Saturday 29 November 2014

கனவு சிறுகதை


            காலை நேரமது மழை லேசாக தூரிக்கொண்டு இருந்தது. ஆங்காகங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது . கருவேலங்காடு நிறைந்த அப்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடிசை  வீடுகள்.

       அந்த வீடுகளுக்கு சற்றுத் தள்ளி ஒரு மண் சாலை அதில் எப்போதோ போடப்பட்டது. அந்த மண் சாலையில் இப்பவோ அப்பவோ என்று விழும் நிலையில் பழுதடைந்த மின்கம்பம் ஒன்று நின்று கொண்டிருந்தது. போதுமான சாலை வசதியோ மின்சார வசதியோ மருத்துமனை வசதியோ இல்லாத கிராமம் அது.
         
          அந்த குடிசை வீட்டின் முன் சுள்ளிகளை வெட்டிக்கொண்டிருந்தாள் வேளாயி... ஒல்லியான தேகம், எண்ணெய் தேய்க்காத தலை, கழுத்தில் தாலி இல்லை கிழிந்து போன சேலையும் நைந்து போன ரவிக்கையுமாய் காட்சித்தந்தாள். "என்ன கருமம் புடிச்ச மழையிது தொண தொணன்னு பேஞ்சுகிட்டு ஒரேதா பேஞ்சும் தொலைக்கவும் மாட்டேங்குது நம்ம பொழப்பையும் கெடுத்துகிட்டு" என்றவாறு உள் நோக்கி குரல் கொடுத்தாள்.

Friday 28 November 2014

நெருப்பாற்றில் நீந்தும் பெண்கள்

பெண்களை
தெய்வமென போற்றியவன்- இங்கே
துயிலுரிக்கின்றான்..! 

பெண்ணையும்
பெண்ணின் அங்கங்களையும்
கண்களால் எடைபோடும்
காமூகர்களின் கண்கள்
எப்போது எரிந்து சாம்பலாகும்?

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள் சிறுகதை

                                   -தொடர்ச்சி

          பஸ் ஸ்டாண்டை நெருங்கியதும் ஜன்னல் வழியாக நிர்மலாவைத் தேடினான் கண்ணன். நிர்மலா நகத்தை கடித்து துப்புவதும், கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தால் அவள் கோபத்தில் இருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்லியது போய் சமாதானம் செய்ய வேண்டும் என நினைத்தப்படி பஸ்சை விட்டு இறங்கி நிர்மலாவிடம் சென்றான்.

          "என்னங்க இப்படி லேட் பண்ணிட்டிங்க கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?"

        "என்ன செல்லம் பண்றது கிளம்பிதானே வரமுடியும் அம்மா ஒரு வேலை சொல்லிட்டாங்க" "சரி சரி வாங்க பஸ் நிக்கிது" இருவரும் கொடைக்கானல் பஸ்சில் இடம் பார்த்து ஏறி அமர்ந்தனர். நிர்மலாதான் பேச்சை ஆரம்பித்தாள். "என்னங்க நாம மேரேஜ்னு பொய் சொல்லிட்டு கிளம்பி வந்துட்டோம் அவங்களும் நம்பிட்டாங்க ஆனாலும் பயமா இருக்குங்க"

Thursday 27 November 2014

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்..! சிறுகதை

         "அம்மா... அம்மா... " என்று அழைத்தபடி அங்கிருந்த ஷேரில் அமர்ந்தான் கண்ணன்.

       "என்ன சொல்லு எனக்கு வேலையிருக்கு" என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் கண்ணனின் அம்மா ராசாத்தி.

       "எங்க கலேஜ்ல படிக்கிற ரமேஷ் அக்காவுக்கு மேரேஜ் என்னை கூப்பிட்டுருக்கான் நானும் போகனும்மா..." என்றான் மெல்ல.

        "யாருடா அது அன்னைக்கு போன்ல பேசினானே அவனா?"

        "இல்லம்மா இவன் வேற என்னம்மா நான் போகட்டுமா..."

         "சரி.. சரி.. போகலாம் அதுக்கு முன்னாடி கடையில போய் சிலிண்டரை மாத்தி வைச்சுட்டு போ டேட் முடிஞ்சிட்டு அப்புறம் தீர்ந்து போச்சுன்னா தரமாட்டான்.."

Sunday 23 November 2014

பொம்மை




என் மனம் உனக்கு
விளையாட்டு பொம்மையா ?
வைத்துக்கொள்வதும் தூக்கி
எறிவதுமாக இருக்கிறாயே..!

அது என்ன?
நீ அழும்போதும் மட்டும்
என்னை உன்கூடவே
வைத்துகொள்கிறாய்..?

சுயநலம்

நாம் எல்லோருக்கும் 
 பிடித்தவராகிறோம் 
மற்றவர்களை விட 
முக்கியமானவர்களாகிறோம் 
அவர்களுக்கு தேவைப்படும்போது ..!

புரிதல்

உன் நண்பன் உண்மையாய் 
இல்லை என்று எப்போ
உணர்கிறாயோ அப்போதே 
            விலகிகொள்வது உத்தமம்..!


Friday 21 November 2014

தியாகம்

நண்பர்கள் ... உனக்காக
உருகும் மெழுகுவர்த்திகள்..
உனக்காக  எரியும் தீபங்கள்..!

Thursday 20 November 2014

சிந்தனை துளிகள்

         இதயம் ஒரு அழகான வீடு
        அதில் குப்பைகளை கொட்டாதீர்கள்
         சுத்தமாக வைத்திருக்க
         முயற்சி செய்யுங்கள்

சிந்தனை துளிகள்

           மனதிற்கு நெருக்கமானவர்களை
           மட்டும் அருகில் வையுங்கள்
           கஷ்டங்கள் மட்டுமல்ல
           தீயவைகளும் தூர விலகிவிடும்...!

மழைக்கால டிப்ஸ்

        மழைக்காலங்களில் மின்சாரம் அடிக்கடி தடைபடும் அதனால் டார்ச் லைட், செல் போன், இவைகளில் முன்னதாக ஜார்ச் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

       மழைக்காலங்களில் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கு நோய் தொற்று அதிகமாக இருக்கும் அதற்கு தேவையான மருத்திரைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

Wednesday 19 November 2014

மருத்துவம்/மூலநோய் குணமாக

          சுக்கை மேல் தோல் சீவி அரைத்துக் கொதிக்க வைத்து இரவில் பூசிக் காலையில் பார்க்க கரைந்து போகும்.

         காட்டுக் கருணை, கறிக் கருணை, பிரண்டை, கடுக்காய் தூள் இவைகளை 25 கிராம் சூரணித்து வேளைக்கு கொட்டைபாக்கு அளவு எடுத்து தேனில் குழைத்துத் தினம் 3 வேளை ஆகாரத்திற்கு மேல் உண்டு வந்தால் சர்வ மூலமும் சாந்தியாகும். கோழிக்கறி, பச்சை மிளகாய், நண்டு, இறால் ஆகாது.

         இளநீர் தேங்காயின் வழுக்கையுடன் கற்கண்டு தூள் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் 30 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு தணியும், மூல நோயை ஆரம்பத்திலே கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

நிலாச்சோறு

நமக்கான நட்பைக் கண்டு
நிலா கேட்கிறது நிலாச்சோறு
இனி நான்..நீ.. நிலா.!

அமிர்தம்

நல்ல நட்பு கரும்பு போன்றது-அது
அன்பாக மாறும்போது இனிக்கிறது
அதுவே நீயாகும்போது
எனக்கு அமிர்தமாகிறது..!

Tuesday 18 November 2014

புத்தகத்தின் மறுபக்கம்

           எனக்கு சிறுவயது முதல் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. நான் மனிதர்களோடு பழகியதைவிட, புத்தகங்களோடு புழங்கியதுதான் அதிகம். அதனால்தானோ என்னவோ மனிதர்களை தூரத்தில் வைத்திருக்கிறேன், புத்தகங்களை அருகில் வைத்திருக்கிறேன். புத்தகத்தின் வழியாகதான் ஒவ்வொரு மனிதனையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது அவர்களை விட்டு விலகியிருக்க முடிந்தது. புத்தகத்தை படித்தால் மனித மனங்களை படிக்க முடியும்.

          18 வயதில் இராமயணம் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் அக்கா வந்து "இப்போதே இராமயணம் படிக்கிறாயான்னு" கேட்டாங்க இந்த வயதில்தான் படிக்க வேண்டும் என்று நிபந்தனைகள் உண்டா என்ன, இப்படி சொல்லி சொல்லிதான் நாம் நல்ல விஷயங்களை தாமதமாக உணர்கிறோம்.

Monday 17 November 2014

கீதை-12

           உபாசகர்கள் இரண்டு வகை தான் வேறு இறைவன் வேறு என்று நினைப்பவருக்குப் பகவான் தனியொரு வடிவில் காட்சி தந்து, அருள்புரிகிறார்.

          தானும் பரமாத்மாவும் ஒன்றேயெனக் கொண்டவருக்கு பகவான் ப்ரம்மஜோதியாய் நின்று அருள்புரிகிறார்.

                அவரே உருவமுள்ளவர்ஸகுணர்
                அவரே உருவமற்றவர் - நிர்குணர்

          எப்படிப் பார்க்கிறோமோ அப்படித் தெரிவார்.

   யார் அடைந்தவோ அவர் அறிகிறார்.
   யார் அறிந்தவடோ அவர் அடைகிறார்.

                              -முற்றும்-


 

( கீதை பிறந்த கதை என்ற சிறு முன்னோட்டத்தை வாசகர்களுக்கு தொடராக பதிவு செய்து வந்தேன். வாசித்த உள்ளங்களுக்கு எனது நன்றிகள். கீதையை படித்தால் என்ன அனுகூலம் என்பதை விளக்கும் சிறு முன்னோட்டம் கீதை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்.)

தலவிரிச்சம்

வீசிப்போன புயலில்
விழுந்த வேர் நான்
 தொலைந்து போவேனென்று
 நினைத்தாயோ..!
தலவிரிச்சமா வளர்ந்து
 உனக்கு நிழல் கொடுப்பேன்..!

Sunday 16 November 2014

கீதை-11

           கீதை வாசிப்பு ஒரு ஞானவேள்வி. நாம் இன்னொரு வேள்வி நடத்த வேண்டியதில்லை. வாசிப்புக்கே அத்தனை மகத்துவம் என்கின்றபோது, வாசித்தபடி வாழவும் தொடங்கிவிட்டால்..!

           பகவான் உரைத்த கட்டளைகள் 'கீதோபதேசம்' அந்த உபதேசத்தைக் கடைப்பிடிக்கிறவர் பகவானுக்குப் பிரியமானவராவர். கீதையில் பகவானுடைய சுவாச ஸ்பரிசம் நமக்குக் கிடைக்கின்றது. அதுமட்டுமா அவரைத் தரிசிக்கவும், அவருடன் உரையாடவும் கூட முடிகிறது. 

            'வேள்வி பலனும், விரத பலனும்
             தான பலனும், தவப் பலனும்
             கீதையை வாசிப்பவருக்கு
             ஒருசேரக் கிடைத்துவிடுகிறது'

        உலகம் பகவானுடையது. அவனுடைய கருவி நாம் இதில் எந்த லாபமும் நமக்கில்லை, அப்படியேதான் எந்த நஷ்டமும் நமக்கில்லை. லாபநஷ்டமில்லை என்கின்ற போது அதுபற்றி சந்தோஷப்பட என்ன இருக்கிறது, வருத்தப்படத்தான் என்ன இருக்கிறது? மனதைச் சமநிலையில் வைத்திரு என்கின்றது கீதை. காரியம் நம்முடையதில்லை என்கின்றபோது அதன் விளைவுகள் பற்றி நாம் யார் கவலைப்பட?

                                                       -தொடரும்

கீதை -10

          நாம் மூழ்கி எடுக்கின்ற ஒவ்வொரு முறையும் புதுப்புது முத்துக்கள்! புதுப்புது பொருள்கள்!

        சொல் புதிது, பொருள் புதிது என்பதோடு அதன் சுவையும் புதிதுதான் சுவைக்கின்ற ஒவ்வொரு முறையும்.

        கீதையின் ஒவ்வொரு வரியும் ஒரு நன்னெறியைச் சொல்கிறது. இது பகவானுடைய விஷயம். இதில் விஞ்சி நிற்பது சொல்லா, பொருளா, சுவையா என்று நாம் ஆராயக் கூடாது.

       கீதை வாசிப்பு வியாசர் இப்படிக் கூறுவார்:

        'கீதா ஸுகீதா கர்தவ்யாகி மந்யை
         காஸ்த்ர ஸங்கிரஹை!
         யா ஸ்வயம் பத்மநாபஸ்ய
        முக பத் மாத் விநி : ஸ்ருதா' என்று.

         கீதையை நல்லவிதமாய் கேட்கவும், பாடவும் செய்ய வேண்டும். படிக்கவும், கற்பிக்கவும் செய்ய வேண்டும். மனதில் பதிக்க வேண்டும். பகவான் பத்நாபரின் முகக் கமலத்திலிருந்து வெளிப்பட்டது.

 நாம் கீதையை ஓதி உணர்ந்தபின் வேறெந்த நூலும் அவசியப்படாது. கங்கையில் மூழ்கியெழுந்தவன் தன்னைத்தான் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். தனக்கு மட்டுமே அனுகூலமாயிருக்கிறான்.

        கீதையில் மூழ்கி எழுந்தவனோ தன்னை மட்டுமின்றி, உலகத்தையே தூய்மைப் படுத்துகிறான். தனக்கு மட்டுமின்றி, தான் வாழும் சமுதாயத்துக்கே அனுகூலமாகிறான்.

                                           -தொடரும்

Saturday 15 November 2014

மருத்துவம்/குதிகால் வெடிப்பு நீங்க

         மருதோன்றி இலையை நன்றாக அரைத்துத் தினமும் படுக்கும்போது குதிகால் வெடிப்பு உள்ள பாகங்களில் தடவி வந்தால் சில நாட்களில் குதிகால் வெடிப்பு குணமாகிவிடும்.

         விளக்கெண்ணையில் தேவையான சுண்ணாம்பைக் கலக்கி வைத்துக் கொண்டு குதிகால் வெடிப்புகளில் அடிக்கடி தடவி வந்தால் குதிகால் வெடிப்புக் குணமாகிவிடும்.

Friday 14 November 2014

கீதை-9

            பரமாத்மா ஆனந்தம, பக்திகாந்தம. அது ஜீவாத்மாவை ஈர்க்கின்றது, எல்லையற்ற ஆனந்தத்தில் ஜீவனை இணைக்கிறது.

           பதின்மூன்று முதல் பதினெட்டு அத்தியாயங்கள்வரை பேசப்படுவது ஞானயோகம. ஞானம் அறிவொளி. அஞ்ஞான இருட்டை அகற்றுவது. ஞான யோகத்தின் மூலம் சாதகன் சித்சொரூபத்தை அடைகின்றான். ஜீவானுபவத்தின் உச்சம் அது.

           'நீயும் நானும் ஒன்று
            நாம் வேறு வேறு அல்ல'
என்பதை உணர்த்துவது.

          வாழ்க்கையின் குறிக்கோள் முக்தி. முக்திக்கும் வழிகாட்டும் கீதை. எத்தனையோ மகான்களும், மேதைகளும் கீதைக்கும் உரையாசிரியர்கள். வரிகள் மாறின, பொருள் மாறவில்லை. உண்மை அப்படியே மாறாதிருக்கிறது.

                      கீதையின் அவசியம்

   
             கீதை- பகவான் உரைத்தது. மனிதர்களின் வார்த்தைக்கே மகாசக்தி உண்டென்கின்ற போது, பகவானின் வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்.

           எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எளிமையாய்ச் செய்யப்பட்டது.

         கடலைப்போல் அகண்டதாய், ஆழமுடையதாய் இருக்கிறது கீதை. அது உப்புக் கடலல்ல உண்மைக் கடல். நாம் வாழ்க்கை முழுவதும் அள்ளியள்ளி எடுத்தாலும் அத்தனையும் கைக்கு வராது.

                 கடலளவு கடலளவுதான்
                 கையளவு கையளவுதான.

¤முகநூல்¤ சிறுகதை

         "ஏய்... பவித்ரா மணி என்ன? அம்மா அதட்டலாக கேட்டாள்.

         "மணி 12 உங்களுக்கு மணி பார்க்கத் தெரியதா?"

         "அது எனக்குத் தெரியும் மணி 12 ஆகுது தூங்காம அப்படி என்னடி பேஸ்புக்ல பார்த்துட்டு இருக்க"

          "ஒரு ட்ராயிங் போட்டேன் ஒரு ஸ்டெட்டஸ் போட்டேன் லைக்கும், கமான்ஸ்ம் போட்டு இருக்காங்க அதான் தேங்க்ஸ்னு ரிப்ளே பண்ணிட்டு இருக்கேன்"

          "ஏன்டி உனக்கு அறிவு இருக்கா எப்ப பாரு பேஸ்புக் பேஸ்புக்" "நீங்களும் இதுல அக்கவுண்ட் வைச்சு பாருங்க அப்றம் இப்டி சொல்லமாட்டிங்க. நான் ஒரு கருத்து சொன்னா நூறு லைக் விழும் ஐம்பது கமான்ஸ் விழும் இதெல்லாம் உங்ககிட்ட சொன்னா நீங்க கண்டுக்கவே மாட்டிங்க அதனாலதான் பேஸ்புக் போறேன் இது ஒரு தனி உலகம்மா இதுல விழுந்துட்டா திரும்பி வர மனசே வராது. இதுல தான் அம்பானிக்கும் ப்ரண்ட் ரிக்ஹொஸ்ட் கொடுக்கலாம்."

          "ஏதோ எக்ஸாம் இருக்குன்னு அப்ளிக்கேஷன் போட்டியே ஏதாவது படிச்சியா? முதல்ல இந்த நெட்கார்டு போட்டு பார்க்கிறீயே அது உன்னோட காசு இல்ல முதல்ல நீ சொந்த கால்ள நில்லு அதுக்கப்புறம் உன் சொந்த கருத்தைப் போடு உனக்கே சொந்த காலில் நிக்க தகுதி இல்லாதப்ப நீ மத்தவங்களுக்கு எப்படி கருத்து சொல்வ.

¤சந்தியா¤ சிறுகதை

           காலை நேரமது யூனிபார்ம் அணிந்த பிள்ளைகள் ஸ்கூலுக்கு வேகமாக சென்று கொண்டிருந்தனர். ஆய்சா மட்டும் வருகின்ற ஒவ்வொரு பஸ்சையும் விட்டுவிட்டு தூரத்தில் பார்வையை போட்டப்படி நின்றுக்கொண்டிருந்தாள்... அவள் பார்வை யாருக்காவோ வெயிட்டிங் என்பதை சொல்லாமல் சொன்னது. அடிக்கடி கடிகாரத்தை பார்ப்பதும் எரிச்சலாக தூரத்தை வெறிப்பதுமாக இருந்தவளின் பிரகாஷமானது...

          "ஹாய்... ஆய்ஷா! என்ன ரொம்ப நேரமா அய்யாவுக்காக வெயிட்டிங்கா..." என்றபடி வண்டியை நிறுத்தினான் குமார்.

            "இல்லைங்க சார்... வந்து அஞ்சு நிமிஷம் தான் ஆகுது என்று நக்கலாக கூறிவிட்டு இன்னும் கொஞ்ச நேரம் லேட்டா வந்திருந்தா பஸ் புடிச்சு ஆபிஸ் போயிட்டு உனக்கு ஒரு குட்பாய் சொல்லிட்டு போயிருப்பேன்.."

           "சாரிம்மா... சாரி.. ரியலி வெரிசாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு அதுக்கு இத்தனை கோபமா..? அங்காளபரமேஸ்வரியே நேரில் பார்த்த மாதிரி இருக்கு சீக்கிரம் வண்டியில ஏறி உக்காரும்மா உன்னை ஆபிஸ்ல விட்டுட்டு போறேன்..."

Thursday 13 November 2014

கீதை-8

        பகவத் கீதை ஒரு சுருதி என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அது ஒரு ஸ்மிருதி என்பதும். அதன் பொருள் அவரவர் திறத்துக்கேற்ப விரித்துரைக்கப்படுகிறதேயின்றி, வரிகள் திருத்தி அமைக்கப்படவில்லை என்பது கீதையின் சிறப்பு.

          கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன என்று முன்பே குறிப்பிட்டோம். முதல் ஆறு அத்தியாயங்கள் கர்மயோக தத்துவத்தைப் பேசுகிறது. நாம் எதை எண்ணுகிறோமோ அதைச் செய்கிறோம். உறுதி பெற்ற எண்ணம் சங்கற்பம. தீர்மானம் செயல் வடிவம் எடுக்கின்ற நிலை கர்மம். வாழ விரும்புவது சங்கற்பம், வாழ்வது கர்மம்.

         உணர்வுகளை கர்மத்தின் ஆதார சுருதி. உணர்வுகளில் இரண்டு வகை.

      நேர்மறை உணர்வு - விரும்பத்தக்கது  
      எதிர்மறை உணர்வு - விலக்கத்தக்கது.

           விருப்பம், நட்பு, ஆசை, பொறுமை போன்றவை நேர்மறை உணர்வுகள் ஆகும். வெறுப்பு, பகை, சினம், பொறாமை போன்றவை எதிர்மறை உணர்வுகள் ஆகும்.

          ஏழு முதல் பன்னிரண்டு அத்தியாயங்கள் வரை சொல்லப்பட்டது. பக்தியோகம்.

        அன்பின் இன்னொரு பரிமாணம் பக்தி. அது தூய்மையே வடிவாய்க் கொண்டது. பக்தியில் கெட்டது நல்லதாகும். நல்லது மிக நல்லதாகும்.

பார்வைகள்

எண்ணங்கள் எழுத்துக்களாக
வண்ணங்கள் ஓவியங்களாக
சிதறிக்கிடக்கிறது இங்கே
ரசிப்பதற்கு ஆளின்றி..!

மருத்துவம்/இரத்த சோகை நீங்க

                          இரத்த சோகைக்கு


            கீழா நெல்லிச் சமுலத்தைப் பாலில் அரைத்துப் பாலில் கலக்கி உண்டு வந்தால் சோகை, காமாலை, உடல் வெளுப்பு, வாத பித்தம் நீங்கும், இரத்தம் அதிகரிக்கும், கண் குளிரும்.

          மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி சமுலத்தை மோரில் கரைத்து தினம் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் சோகை நீங்கிவிடும்.

         அயச் செந்தூரத்தைத் தேனில் கலந்து தினம் 2 வேளை கொடுக்கலாம்.

         சுமார் 3 சிறிய பீட்ருட் கிழங்கை எடுத்து இடித்து வடிகட்டி சாறு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சாற்றுடன் 4 டீஸ்பூன் தேன் கலந்து காலையில் தினம் வெறும் வயிற்றில் 22 நாளைக்கு சாப்பிட்டால் சோகை நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகும்.

Wednesday 12 November 2014

கீதை-7

                        கீதையின் சிறப்பு
         வேதங்களின் பொருளை கீதையில் காணலாம். அனைத்து உபநிடதங்களின் சாரமும் கீதையில் வாழ்வின் நெறிகளை முற்றாக உரைப்பது, சராசரி மனிதனுக்கும் பயன்படும, ஆன்மிக சாதகனுக்கும் பயன்படும். பக்குவங்கள் அனைத்தும் கொண்டது. இதில் சொல்லப்படாத தத்துவமே இல்லை.
 
            உடல், மனம், ஆன்மா சம்பந்தப்பட்டது யோகம். கீதை ஒரு யோக சாஸ்திரம்.

            பதினெட்டு யோகங்களை பதினெட்டு அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார் வியாசர். கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பிரதானமாய் அறியப்படும் நான்கு யோகங்களே இவ்விதம் விரித்துரைக்கப்படிருக்கிறது. கர்மத்தில் இருந்து ஞானம் இது மனித மனம் அடைகின்ற பரிமாணங்கள்.

         யோகம் என்பது என்ன? செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது.

       ஆத்மா சத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் விரவி நிற்கிறது. ஆத்மாவின் சொரூபம் கீதை.

        பரம்பரை தொட்டு, செவிவழி கேட்டுக் காப்பாற்றி வைத்த விஷயம் சுருதி எனப்படும். சொல்லும் பொருளும் மாறாதிருக்கும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்பட்ட விஷயம் ஸ்மிருதி எனப்படும். சமூக வாழ்வு சம்பந்தமான கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் இதில் சொல்லப்படிருக்கும். இது காலத்துக்கேற்ப மாறும். காலம், இடம், சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது மேலோரால் திருத்தி அமைக்கப்படும்.

                                             -தொடரும்

மருத்துவம்/நரை மாறுவதற்கு

நன்னாரி வேர் பச்சையாகக் கொண்டு வந்து கொட்டைப் பாக்களவு எடுத்து அரை டம்ளர் பசுவின் பாலில் கலக்கி ஒரு மாதம் சாப்பிட சுமார் 3 மாதங்கள் தொடர்ச்சியாய் சாப்பிட்டு வந்தால் நரை தோன்றாது.

Tuesday 11 November 2014

கீதை- 6

         பொதுவாக பாடசாலைகளில் போதிக்கப்படுகிற விஷயம், அமைதியான சூழ்நிலையில் ஆய்ந்தறிய வேண்டிய ஒன்று எதற்காக போர்க்களத்தில் போதிக்கப்பட்டது என்ற கேள்வி எழும்.
வாழ்க்கை பல போராட்டங்களை உள்ளடக்கிய மகாயுத்தம். அதில் போராடுகிறவன் வெற்றி பெறுகிறான். வெற்றிக்காக அவன் அசராது போராட வேண்டியிருக்கும. போராடத் தயங்குகிறவன் இழந்ததைப் பெற முடியாது, இருப்பதையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது.

       ஒரு யுத்தத்தைப் பற்றி யுத்தகளத்தில் பேசுவது எவ்விதத்திலும் முரணாகத் தெரியவில்லை. குருட்சேத்திரத்தை கொலைக்களம் என்றால் உலகம் ஒரு முடிவற்ற கொலைக்களந்தான். குருட்சேத்திரப் போரில் நடந்தது கொலைத் தொழிலா, தர்மம் தனது கடமையைச் செய்ததா என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

"நியாயத்தைக் காப்பாற்றுவதற்காக
 உயிரைக் கொடு, தேவைப்பட்டால்
 நியாயத்தைக் காப்பாற்றுவதற்காக
 உயிரை எடுக்கவும் செய்"

இதுதான் கண்ணன் காட்டிய வழி

 நாளை கீதையின் சிறப்பு பற்றி பார்ப்போம்.

                   - தொடரும்

மனசு

கோலங்களாக சிக்கித்தவிக்கிறது
 என் மனசு நடுவில்
 ஓவியமாக உன் உருவம்..!

கீதை-5

            பாண்டவர் ஐவரிலும் அர்ச்சுனனுடன் நெருங்கிய உறவு கண்ணனுக்கு. பாலப்பருவத்தில் இருந்து, திருமணப் பருவம் வரை, வில்வித்தையில் இருந்து போர்க்களம் வரை எல்லா நிலைகளிலும் அர்ச்சுனனின் வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறான் கண்ணன். அப்படித்தான் உலக மாந்தர் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவன் சம்பந்தப்பட்டிருக்கிறான். ஜீவாத்மா பரமாத்மா தொடர்பே அர்ச்சுனன் கண்ணன் தொடர்பின் மூலம் விளக்கம் பெறுகிறது.

        கீதை உபதேசம் ஏன் அர்ச்சுனனுக்குச் செய்யப்பட்டது? பாண்டவரில் முக்கியத்துவம் பெற்ற மூவர் தர்மர், அர்ச்சுனன், பீமன் ஆவர்.

        தர்மர் சகல சாஸ்த்திரங்களையும், தர்மங்களையும் கற்றவர். அவருக்கு உபதேசம் தேவைப்பட்டது. பீமன் முரடன் முடர்கள் நீதி நியாயங்களைக் கேட்டுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களில்லை. எனவே, கண்ணனின் உபதேசம் அர்ச்சுனனுக்கு செய்யப்பட்டது. மாமனிதன் தர்மர் மனிதனுக்கொவ்வாத விலங்கு குணம் படைத்தவன் பீமன். எனவே மனிதனான அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. பாமர மக்களின் ஏகபிரதிநிதியாய் அவன் அந்த நல்லுரைகளைக் கேட்டுக் கொண்டான்.

Sunday 9 November 2014

கீதை (பகுதி-4)

         அலைமேலலையாய் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கையிலும் அப்படிதான் சோதனைமேல் சோதனை. அது அரசனுக்கும் உண்டு, ஆண்டிக்கும் உண்டு. வாழ்வின் மறைபொருளுணர்ந்து அதன் பிடியில் சிக்கி வாடும் நிலை எல்லோருக்கும் உண்டு. உலகில் தீயவர்கள் அதிகம் கௌரவர்களைப் போல, நல்லவர்கள் குறைவு பாண்டவர்களைப்போல.

         பாரதப் போர் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே விளைந்த போர் என்பதைவிட, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நிகழ்ந்தது. மனிதப் பிறவியின் நல்லியல்புக்கும், தீய இயல்புக்கும் இடையில் நிகழ்ந்தது என்பதே பொருத்தம். போர்க்களம் குருட்சேத்திரம் அது மனித சரீரம் 'தர்மம் வெல்லும்' என்பது பாரதத்தின் மூலம் நாம் கண்ட நிரூபணம் நிரூபித்து காட்டியவர் பகவான்.

        உலக உயிர்களுக்கெல்லாம் அனுக்கிரகம் செய்கின்ற பகவான் ஒரு மானிடனுக்கேன் சாரதியாக இயங்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். எல்லா உயிர்களுக்குள்ளுமிருந்தும் அவர்தானே அனைவர் வாழ்வையும் சாரத்தியம் செய்து கொண்டு இருக்கிறார் . மனச்சாட்சி என்கின்ற சாரதி!

                                                   -தொடரும்

சொல்வதெல்லாம் உண்மை





             ஜீ தமிழ் எடுத்து இருக்கின்ற நல்ல முயற்சி சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி. பிரச்சனைகளை தீர்த்து வைக்கின்ற ஒரு நிகழ்ச்சியா நடத்திக்கொண்டு இருக்கிறது. நல்ல விஷயம்தான். ஆனால் யார் யாரின் பிரச்சனைகளை தீர்த்துவைக்கிறது? சமூகத்தின் பிரச்சனையா? அல்லது சமூகத்தில் உள்ள குடும்பங்களின் பிரச்சனையா? இதில் கலந்து கொள்ள வருகின்ற அனேக குடும்பங்கள் இரண்டு, மூன்று மனைவிகள் உள்ளவர்கள், கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள,இளம் காதலர்கள் இப்படிதான் அதிகம் வருகிறார்கள். இது சரியானதா?

கீதை (3)

            கடவுள் நம் பக்கம் இருந்தால் பிரதிகூலங்களும் அனுகூலமாகிவிடும. கடவுள் நம் பக்கம் இல்லை என்றால் வேறு எந்த அனுகூலங்களை நாம் பெற்றிருப்பினும் அவை நமக்கு பயன்படாது. போருக்கஞ்சாத சுத்தவீரன் அர்ச்சுனன் ஆனால் நடக்கவிருந்த பாரதப் போரிலோ அவன் துணிவை இழக்கவில்லை என்றாலும் சொல்லமாட்டத கலக்கத்தில் இருந்தான். களத்தில் பாட்டனார் பீஷ்மரையும், குருவான துரோணரையும் தாயாதியரையும் எதிர்த்துப் போரிட வேண்டிய நிலைக்குத் தாம் தள்ளப்பட்டமோ என்பதால் எழுந்த கலக்கம் அது. தன் கையால் அவர்கள் வீழ்ந்துபட நேருமே என்றெண்ணி வேதனைப்பட்டான். பிதாமகர் பீஷ்மர் தொட்டு உறவுகளையெல்லாம் தொலைத்து நாம் சௌகரியங்களைத் தேடிக்கொள்ள வேண்டுமா அப்படியொரு போர் அவசியமா என்று யோசித்தான்.

         சொந்தபந்தங்கள் சூழ்ந்திருக்க சொத்து சுகங்களை அனுபவிக்கின்ற மகிழ்ச்சி அவர்களை கொன்று அதன் மூலம் பெற்று அனுபவிப்பதில் ஏது? மனம் கூசியது பார்த்திபனுக்கு கையில் ஏந்திய வில்லைக் காலடியில் போடுகிறான் விரக்தியுடன் சுத்த வீரர்கள் அப்படிதான் போரின் நுணுக்கங்களைப் போலவே மற்ற நெறிகளையும் கவனமுடன் ஆராய்வார்கள். தர்மத்துக்குப் பழுதேற்பட்டு விடக்கூடாது என்பதில்அக்கறையாயிருப்பார்கள்.

        சொந்த மனிதர்களுக்கெதிராய் போர் செய்வதில் எந்த நியாயமும் இருப்பதாய்த் தெரியவில்லை அர்ச்சுனுக்கு. அர்ச்சுனா நீ போர்புரியத் தயங்குவது புறங்காட்டி ஓடுவதற்குச் சமம். நீ பின்வாங்கினால் அதர்மத்திடம் புறங்காட்டிச் செல்வதாகத்தான் அர்த்தம் என்று கண்ணன் பேசுகிறான்.

        போர்களத்தில் வைத்து கண்ணன் உரைத்ததெல்லாம் பாண்டவ வீரனுக்கு மட்டுமின்றி உலகத்தின் ஒவ்வொரு பாமரனுக்கும் பொருந்தும்.

                                   
                                                  -தொடரும்

Saturday 8 November 2014

விடியல்

தோழனே..! 
உனக்காக விடிக்கின்ற காலை
உனக்காக உதிக்கின்ற சூரியன்
உனக்காக சிரிக்கின்ற நிலா
உனக்காக அழுகின்ற வானம்
உனக்காக வீசுகின்ற தென்றல்
உனக்காக வாடுகின்ற மலர்
இவையாவும் பொய்யில்லை
பிறகு ஏன்? உனக்காக
யாருமில்லை என்று வருந்துகிறாய்
அடடா..! உன் உலகம்
எத்தனை அழகானது
உற்சாகமாய் கிளம்பு
உலகம் உன் நாளைய
விடியலுக்காக காத்திருக்கிறது..!

Friday 7 November 2014

கீதை (பகுதி-2)

         போரைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை. பாண்டவரும, கௌரவரும் கண்ணனின் உதவி வேண்டி துவாரகை சென்றனர். அவர்கள் சென்ற சமயம் கண்ணன் துயில் கொண்டிருந்தான்.

         கௌரவர் சார்பில் சென்ற துரியோதனன் கண்ணனின் தலைமாட்டிலும், பாண்டவர் சார்பில் சென்ற அர்ச்சுனன் அவனது கால்மாட்டிலும் நின்றிருந்தனர்.

         துயில் நீங்கிய கண்ணன் இயல்பாகத் தனது கால்மாட்டில் நின்றிருந்த அர்ச்சுனனை முதலில் பார்த்தான். பிறகே தலைமாட்டில் நின்றிருந்த துரியோதனன் கண்ணில் பட்டான். தான் முதலில் கண்ணுற்ற அர்ச்சுனனிடம் முதலில் பேசிய கண்ணன் பாண்டவர்க்குத் துணை நிற்க ஒப்புக் கொண்டான். துரியோதனனோ கண்ணனின் படையைத் தனக்கு உதம்படி வேண்டினான். ஆக மகாபாரதப் போரில் கண்ணன் ஒரு பக்கம் அவனது படை மற்றொரு பக்கம் என்று முடிவாயிற்று.

         கண்ணன் அர்ச்சுனனிடம் ஒரு நிபந்தனை விதித்தான். அதற்கு அவனும் ஒப்புக்கொண்டான். அந்த நிபந்தனை இதுதான். போரில் கண்ணன் ஆயுதமேந்தமாட்டான் பார்த்தனுக்கு ரத சாரத்தியம் மட்டுமே செய்வான்.

        இங்கே நாம் கவனத்தில் கொள்ளத்தக்கதொன்று.

       துரியோதனன் படை பலத்தைப் பெரிதாய் மதித்தான். அர்ச்சுனனோ இறைப்பலத்தைப் பெரிதும் மதித்தான்.

கீதை

                   கீதை (பகுதி-1)

       கீதையைத் தியானிக்கிறவரை பாவங்கள் தீண்டாது.

      கீதை எங்கிருக்கிறோ அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன

      எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரமே சகாயம் வருகிறது.

      எங்கு கீதை கற்கப்படுகிறதோ, கற்பிக்கப்படுகிறதோ அங்கு நான் வாசம் செய்கிறேன்.

                                  (ஸ்ரீ கீதா மகாத்மியம்)
       
              இது பகவானின் வாக்கு

       பரமாத்மா கண்ணனைவிட சிறந்த ஞானியும் இருக்க முடியாது. பகவத் கீதையைவிட சிறந்த நீதி நூலும் இருக்க முடியாது.

        கண்ணனைத் துதிக்க முடிந்தவரும் கீதையைப் படிக்க முடிந்தவரும் பாக்கியவான்கள். 

                கீதை பிறந்த கதை

        மகாபாரதப் பாண்டவர்களுக்கும, கௌரவர்களுக்கும் சமாதானம் ஏற்பட வகையில்லை. பாண்டவர்க்குரிய நாட்டை சூதில் அபகரித்த துரியோதனாதியர் ஐவரின் சொத்துக்களில் ஐந்தே ஐந்து வீடுகளைக் கூட அவர்களுக்குத் திருப்பித் தர மறுத்துவிட்டனர்.

        கண்ணனின் தூது தோல்வி கண்டது அவன் துவாரகைக்குத் திரும்பிவிட்டான்.

                                                  - தொடரும்

Thursday 6 November 2014

சமுதாய சிந்தனைகளை கூறும் மகாபாரதம்

     

         பாரதப் பெருங்காப்பியம் குருகுலத்தாரிடை நிகழ்ந்த போர் பற்றி கூறுகிறது. உலக இலக்கியங்களுள் அளவாற் பெரியது பாரதம் என்பர். பாரத போர் நிகழ்ந்த காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன 4500 வருஷங்களுக்கு முற்பட்டது என்கிறது " வெள்ளிடை மாலை" கலியுகத்தின் தொடக்கத்தில் ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக பாரதப் போர் நடந்ததாகவும் கூறுவர். ஒரு சிலர் துவாபரயுகத்தின் இறுதியில் கி.மு. 3139 என்றும் கி.மு. 3102 ல் நிகழ்ந்தது என்றும் பலவாறு பல கதைகள் புனைந்துள்ளனர். ஆனால் பாரத போர் உண்மையில் நிகழ்ந்திருக்க கூடும் ஏனெனில் நாமும் பாரத போரின் அடிப்படையில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Wednesday 5 November 2014

தண்டனை

காசு கொடுத்தான் அவன்
சுகத்தை கொடுத்தாள் அவள்
இருவருக்கு இலவச இணைப்பாக
இறைவன் கொடுத்தான் "எய்ட்ஸ்"..!

யாரோ இவன்

கிழக்கில் தோன்றும்
சூரியன் போல் எழுந்து வந்து
மறைந்து கொள்வானோ..?

கவிதைப் பெண்ணின்
கண்கள் போல்
துறுதுறுப்பானோ..? 

காதல் கொள்ளும்
சந்திரன் போல் அருகில் வந்து
கரைந்து போவானோ..?

இலக்கிய காதலில் தோழியின் பங்கு

         வரலாற்று சுவடுகளில் இன்றும் அழியாமல் தடம் பதித்து நிற்பது காதல். காதலைப் பற்றி இலக்கியங்களும், இதிகாசங்களும், காவியங்களும் பலவாறு எடுத்து இயம்புகின்றன. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை காதல் புனிதமானது என்கின்றனர் பலர், காதல் இல்லையேல் சாதல் என்கின்றனர் சிலர். அப்படிப்பட்ட வலிமை பொருந்திய காதலுக்கு தூதாக நிற்பது நட்பு.

           ஒரு தலைவனுக்கும், தலைவிக்கும் காதல் ஏற்பட்டால் அவர்களுக்கு தூதாக செல்வது தோழிகள். அதுமட்டுமல்ல இவர்களில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மனமறிந்து நாசுக்காக தவறை உணரச் செய்யும் உரிமையும் இவர்களுக்கு உண்டு. இது எந்தளவுக்கு உண்மை என்பதை அறிய இலக்கியத்துக்குள் சென்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோமா? வாருங்கள் இங்கே ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்டு யாரும் அறியாதவாறு களவொழுக்கத்தில் ஈடுபடுக்கின்றனர். இவ்வாறு களவிலே கூடும் வழக்கத்தை விடுத்து தலைவன் தலைவியை விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோழி விரும்புகின்றாள். அதனால் தலைவனை சந்தித்து அவன் மனம் புண்படாதவாறு இவ்வாறு கூறுகின்றாள்.

Tuesday 4 November 2014

மனசே... மனசே... /திரையிசை பாடலும், இலக்கிய பாக்களும்

         
        காலை வேளை வேலைகள் முடிந்து அமர்ந்திருந்தேன் திடீரென்று கார் இருள் சூழ்ந்தது. இது என்ன கார் காலமோ மண் மணக்கிறதே என்று என் மனம் வாசலுக்கு விரைந்தது. உடனே உள்ளிருந்து ஒரு குரல் அழைத்தது.

                  மனசே...என் மனசே..
            நீ எங்கே போகப் பார்க்கிற
            மனசே.. என் மனசே...
            நீ யாரை தேடி போகிற
            இத்தனை நாள் என் கூடயிருந்த
            இப்ப என்ன விட்டு நீ போவதெங்க
            உனக்கு யாரோட சகவாசம்...
           வேணாம் செய்யாத எனை மோசம்...