Friday 12 September 2014

என் ஞாபகம் நீ





என் கண்களாக
நீயிருந்தாய் அதனால்தான்
கண்ணீராக கரைந்து போனாய..?

என் கனவாக
நீயிருந்தாய் அதனால்தான்
கலைந்து போனாய..?

என் நிலவாக
நீயிருந்தாய் அதனால்தான்
தேய்ந்து போனாய..?

என் மலராக 
நீயிருந்தாய் அதனால்தான்
உதிர்ந்து போனாய..?

உனக்கு  தெரியுமா?
நீ என்னை மறந்து போனதால்
நான் தொலைந்து போனேன்..!





No comments:

Post a Comment