Monday 29 May 2017

மாட்டு இறைச்சியும் மனித நேயமும்

               எப்பா பெருமைக்குரிய போராளிகளே... மோடியை எதிர்க்க மாட்டுக்கறி சாப்பிட்டுதான் எதிர்கனும்னு இல்ல... வேற நல்ல வழியிலும் எதிர்க்கலாம்...



மாடும் பாவம் விட்டுறுவோம்....

ஆடு சாப்பிடுறோம்...

கோழி சாப்பிடுறோம்...

மீன் சாப்பிடுறோம்...

காடை கெளதாரி சாப்பிடுறோம்...

இப்படி பறப்பன ஊர்வன எல்லாம் சாப்பிடுறோம்... ஆனால் மாட்டுக்கறி சாப்பிட அத்தனை மனசு வருவதில்லை.... ஒருவேளை நம்மை மாதிரி அதுவும் பத்து மாசம் என்பதால் மனித உயிர் போன்று தோணுகிறதா தெரியவில்லை...

இன்னொரு வகையில் காமதேனுவாக நாம் வணங்குவதால் அப்படி தோணுகிறதா தெரியவில்லை....

எப்பா நல்லவர்களே போராடுறதாம் போராடுறோம் ஒரு உயிர மதிச்சு போராடுவோம்....

முகநூல் பக்கம் வந்தாலே மாட்டுக்கறி வாடைதான் தூக்கலா இருக்கு...

முன்னாடி ஜல்லிக்கட்டு வேணும்னு சொல்லி மாடு தெய்வம் அது இதுன்னு  அந்த மாட்டுக்காக போராட்டம் செய்தோம்... இப்ப அதே மாட்டை காப்பாத்தி நாமே கொலை செய்து சாப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்...?

அப்பவும் அதே மாடுதான் இப்பவும் அதே மாடுதான்... மோடியை எதிர்க்கிறதா நினைச்சு பாவத்தை செய்யாதீங்க...

என் உரிமை என்மாடு எல்லாம் சரி... ஆனால்
என் உரிமை என் பிள்ளையென்று தன் பிள்ளையை கொலை செய்ய முடியுமா...?

புத்திமான்கள் சிந்திக்கவும்...

இதுப்பற்றி முகநூலில் பலவித கருத்துக்களை முன் வைக்கிறார்கள் போராளிகள்... கறி சாப்பிடுவதில் தான் தவறா நீங்கள் உபயோகிக்கும் அத்தனை பொருட்களிலும் மாட்டுத்தோல் இருக்கிறது அது உங்க கண்களுக்கு தெரியவில்லையா என்று விவாதம் செய்கிறார்கள்.  எல்லாம் சரி ஆனால் அதை உணவாக சாப்பிட மனசு இல்லை என்பதுதான் என் கருத்து மற்றவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்...


4 comments:

  1. மனதில் பட்டதை
    சொல்லிச் சென்ற விதம் அருமை
    அனல் பறக்கும் இந்த விஷயம் குறித்து
    நானும் எழுத வேண்டும்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்

      Delete
  2. மாட்டை துரத்தி துன்புறுத்தி, சண்டைபோட்டு, தங்கள் வீரத்தை காட்ட வேண்டும் என்பதற்காக ஜல்லிக்கட்டு வேணும் என்று போராடினார்கள். அப்போது மாடு எங்கள் தெய்வம், மாடு எங்கள் பிள்ளை, வீட்டில் எங்களோடு ஒருவர் என்று எல்லாம் காதில் பூ சுற்றினார்கள். இப்போது தெய்வத்தை பிள்ளையை கொன்று உண்போம் என்று போராடுகிறார்கள்.இவர்கள் போராளிகள் :)

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் சில மனிதர்கள்

      Delete