Saturday 8 November 2014

விடியல்

தோழனே..! 
உனக்காக விடிக்கின்ற காலை
உனக்காக உதிக்கின்ற சூரியன்
உனக்காக சிரிக்கின்ற நிலா
உனக்காக அழுகின்ற வானம்
உனக்காக வீசுகின்ற தென்றல்
உனக்காக வாடுகின்ற மலர்
இவையாவும் பொய்யில்லை
பிறகு ஏன்? உனக்காக
யாருமில்லை என்று வருந்துகிறாய்
அடடா..! உன் உலகம்
எத்தனை அழகானது
உற்சாகமாய் கிளம்பு
உலகம் உன் நாளைய
விடியலுக்காக காத்திருக்கிறது..!

2 comments:

  1. பிறகு ஏன்? உனக்காக
    யாருமில்லை என்று வருந்துகிறாய்....கிளம்பு
    vaanko povoom.....
    Vetha.Langathilakam.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி போகலாம்

      Delete