Friday 13 February 2015

தஞ்சாவூர் சமையல் /பாசிப்பருப்பு சாம்பார்


தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 100 கிராம்
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 5, 6
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் - 1/2 மூடி 
சீரகம் - 1 ஸ்பூன் 
உருளைக்கிழங்கு - 2
கத்தரிக்காய் - 2 
கடுகு - சிறிது 
கறிவேப்பிலை - சிறிது 
மஞ்சள்தூள் - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை:-

             பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். அதோடு சிறிது மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவைகளையும் சேர்த்து வேக வைக்கவும். இவைகள் வெந்ததும், தோல்நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் இரண்டையும் வெந்த பருப்போடு சேர்த்து வேக வைக்கவும். தேங்காயோடு சீரகத்தை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

           இப்போது பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த பருப்பு காய்களை கொட்டி, ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கவும்.

        இப்போது சுவையான பாசிப்பருப்பு சாம்பார் ரெடி.

No comments:

Post a Comment