Tuesday 11 November 2014

கீதை- 6

         பொதுவாக பாடசாலைகளில் போதிக்கப்படுகிற விஷயம், அமைதியான சூழ்நிலையில் ஆய்ந்தறிய வேண்டிய ஒன்று எதற்காக போர்க்களத்தில் போதிக்கப்பட்டது என்ற கேள்வி எழும்.
வாழ்க்கை பல போராட்டங்களை உள்ளடக்கிய மகாயுத்தம். அதில் போராடுகிறவன் வெற்றி பெறுகிறான். வெற்றிக்காக அவன் அசராது போராட வேண்டியிருக்கும. போராடத் தயங்குகிறவன் இழந்ததைப் பெற முடியாது, இருப்பதையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது.

       ஒரு யுத்தத்தைப் பற்றி யுத்தகளத்தில் பேசுவது எவ்விதத்திலும் முரணாகத் தெரியவில்லை. குருட்சேத்திரத்தை கொலைக்களம் என்றால் உலகம் ஒரு முடிவற்ற கொலைக்களந்தான். குருட்சேத்திரப் போரில் நடந்தது கொலைத் தொழிலா, தர்மம் தனது கடமையைச் செய்ததா என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

"நியாயத்தைக் காப்பாற்றுவதற்காக
 உயிரைக் கொடு, தேவைப்பட்டால்
 நியாயத்தைக் காப்பாற்றுவதற்காக
 உயிரை எடுக்கவும் செய்"

இதுதான் கண்ணன் காட்டிய வழி

 நாளை கீதையின் சிறப்பு பற்றி பார்ப்போம்.

                   - தொடரும்

No comments:

Post a Comment