Saturday 28 November 2015

முத்தம்

செவ்விதழ்கள் இரண்டு
சேர்ந்தது இருப்பதைக்கண்டு
சிரிப்பைக் காட்டி
பிரித்து வைக்கிறது பற்கள்
துக்கத்தை தொலைத்துவிட்டு
அழகாய் சிரிக்கிறது
உதடுகள்...!

Wednesday 25 November 2015

என்கதை எழுதிட மறுக்குது என்பேனா


                  நான் சோகமான கருத்துக்களையே அதிகம் பதிவு செய்கிறேனாம்...! என்ன காரணம் என்று என்னிடம் பலர் கேட்டு இருக்கிறார்கள் ... சிலர் அவர்களாகவே சில காரணங்களை நினைத்துக்கொண்டு இப்படிதான் இருக்கும் என்று நம்புகிறார்கள்.

Tuesday 24 November 2015

நம்பிக்கை

            ஒரு முனிவரின் ஆசிரமத்தில் அழகான நந்தவனம் ஒன்று இருந்தது. அந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி கடவுள் வந்து போவார். அப்படி வரும்போதெல்லாம் நந்தவனத்திற்கு சென்று அங்குள்ள மலர்களைக் கண்டு ரசித்து செல்வார். அப்படி வரும்போதெல்லாம் ஒரு செடியைப் பார்த்து "இது ரொம்ப அழகா இருக்கிறதே" என்று சொல்லிவிட்டு போவார். இதைக் கேட்ட அந்த செடிக்கு ரொம்ப சந்தோஷம். கடவுளின் மீது அதீத அன்பு ஏற்பட்டது அந்த சந்தோஷத்தில் அதிக மலர்களைத் தந்தது. இப்படி ஒவ்வொரு நாளும் நடந்தது. சில நாட்களுக்குப் பிறகு கடவுள் வேற செடிகளைக் கண்டு ரசித்து அவைகளோடு பேசினார். இதைக் கண்ட அந்த செடி ரொம்ப வருத்தப்பட்டது. நாளுக்கு நாள் மனம் நொந்து வாடிபோனது.

Sunday 22 November 2015

புதுநிலவு

இருண்ட வானத்தில்
ஒற்றை நிலா
மீண்டும் பிரகாசமாய்
ஜொலிக்கிறது...!

Saturday 21 November 2015

காயம்

நம்மை வெறுத்தவர்களை விட
நமக்குப் பிடித்தவர்களே
நம்மை அதிகம் காயம் செய்கிறார்கள்..!

Thursday 19 November 2015

சட்டங்கள் அறிவோம்

பாலியல் குற்றங்கள்:

வன்புணர்ச்சி (Rape) பிரிவு 375

1. பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக
2. பெண்ணின் சம்மதம் இல்லாமல்
3. பெண்ணை அச்சுறுத்தி அவள் சம்மதத்துடன்
4. கணவன் என்று தவறாக நம்பி அளித்த சம்மதம் என்பதை அறிந்திருத்தல்
5. பித்து நிலையனரின் சம்மதம்
6. 16 வயதுக்குட்பட்ட பெண்ணின் சம்மதம் (அ) சம்மதமின்றி
7. மனைவி 15 வயதிற்குட்பட்டவர் இல்லாதபோது கொள்ளும் உறவு வன்புணர்ச்சி ஆகாது.

சட்டங்கள் அறிவோம்

தமிழகத்தில் சட்டங்கள் ஆயிரம் இருக்கிறது. ஆனால் அதன்படி நாம் நடப்பதும் இல்லை அதை செயல்படுத்துவதும் இல்லை. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்று சொல்வார்கள் இந்த சட்டங்கள் ஏட்டில் எழுதப்பட்டதாகவே தான் இருக்கிறது. அந்த சட்டங்கள்தான் என்ன அது என்னதான் சொல்கிறது? வாருங்கள் பார்ப்போம்.

Friday 13 November 2015

மழை

மேகத்தை யார் சீண்டியது
அழுகிறது வானம்
நட்புக்கு தொட்டாலே வலிக்கும்...!

Thursday 12 November 2015

முத்தம்

முத்தத்தின் ஸ்பரிஷம் கூட
இனிமையாகதான் இருக்கிறது
அம்மாவிடம் இருந்து
பெரும் குழந்தைக்கு..!

நினைவு

இயல்பாக இருக்க
முயல்கிறேன் முடியவில்லை
நீ இருந்த இடம்
உனக்குப் பிடித்தவைகள்
எல்லாம் உன்னை
நினைவுப் படுத்திப் போகின்றன ...!


Wednesday 11 November 2015

செல்ல பிராணி

          நாய்கள் வளர்க்க எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்? i am a dog lover... எனக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியம். சிறு பிள்ளையில் இருந்து இன்று வரை நாய்கள் என்றால் எனக்கு உயிர். எல்லா விலங்குகளையும் நான் நேசிக்கிறேன் ஆனால் நாய்களுக்குதான் முதலிடம். நாய்கள் போன்ற ஒரு நன்றி உள்ள ஜீவனை இந்த உலகத்தில் எங்கேயும் காண முடியாது. எஜமானின் மீது அக்கறைக் கொண்ட ஒரு உயிர் எதுவென்றால் அது நாய் மட்டும்தான். அதனால்தான் நம்வீட்டு செல்ல பிராணியாக அதை வளர்க்கிறோம்.

Tuesday 10 November 2015

இதுவும் கடந்து போகும்

நீ பேசும் ஒவ்வொரு
வார்த்தைகளிலும் தெரிகிறது
எவ்வளவு தூரம் என்னை
விலக்கி வைத்திருக்கிறாய் என்று
இதுவும் ஒருநாள் கடந்து போகும்..!

Wednesday 4 November 2015

மழை

வானம் மேக மூட்டத்துடன்
காணப்படுகிறது...
இடி மின்னலுடன் மழை
பெய்யக் கூடும்
அவள் கண்களில்..!

மாதங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்

ஒருவருடத்திற்கு 12 மாதங்கள் என்று நாம் எல்லோருக்குமே தெரியும். அதற்கான காரணங்கள் உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு காரணப் பெயர் இருக்கிறது. வாருங்கள் தெரிந்து கொள்வோம்.