Tuesday 20 March 2018

பள்ளிப் பருவத்திலே / குறுநாவல்

(வணக்கம் இதனால் வரை தொடராக எழுதி வந்த பள்ளிப் பருவத்திலே சிறுகதையை இணைத்து குறுநாவலாக  மாற்றியிருக்கிறேன் நன்றி)


            சுதா சில வருடங்களுக்கு பிறகு அவளது பள்ளித்தோழியான கலா வீட்டிற்கு இப்போதுதான் முதல் முறையாக செல்கிறாள் . கலா எத்தனையோ முறை அழைத்தும் சுதா போகவில்லை இன்றும் அவள் போயிருக்க மாட்டாள் சென்னையில் ஒரு வேலை விஷயமாக சென்றதால் அப்படியே அவளை பார்க்கலாமே என்று செல்கிறாள். கலாவிடம் ஏற்கனவே தான் வருவதாக சொல்லியிருந்தாள். ஒருவழியாக சென்னை வந்து இறங்கியதும் ஒரு ஆட்டோ பிடித்து அட்ரஸ் சொல்லிவிட்டு இப்போது கலா நம்மை எப்படி ரிசிவ் செய்யும் அதே போன்று இருக்குமா?  இல்லை வேறு விதமாக இருக்குமா என யோசித்தபடி இருந்தாள் சிறிது தூரம் வந்ததும் இந்த ஏரியா தானே என மெல்ல ஆட்டோவுக்கு வெளியே தலையை நீட்டி எட்டிப்பார்த்தாள் கொஞ்ச தூரத்தில் கலா நின்றுக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு ஆட்டோகாரரிடம் அதோ அந்த ஹேட்டுக்கு முன்னாடி நிப்பாட்டுங்க என்றாள். ஆட்டோவும் அங்கே ஓரங்கட்டியது அவர் கேட்ட ஐம்பதை திணித்துவிட்டு ஆட்டோவை விட்டு இறங்கினாள் சுதா.

              கலா வாயெல்லாம் பல்லாக "வா..வா.. இப்பதான் உனக்கு வர்றதுக்கு வழி தெரியுதா ஒரு போன் இல்ல ஒன்னும் இல்ல நானா பேசினாதான் உண்டு எம்புள்ளைங்க ரெண்டும் டெய்லி கேட்கும் என்னம்மா ப்ரண்டு ப்ரண்டுன்னு சொல்வே ஒரு போன் கூட பேசுறாங்க இல்லன்னு நான் அவங்களுக்கு ஏதாவது சொல்லி சமாளிப்பேன் " என்றபடி மூச்சுவாங்க மேலே கூட்டிச்சென்றாள் கலா.. பத்து பதினைஞ்சு குடித்தனம் இருக்கும் அபார்ட்மென்ட் வரிசையாக வீடு அதில் ஒரு வீட்டின் முன் நின்று செப்பலை இங்கேயே கழட்டி போடு வீட்டுல பூஜையறை தனியா இல்ல ஹால்தான் வைச்சுருக்கோம்  அதான் நாங்க உள்ள போடுறதுல்ல என்றபடி உள்ளே சென்றாள் கலா. சுதா அவள் பின்னே ஒன்றும் பேசாமல் சென்று கொண்டு வந்த பேக்கையும், வாங்கிட்டு வந்த பழங்களையும் அங்கே வைத்துவிட்டு நிமிர்ந்தவள் வீட்டை கண்களாலே அளந்தாள் சின்னதா ஒரு ஹால், அதையொட்டி ஒரு பெட்ரூம்,அதையொட்டி ஒரு ரூம் அதன் அருகே பாத்ரூம் அதன் அருகிலே சின்னதாய் ஒரு கிச்சன். இதையெல்லாம் பார்த்தபடி நின்றவளின் கையில் இந்த தண்ணிய குடி என்று சொம்பை திணித்தாள் கலா.

Monday 19 March 2018

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள் (சிறுகதை)

       

           "அம்மா... அம்மா... " என்று அழைத்தபடி அங்கிருந்த ஷேரில் அமர்ந்தான் கண்ணன்.

       "என்ன சொல்லு எனக்கு வேலையிருக்கு" என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் கண்ணனின் அம்மா ராசாத்தி.

       "எங்க கலேஜ்ல படிக்கிற ரமேஷ் அக்காவுக்கு மேரேஜ் என்னை கூப்பிட்டுருக்கான் நானும் போகனும்மா..." என்றான் மெல்ல.

        "யாருடா அது அன்னைக்கு போன்ல பேசினானே அவனா?"


        "இல்லம்மா இவன் வேற என்னம்மா நான் போகட்டுமா..."

Wednesday 7 March 2018

பள்ளிப்பருவத்திலே 4

       

            நட்பென்று வந்து விட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய தூண்டு் இல்லையா என்னதான் நம் உறவுகள் இருந்தாலும் நண்பர்கள் கூட பேசுவது, அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பது, அவர்களுக்காக காத்திருப்பது வரவில்லை என்றால் கோபப்படுவது, சண்டை போடுவது, கொஞ்ச நேரம் பேசாமல் இருப்பது பிறகு எதுவுமே நடக்காதது போல் பேசுவது இது எல்லாமே நட்பில் மட்டும்தான் முடியும். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை எல்லா உறவுமே நட்பில் மொத்தமாக ஒருவரிடம் அடங்கிவிடுகிறது அதனால்தான் ஒவ்வொருக்கும் நட்பென்றால் ஒரு தனி பிரியம் ஏற்படுகிறதோ என்னவோ. கலா சுதாவை விட்டு பிரிந்த பிறகு வள்ளி மட்டுமே சுதாவின் இதயத்தில் முழுமையாக இடம் பிடித்திருந்தாள். வள்ளிக்கா என்ன வேண்டுமென்றாலும் செய்ய காத்திருந்தாள். சமையலில் தொடங்கி டிரெஸ் வரை அவளுக்காக பார்த்து பார்த்து செய்து அழகு பார்த்தாள் சுதா.

Friday 2 March 2018

பிஞ்சிலே பழுத்த பழம் (3)

                                                    -தொடர்ச்சி
           



               சிறுவயதில் காதல் என்பது ஒரு இன கவர்ச்சியே அது அத்தனை பக்குவபடாதது. எப்போதும் அது வாழ்க்கைக்கு ஒத்து வராது இன்றைய பிள்ளைகள் அதை மறுக்கிறார்கள் நல்லா உல்லாசமாக சுத்துகிறார்கள் தியேட்டர், பீச் என்று இரவில் செல்கிறார்கள் கேட்டால் பாய் பிரண்ட் தட்ஸ்ஆல் னு சொல்லிட்டு போறாங்க இன்னொரு பக்கம் வீட்டில் பார்க்கின்ற பையனையோ பெண்ணையோ கல்யாணம் செய்து விட்டு எல்லாவற்றையும் மறந்து விட்டு போய்விடுகிறார்கள் இதுதான் இன்றைய உண்மையான காதல். இப்படிதான் கண்ணனுக்கும் நிர்மலாவுக்கும் காதல் காட்டுத் தீ போல் படர்ந்தது சைவமாக இருந்த காதல் அசைவாக மாறியது.