Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, 29 July 2022

அள்ளித் தந்த வானம்

மழை.... மழை.....!!!!!.....!!!!!!!......!!!!!....!!!!!.....

மழை பெய்கிறதா என எட்டிபார்க்கையில் 
கொட்டுற மழையில சொட்ட சொட்ட
நனைந்து போகிற ஜோடி...

அய்யோ துணி நனைச்சுடுச்சே ன்னு

Saturday, 17 February 2018

விரிசல்

நான் போகிறேன்
மெல்ல மெல்ல
உன்னை விட்டு..!

Monday, 30 October 2017

மழைத் தோழி

நான்...
மழையில் நனைந்து செல்கிறேன்
என் மேல் விழுந்த மழைந்துளிகள்
உன் நினைவுகள் போல் மெல்ல
உருண்டு ஓடுகிறது..!

Saturday, 23 September 2017

நீயும் நானும்

ஏனடி நீ என் மனதில்
இத்தனை ஆசைகளை
விதைத்து செல்கிறாய்..?
வறண்ட பூமியில்
தண்ணீருக்காக போராடும்
விவசாயி போல் - உன்
வருகைக்காக வழிமேல் விழிவைத்து
ஆசையோடு காத்திருக்கிறேன் நான்...!

Monday, 26 June 2017

காரம்

விடுமுறை நாட்களில்
விதவிதமா சமைச்சு
அம்மாவுக்கு கொடுக்கையில்
எனக்காச்சும் இதெல்லாம்
கிடைக்குது சிலருக்கு
பழைய கஞ்சி கூட
கிடைக்குதுல்லன்னு அம்மா
சொல்கையில் ஆசையாய்
அள்ளி சாப்பிட்ட மீன் குழம்பு
தொண்டையில் சிக்கி
நறுக்கென்று குத்துகிறது
கண்களில் கழுக்கென்று
கண்ணீர்த்துளி கண்களை
துடைத்தப்படி சாப்பிடுகிறேன்
குழம்பில் காரம் கொஞ்சம்
அதிகம்தான் இல்ல..!

Monday, 12 June 2017

தாய்மடி

பவுர்ணமி நிலா
பட்ட பகலாக எரிய
வட்ட வாசலில்
உற்றார் உறவினார்
ஊர்கதை பேச
அம்மா மடியில்
படுத்து பாதி கதை
கேட்டும் கேட்காமலும்
தூங்கிய காலம்
இனி வரப்போவதில்லை

Monday, 29 May 2017

மாட்டு இறைச்சியும் மனித நேயமும்

               எப்பா பெருமைக்குரிய போராளிகளே... மோடியை எதிர்க்க மாட்டுக்கறி சாப்பிட்டுதான் எதிர்கனும்னு இல்ல... வேற நல்ல வழியிலும் எதிர்க்கலாம்...

Thursday, 19 January 2017

புதிய பாரதம் ....... Jallikkattu

           அன்று மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்து முக்கூடழ் ஆனது, இன்றோ மெரினாவில் இளைஞர்கள் தங்கள் வீரத்தை பறை சாற்ற முக்கூடல் ஆனது சென்னை... ஜல்லிக்கட்டு வீரத்திற்கு அழகு என்ற போதும் தமிழ் உணர்வுகளுக்கு இளைஞர்கள் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

Tuesday, 3 January 2017

யாதுமாகி நின்றாள்

பா -  விதைக்கிறேன்...
அறுவடை செய்ய ஆளில்லாமலே!
சந்தம் - இசைக்கிறேன்...
யாசிக்க யாருமில்லாமலே!
நாண் - ஏற்றுகிறேன்...
இலக்கு தெரியாமலே - ஏனெனில்
நான் யாதுமறியாதவள்...
யாதுமாகி நின்றாள்!

Saturday, 6 August 2016

கருப்பு பெட்டிக்குள் சிவப்பு இதயம் / நண்பர்கள் தின கவிதை

       
                         


அடிக்கடி கடலில் விழுகின்ற
விமானம் போல் உன் மனக்கடலில்
விழுந்து நான் காணாமல்
போய்க்கொண்டு இருக்கிறேன் ...

சாலையோர யாசகன்


நீ....
நடந்து வருகையில்
சாலை மரங்களெல்லாம்
பூக்களைத் தூவி
சாமரம் வீசுகிறது...!

Tuesday, 26 July 2016

தொலைந்த விமானம்

முன்பு
விமானம் பறந்து செல்கையில்
எதிர்பார்ப்பு இருந்தது
ஏமாற்றத்தோடு பார்த்தேன்...!

Wednesday, 20 July 2016

திசை மாறிய காற்று - viedo


                   கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி இதுவரை உங்களை கஷ்டபடுத்தியது போதாது என்று செவி வழியாகவும் தொல்லைக்கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்.... ஹா....ஹா....



கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்...... அய்யோ......

Wednesday, 1 June 2016

காத்திருப்பு

நீரற்ற நதிக்கரையில்
காத்திருக்கும் கொக்கைபோல்
யாருமற்ற நந்தவனத்தில்
உனக்காக காத்திருக்கிறேன்..!

Friday, 20 May 2016

தடாகம்

அல்லி தடாகம்
ஆளில்லாத நந்தவனம் போல்
வெறுமையாக...!

காற்று வாங்க போனேன்

கடற்கரை மணலில்
காலார நடந்து சென்று
ஓரிடம் பிடித்தமர்ந்தேன்
பால் போல் பொங்கி வந்த
கடலன்னை நான் இருக்கும்
இடம் நோக்கி மெல்ல வந்து
என் கால்களை வருடி போனாள்
நான் மெய்சிலிர்த்து போனேன்...!

Saturday, 28 November 2015

முத்தம்

செவ்விதழ்கள் இரண்டு
சேர்ந்தது இருப்பதைக்கண்டு
சிரிப்பைக் காட்டி
பிரித்து வைக்கிறது பற்கள்
துக்கத்தை தொலைத்துவிட்டு
அழகாய் சிரிக்கிறது
உதடுகள்...!