனைத்து மருத்துவக் குறிப்புகளும் எனக்கு நன்கறிந்த பயன்படுத்திப் பார்த்த மூலிகைகளை மட்டுமே இங்கு நான் பதிவிடுகிறேன். அவை எந்தளவிற்கு குணமாகிறது என்பதை அறிந்த பிறகே உங்களுக்கு பயன்பெறட்டும் என்ற நல்லெண்ணத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதில் எந்தவித பயமும் உங்களுக்கு வேண்டாம். எனது இல்லத்தில் சில மூலிகைகள் உள்ளன .


இலவங்கம்

இது இந்தியாவிலும் இலங்கையிலும் பயிராகிறது. எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.

எந்த நோயை குணப்படுத்தும்?

மயக்கம், பேதி, வாந்தி, குருதிக் கழிச்சல், எருவாய்க் கடுப்பு, செவிநோய், கண்ணில் பூ, படைகள் ஆகியவற்றை நீக்கும்.

இதை எப்படி பயன்படுத்துவது?

Monday 21 September 2015

அன்பும் அறனும் உடைத்தாயின்

நாம் தேவைப்படும் போதுமட்டும்
அம்மா அப்பாவாகிறோம்
அக்கா தங்கையாகிறோம் - ஆனால்
தேவை முடிந்தவுடன் அவர்களுக்கு
நாம் யாரோவாகிறோம்..!


பொன்னாங்கண்ணி கீரை / மூலிகை மருத்துவம்

தங்கம் போன்ற மேனி உங்களுக்கு வேண்டுமா? அப்ப இதை படிங்க.

பொன்னாங்கண்ணி:

இந்த கீரையில் தங்கசத்து உண்டென்றும், இதை முறைப்படி உண்டு வருபவர்களது உடல், தங்கம் போன்ற மேனியைத் தரும் என்றும் பெரியோர் கூறியுள்ளனர். பொன்னாங்கண்ணி என்பது பொன்+காண்+நீ இதை உண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் என்பது பொருள்.

இதை எப்படி பயன்படுத்துவது?

Sunday 13 September 2015

நில வேம்பு / மூலிகை மருத்துவம்

நில வேம்பு:

இது எந்த நோயை குணமாக்கும்?
வலிசுரம், நீர்க்கோவை, மயக்கம் ஆகியவற்றை போக்கும்.

இதை எப்படி பயன்படுத்துவது?

Wednesday 9 September 2015

இந்தியா வல்லரசு ஆகும் அரசு நினைத்தால்

           நம்ம இந்தியா வல்லரசு ஆகும் வல்லரசு ஆகும்னு எல்லோரும் ஒரு பக்கம் கனவு காணுறாங்க. இன்னொரு பக்கம் இந்தியா ஏழை நாடு என்று ஒரு பக்கம் விமர்சனம் பண்றாங்க. இதற்கு என்ன செய்யலாம்? ஒன்று ஒவ்வொரு குடும்பத்திலும் கட்டாயம் ஒருவருக்கு வேலைவாய்ப்பை அரசு கொடுக்க வேண்டும். அல்லது ஒரு குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவி கொடுத்தால் இந்தியா ஏழை என்று யார் சொல்ல முடியும். அந்த குடும்பங்கள் அதை வைத்து தனது வளத்தை பெருக்கிக் கொள்ளும் புதிய தொழில்த்துறைகள் முளைக்கும் அனைவரும் முன்னேற்ற பாதையில் செல்வார்.

சிறு குறிஞ்சான் / மூலிகை மருத்துவம்

சிறுகுறிஞ்சான்

இது கொடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் பொடி நீரிழிவு நோயைத் தணிக்க வல்லது. வயிறு தொடர்பான சிறு நோய்களைத் தணிக்க வல்லது.

இலையைப் பாலில் அவித்து நிழலில் உலர்த்தி பொடித்து காலை உணவுக்குப் பின்னும் இரவு உணவுக்குப் பின்னும் ஒரு கிராம் எடை அளவாக உண்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். குணமடையும்.

Monday 7 September 2015

தனியா / மூலிகை மருத்துவம்

தனியா:

இது எந்த நோயை குணப்படுத்தும்?

பசியைத்தூண்டும், அகட்டுவாய் அகற்றும், சிறுநீர் பெருக்கும்.

Saturday 5 September 2015

பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை


பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை


பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை



பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை



பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை


குப்பை மேனி / மூலிகை மருத்துவம்

குப்பைமேனி:

சுவை: கைப்பு, கார்ப்பு,

இது எந்த நோயை குணப்படுத்தும்?

இதன் இலையால் பல்லடி நோய், தீச்சுட்ட புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய் மூலம், நமைச்சல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல் கோழை ஆகியவற்றை குணமாக்கும்.

Wednesday 2 September 2015

கீழாநெல்லி/மூலிகை மருத்துவம்

கீழாநெல்லி:

;
இதன் சுவை : துவர்ப்பு, கைப்பு, புளிப்பு, இனிப்பு தன்மையுடையது.

இது எந்த வகை நோயை  குணப்படுத்தக் கூடியது?

இம்மூலிகையினால் வயிற்று மந்தம், தீக்குற்றத்தால் விளைந்த கேடு, கண்ணில் தோன்றும் நோய்க் கூட்டங்கள் குருதிக் கழிச்சல், நீரிழிவு, காமாலை, சுரம் வெப்பம், நாட்பட்ட மேகப்புண் ஆகியவற்றை இவை போக்கும்.

இதை எப்படி பயன்படுத்தலாம்?

Tuesday 1 September 2015

பருப்பு ரசம் செய்வது எப்படி

                நமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும்போது கிடைக்கிற திருப்தி எதிலும் இல்லை. பொதுவா நாம் செய்கின்ற சாம்பார் நல்லா இல்லை என்றால் அதை சரி செய்வது இந்த ரசம் தாங்க. சும்மா பூண்டை தட்டி போட்டு வைக்கிற ரசம் இல்லைங்க இது பருப்பு ரசம். பெரும்பாலும் இது எல்லோர் வீட்டிலும் வைப்பது இல்லை, கல்யாணவீட்டிலோ அல்லது ஹோட்டல்களில் மட்டும்தான் இதை வைப்பார்கள். இவர்கள் மட்டும் எப்படி வைக்கிறார்கள் நாம எப்படி வைத்தாலும் நல்ல வருதில்லையேன்னு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.

            இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் அட என்னங்க அப்படி பார்க்கிறீங்க .....  இப்பவே கிச்சனுக்கு வாங்க சூப்பரா ரசத்தை வைக்கிறோம் அசத்துறோம்.