Monday 21 September 2015

பொன்னாங்கண்ணி கீரை / மூலிகை மருத்துவம்

தங்கம் போன்ற மேனி உங்களுக்கு வேண்டுமா? அப்ப இதை படிங்க.

பொன்னாங்கண்ணி:

இந்த கீரையில் தங்கசத்து உண்டென்றும், இதை முறைப்படி உண்டு வருபவர்களது உடல், தங்கம் போன்ற மேனியைத் தரும் என்றும் பெரியோர் கூறியுள்ளனர். பொன்னாங்கண்ணி என்பது பொன்+காண்+நீ இதை உண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் என்பது பொருள்.

இதை எப்படி பயன்படுத்துவது?


செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையை செம்மையாக நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு கூட்டிப் புளியை நீக்கி கற்பமுறையின் படி ஒரு மண்டலம் உட்கொண்டுவர உடலுக்கு அழகு, பொன்னிறம், நீண்ட ஆயுள், கண் குளிர்ச்சி ஆகியவை குணமாகும்.

எந்த நோயை குணமாக்கும்?

கண்புகைச்சல், கருவிழிநோய், வாயு, ஈரல் நோய், இவைகளை குணமாக்கும்.

உப்பில்லாமல் வேகவைத்து, வெண்ணெயிட்டு நாற்பது நாள் உண்டு வர கண்ணில் உண்டாகும் நோய் தீரும்.
இதை அறைத்து, அடையாகச் செய்து, ஒரு நீர் நிறைந்த பானைமீது அப்பி, மறுநாள் காலையில் இதை எடுத்து கண்களின் மீது வைத்து கட்ட கண் நோய் தீரும்.

No comments:

Post a Comment