Sunday 16 November 2014

கீதை-11

           கீதை வாசிப்பு ஒரு ஞானவேள்வி. நாம் இன்னொரு வேள்வி நடத்த வேண்டியதில்லை. வாசிப்புக்கே அத்தனை மகத்துவம் என்கின்றபோது, வாசித்தபடி வாழவும் தொடங்கிவிட்டால்..!

           பகவான் உரைத்த கட்டளைகள் 'கீதோபதேசம்' அந்த உபதேசத்தைக் கடைப்பிடிக்கிறவர் பகவானுக்குப் பிரியமானவராவர். கீதையில் பகவானுடைய சுவாச ஸ்பரிசம் நமக்குக் கிடைக்கின்றது. அதுமட்டுமா அவரைத் தரிசிக்கவும், அவருடன் உரையாடவும் கூட முடிகிறது. 

            'வேள்வி பலனும், விரத பலனும்
             தான பலனும், தவப் பலனும்
             கீதையை வாசிப்பவருக்கு
             ஒருசேரக் கிடைத்துவிடுகிறது'

        உலகம் பகவானுடையது. அவனுடைய கருவி நாம் இதில் எந்த லாபமும் நமக்கில்லை, அப்படியேதான் எந்த நஷ்டமும் நமக்கில்லை. லாபநஷ்டமில்லை என்கின்ற போது அதுபற்றி சந்தோஷப்பட என்ன இருக்கிறது, வருத்தப்படத்தான் என்ன இருக்கிறது? மனதைச் சமநிலையில் வைத்திரு என்கின்றது கீதை. காரியம் நம்முடையதில்லை என்கின்றபோது அதன் விளைவுகள் பற்றி நாம் யார் கவலைப்பட?

                                                       -தொடரும்

No comments:

Post a Comment