Saturday 7 March 2015

மகளீர் தினம்

           இன்று சர்வதேச மகளீர் தினமாம் டிவி, பத்திரிக்கை, மற்றும் அனேக இடங்களில் பேசுகிறார்கள். ஆண்கள் பெண்களை புரிந்துக் கொண்டு பெருமைப்படுத்துகின்ற தினம் அப்படிதானே? இன்று எத்தனை ஆண்கள் பெண்களைப் புரிந்துக்கொண்டார்கள்? எத்தனை ஆண்கள் பெண்களுக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்கள்? கேள்வி குறியாகதான் இருக்கிறது.


           ஒரு பெண் அன்னையாக, அக்காவாக, தங்கையாக, மனைவியாக, தோழியாக ஆண்களின் வாழ்க்கையில் வலம் வருகிறாள. அவர்களுக்கு ஆண்கள் கொடுக்கும் பரிசுதான் என்ன? பெருமைப்படுத்தக்கூடிய விஷயம்தான் என்ன? இன்று பெண்கள் எத்தனையோ இடங்களில் கணவனை பிரிந்து இருக்கலாம், கணவனால் வஞ்சிக்கப்பட்டு இருக்கலாம், கணவனால் துரோகம் செய்யப்பட்டு இருக்கலாம், கணவனால் துன்பப்படுத்தப்பட்டு இருக்கலாம். கணவனால் அடித்து விரட்டப்பட்டு இருக்கலாம். மனைவியை விட்டு வேற ஒரு பெண்ணை தேடிப் போயிருக்கலாம், பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருக்கலாம். ஆனால், அதை வெளிக்காட்டாமல் மகளீர் தினம் பேருக்கு கொண்டாடப்படுகிறது.

            பெண்கள் எப்போதும் ஆண்களின் சுயநலத்திற்காக வஞ்சிக்கப்படுகிறாள். பெண்கள் அழகு என்று எப்படி சொல்கிறார்களோ அப்படிதான் இந்த மகளீர் தின கொண்டாட்டமும்.

          பெண்கள் விழித்துக் கொண்டாலோ, அல்லது சுயநலமாக சிந்திக்கத் தொடங்கினாலோ இந்த எப்படி இருக்கும்? சிந்திப்போம்.

No comments:

Post a Comment