Saturday 21 February 2015

கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1/4 கிலோ 
வெல்லம் - 1 
தேங்காய் - 1 மூடி 
பாசிப்பருப்பு - 50 கிராம்


 செய்முறை:

               அரிசி மாவில் வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவை எடுக்கும்போது கையில் ஒட்டாத அளவுக்கு இருக்க வேண்டும். பாசிப்பருப்பை லேசாக வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளவும். வறுத்த பருப்பை சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் ரொம்ப வேக வைக்கவும் கூடாது. பருப்பை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.

            இப்போது ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கல் உப்பு சேர்த்து, வெல்லத்தை பாவு காய்ச்சி பாவு பதம் வந்ததும் பருப்பு. தேங்காய் துறுவலையும் அதில் கொட்டி கிளறி இறக்கி. இப்போது பிசைந்த மாவை சிறிது கையில் தட்டி அதில் இந்த பூரணத்தை வைத்து மடக்கி இட்லி பானையில் வைத்து அவித்து எடுக்கவும்.

         இப்போது சுவையான பூரண கொழுக்கட்டை ரெடி. 

No comments:

Post a Comment