Sunday 9 November 2014

கீதை (பகுதி-4)

         அலைமேலலையாய் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கையிலும் அப்படிதான் சோதனைமேல் சோதனை. அது அரசனுக்கும் உண்டு, ஆண்டிக்கும் உண்டு. வாழ்வின் மறைபொருளுணர்ந்து அதன் பிடியில் சிக்கி வாடும் நிலை எல்லோருக்கும் உண்டு. உலகில் தீயவர்கள் அதிகம் கௌரவர்களைப் போல, நல்லவர்கள் குறைவு பாண்டவர்களைப்போல.

         பாரதப் போர் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே விளைந்த போர் என்பதைவிட, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நிகழ்ந்தது. மனிதப் பிறவியின் நல்லியல்புக்கும், தீய இயல்புக்கும் இடையில் நிகழ்ந்தது என்பதே பொருத்தம். போர்க்களம் குருட்சேத்திரம் அது மனித சரீரம் 'தர்மம் வெல்லும்' என்பது பாரதத்தின் மூலம் நாம் கண்ட நிரூபணம் நிரூபித்து காட்டியவர் பகவான்.

        உலக உயிர்களுக்கெல்லாம் அனுக்கிரகம் செய்கின்ற பகவான் ஒரு மானிடனுக்கேன் சாரதியாக இயங்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். எல்லா உயிர்களுக்குள்ளுமிருந்தும் அவர்தானே அனைவர் வாழ்வையும் சாரத்தியம் செய்து கொண்டு இருக்கிறார் . மனச்சாட்சி என்கின்ற சாரதி!

                                                   -தொடரும்

No comments:

Post a Comment