Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Friday, 18 December 2015

சிறுநீரக பிரச்சினைகள் தீர வேண்டுமா?

சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? ஆப்ரேஷன் செய்தும் பயனில்லையா? இனி கவலைய விடுங்க. மருந்து இல்ல, மாத்திரை இல்ல, அறுவை சிகிச்சை இல்ல.

Friday, 23 October 2015

அரத்தை, அல்லி / மூலிகை மருத்துவம்

ஓமம்:

ஓமத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி அளவாக மூன்று வேளைகள் உணவுக்கு முன் உட்கொள்ளவும். குழந்தைகளுக்கு தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவிட்டுக் கொடுக்கலாம். கழிச்சல், பால் கக்குதல், அசீரணம் குணமாகும்.

Friday, 16 October 2015

வெந்தயம் / மூலிகை மருத்துவம்

வெந்தயம்

இது எந்த நோயை குணமாக்கும்?

விதை:
சிறுநீர்பெருக்கும், வறட்சியகற்றும், காமம் பெருக்கும்.

Wednesday, 30 September 2015

மாதுளை / மூலிகை மருத்துவம்

மாதுளம் பழத்தை தொடர்ந்து நாற்பது நாட்களுக்கு உட்கொண்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும். வயிறு தொடர்பான பல நோய்கள் குணமாகும். உணவுக்குப் பின் ஒரு மணி நேரங்கழித்து உண்பது நல்லது.

Tuesday, 22 September 2015

இலவங்கம் / மூலிகை மருத்துவம்

இந்த பக்கத்தில் பதிவிடும் அனைத்து மருத்துவக் குறிப்புகளும் எனக்கு நன்கறிந்த பயன்படுத்திப் பார்த்த மூலிகைகளை மட்டுமே இங்கு நான் பதிவிடுகிறேன். அவை எந்தளவிற்கு குணமாகிறது என்பதை அறிந்த பிறகே உங்களுக்கு பயன்பெறட்டும் என்ற நல்லெண்ணத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதில் எந்தவித பயமும் உங்களுக்கு வேண்டாம். எனது இல்லத்தில் சில மூலிகைகள் உள்ளன .


இலவங்கம்

இது இந்தியாவிலும் இலங்கையிலும் பயிராகிறது. எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.

எந்த நோயை குணப்படுத்தும்?

மயக்கம், பேதி, வாந்தி, குருதிக் கழிச்சல், எருவாய்க் கடுப்பு, செவிநோய், கண்ணில் பூ, படைகள் ஆகியவற்றை நீக்கும்.

இதை எப்படி பயன்படுத்துவது?

Monday, 21 September 2015

பொன்னாங்கண்ணி கீரை / மூலிகை மருத்துவம்

தங்கம் போன்ற மேனி உங்களுக்கு வேண்டுமா? அப்ப இதை படிங்க.

பொன்னாங்கண்ணி:

இந்த கீரையில் தங்கசத்து உண்டென்றும், இதை முறைப்படி உண்டு வருபவர்களது உடல், தங்கம் போன்ற மேனியைத் தரும் என்றும் பெரியோர் கூறியுள்ளனர். பொன்னாங்கண்ணி என்பது பொன்+காண்+நீ இதை உண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் என்பது பொருள்.

இதை எப்படி பயன்படுத்துவது?

Sunday, 13 September 2015

நில வேம்பு / மூலிகை மருத்துவம்

நில வேம்பு:

இது எந்த நோயை குணமாக்கும்?
வலிசுரம், நீர்க்கோவை, மயக்கம் ஆகியவற்றை போக்கும்.

இதை எப்படி பயன்படுத்துவது?

Wednesday, 9 September 2015

சிறு குறிஞ்சான் / மூலிகை மருத்துவம்

சிறுகுறிஞ்சான்

இது கொடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் பொடி நீரிழிவு நோயைத் தணிக்க வல்லது. வயிறு தொடர்பான சிறு நோய்களைத் தணிக்க வல்லது.

இலையைப் பாலில் அவித்து நிழலில் உலர்த்தி பொடித்து காலை உணவுக்குப் பின்னும் இரவு உணவுக்குப் பின்னும் ஒரு கிராம் எடை அளவாக உண்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். குணமடையும்.

Monday, 7 September 2015

தனியா / மூலிகை மருத்துவம்

தனியா:

இது எந்த நோயை குணப்படுத்தும்?

பசியைத்தூண்டும், அகட்டுவாய் அகற்றும், சிறுநீர் பெருக்கும்.

Saturday, 5 September 2015

குப்பை மேனி / மூலிகை மருத்துவம்

குப்பைமேனி:

சுவை: கைப்பு, கார்ப்பு,

இது எந்த நோயை குணப்படுத்தும்?

இதன் இலையால் பல்லடி நோய், தீச்சுட்ட புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய் மூலம், நமைச்சல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல் கோழை ஆகியவற்றை குணமாக்கும்.

Wednesday, 2 September 2015

கீழாநெல்லி/மூலிகை மருத்துவம்

கீழாநெல்லி:

;
இதன் சுவை : துவர்ப்பு, கைப்பு, புளிப்பு, இனிப்பு தன்மையுடையது.

இது எந்த வகை நோயை  குணப்படுத்தக் கூடியது?

இம்மூலிகையினால் வயிற்று மந்தம், தீக்குற்றத்தால் விளைந்த கேடு, கண்ணில் தோன்றும் நோய்க் கூட்டங்கள் குருதிக் கழிச்சல், நீரிழிவு, காமாலை, சுரம் வெப்பம், நாட்பட்ட மேகப்புண் ஆகியவற்றை இவை போக்கும்.

இதை எப்படி பயன்படுத்தலாம்?

Wednesday, 22 July 2015

உடல் எடை குறைய வேண்டுமா?

எப்போதும் அழகா இருக்க வேண்டுமென்று நினைக்கறீங்களா? வயசானாலும் இளமையா இருக்க ஆசையா? அப்ப முதல்ல இதை படிங்க...

1. காலை, மாலை, இரவு சாப்பாட்டின் அளவை குறையுங்கள்.

Thursday, 19 February 2015

அல்சர் எப்படி வருகிறது?

            நேரத்திற்கு சாப்பிடாததால் தான் அல்சர் வருவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் இல்லை, நேரத்திற்கு சாப்பிடுபவர்களுக்கு தான் இந்த அல்சரே வருகிறது.

          பசிக்காமலே நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பதற்காக பசித்தோ, பசிக்காமலோ, அல்லது அதிக உணவோ எடுத்துக்கொள்பவர்களுக்கு தான் இந்த அல்சர் வருகிறது. அந்த உணவு செரிமானம் ஆகாமல் வயிற்றில் தங்கி அது ஒரு கழிவாக மாறி நாளடவில் அது புண்ணாக உருவெடுத்து வலியை கொடுக்கிறது. கடைசியில் கேன்சராகவும் மாறுகிறது.

Sunday, 4 January 2015

உடல் எடை குறைய வேண்டுமா?

              உடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற  ஒரு மருந்து சொல்லபோகிறேன்.

 தேவையான பொருட்கள்:-

சீரகம் - 25 கிராம் 
பட்டை - 25 கிராம் 
லவங்கம் - 25 கிராம் 
மிளகு - 25 கிராம்
தேன் - பெரிய பாட்டிலில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

Saturday, 27 December 2014

உடல் எடையை குறைக்க

உடல் எடை குறைய வேண்டுமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்  


  • தினமும் எழுந்ததும் உடல் பயற்சி செய்ய வேண்டும் காலை/மாலை இரு வேளையும்.காயகல்ப பயிற்சி நல்லது. 

Tuesday, 23 December 2014

சின்ன சின்ன மருத்துவம்


  • வாந்தி நிற்க துளசி சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். 
  • குமட்டல் நீங்க வெற்றிலைக்காம்பை வாயில் அதக்கினால் நீங்கும்.
  • குடல் வாயு தீர கொய்யா கொழுந்தை மென்று தின்ன தீரும்.
  • இரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரையை வாரம் 2 முறை சாப்பிட குணமாகும்.

Sunday, 7 December 2014

தலைமுடி கறுப்பாக வளர

           மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி சாறு ஒரு லிட்டர், தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், கார்போக அரசி 200 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம் இவைகளை ஒரு பெரிய சட்டியில் போட்டு லேசான தீயில் எரித்துக் கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். எண்ணெய்பதம் வந்ததும் சுத்தமாய் வடிகட்டி ஆறிய பின்பு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொண்டு தலைக்கு தேவையான போது தேய்த்து வந்தால் முடி வளருவதுடன் முடி கருத்து வளரும்.

Friday, 5 December 2014

மருத்துவம்/ஆஸ்துமா குணமாக

     ஆடு தின்னாப் பாலை இலையை நிழலில் உலர்த்திப் பொடியாகக் கத்தரித்துப் புகையிலையில் வைத்துச் சுருட்டுச் சுற்றிப் புகைத்தால் சுவாசகாசம் நிவர்த்தியாகும். 

Wednesday, 19 November 2014

மருத்துவம்/மூலநோய் குணமாக

          சுக்கை மேல் தோல் சீவி அரைத்துக் கொதிக்க வைத்து இரவில் பூசிக் காலையில் பார்க்க கரைந்து போகும்.

         காட்டுக் கருணை, கறிக் கருணை, பிரண்டை, கடுக்காய் தூள் இவைகளை 25 கிராம் சூரணித்து வேளைக்கு கொட்டைபாக்கு அளவு எடுத்து தேனில் குழைத்துத் தினம் 3 வேளை ஆகாரத்திற்கு மேல் உண்டு வந்தால் சர்வ மூலமும் சாந்தியாகும். கோழிக்கறி, பச்சை மிளகாய், நண்டு, இறால் ஆகாது.

         இளநீர் தேங்காயின் வழுக்கையுடன் கற்கண்டு தூள் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் 30 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு தணியும், மூல நோயை ஆரம்பத்திலே கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, 15 November 2014

மருத்துவம்/குதிகால் வெடிப்பு நீங்க

         மருதோன்றி இலையை நன்றாக அரைத்துத் தினமும் படுக்கும்போது குதிகால் வெடிப்பு உள்ள பாகங்களில் தடவி வந்தால் சில நாட்களில் குதிகால் வெடிப்பு குணமாகிவிடும்.

         விளக்கெண்ணையில் தேவையான சுண்ணாம்பைக் கலக்கி வைத்துக் கொண்டு குதிகால் வெடிப்புகளில் அடிக்கடி தடவி வந்தால் குதிகால் வெடிப்புக் குணமாகிவிடும்.