Friday 7 November 2014

கீதை (பகுதி-2)

         போரைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை. பாண்டவரும, கௌரவரும் கண்ணனின் உதவி வேண்டி துவாரகை சென்றனர். அவர்கள் சென்ற சமயம் கண்ணன் துயில் கொண்டிருந்தான்.

         கௌரவர் சார்பில் சென்ற துரியோதனன் கண்ணனின் தலைமாட்டிலும், பாண்டவர் சார்பில் சென்ற அர்ச்சுனன் அவனது கால்மாட்டிலும் நின்றிருந்தனர்.

         துயில் நீங்கிய கண்ணன் இயல்பாகத் தனது கால்மாட்டில் நின்றிருந்த அர்ச்சுனனை முதலில் பார்த்தான். பிறகே தலைமாட்டில் நின்றிருந்த துரியோதனன் கண்ணில் பட்டான். தான் முதலில் கண்ணுற்ற அர்ச்சுனனிடம் முதலில் பேசிய கண்ணன் பாண்டவர்க்குத் துணை நிற்க ஒப்புக் கொண்டான். துரியோதனனோ கண்ணனின் படையைத் தனக்கு உதம்படி வேண்டினான். ஆக மகாபாரதப் போரில் கண்ணன் ஒரு பக்கம் அவனது படை மற்றொரு பக்கம் என்று முடிவாயிற்று.

         கண்ணன் அர்ச்சுனனிடம் ஒரு நிபந்தனை விதித்தான். அதற்கு அவனும் ஒப்புக்கொண்டான். அந்த நிபந்தனை இதுதான். போரில் கண்ணன் ஆயுதமேந்தமாட்டான் பார்த்தனுக்கு ரத சாரத்தியம் மட்டுமே செய்வான்.

        இங்கே நாம் கவனத்தில் கொள்ளத்தக்கதொன்று.

       துரியோதனன் படை பலத்தைப் பெரிதாய் மதித்தான். அர்ச்சுனனோ இறைப்பலத்தைப் பெரிதும் மதித்தான்.

No comments:

Post a Comment