Friday 29 July 2022

அள்ளித் தந்த வானம்

மழை.... மழை.....!!!!!.....!!!!!!!......!!!!!....!!!!!.....

மழை பெய்கிறதா என எட்டிபார்க்கையில் 
கொட்டுற மழையில சொட்ட சொட்ட
நனைந்து போகிற ஜோடி...

அய்யோ துணி நனைச்சுடுச்சே ன்னு
ஓடி வர்ற பக்கத்து வீட்டு ஆன்டி....

ச்சே இந்த நேரத்திலா மழை வரனும்னு
பீல் பண்ற நடைபாதை வியாபாரிகள்....

எனக்காகதான் மழை வரலன்னு
காலையில் நம்பிக்கையோடு சொன்ன
பிளாட்பார பாட்டி ...

 இவர்களெல்லாம்
காணக்கிடைக்கிறார்கள்  என் கண்களுக்கு மழை
மண்ணை மட்டும் நனைக்கவில்லை
மனசையும் சேர்த்து ஈரமாக்கிடுச்சு
!!!......!!!!.....!!!!.....!!!!......
#அல்லி_(அள்ளித்)தந்த_வானம்

No comments:

Post a Comment