Sunday 7 September 2014

வறுமையின் நிறம் சிகப்பு

                  வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்கு பெண்கள் அனுப்பப்படுகிறார்கள் நல்ல சம்பளம் கிடைக்கும் நம் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரலாம் என்ற கனவோடு ஆகயா விமானத்தில் பறந்து செல்கிறார்கள். அநேக வீடுகளில் வீட்டு வேலை என்ற பெயரில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் சகித்து கொண்டவர்கள் சம்பாதிக்கிறார்கள் முடியாதவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

                   சில சபலபுத்தி கொண்ட பெண்கள் எப்படியும் சம்பாத்திக்கலாம் என்று வெளிநாட்டில் தவறான செயல்களில் சம்பாதித்து தன் குடும்பத்தை மேன்மை நிலைக்கு கொண்டு வருகிறார்கள் ஊரில் வந்து எப்படி சம்பாதித்தோம் என்று சொல்வதில்லை அதைக் கண்ட மற்ற பெண்கள் தானும் சென்று சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சிலந்தி வலையில் தானாக சிக்கி கொள்கின்றனர்.
    
                  வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண்களே அங்கே உங்களுக்கு என்ன நடக்கிறது என்று சொல்லிவிடுங்கள் அதைக் கேட்ட மற்ற நல்ல குடும்பத்து பெண்கள் செல்ல மாட்டார்கள் இது நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி. எப்படி வேண்டுமென்றாலும் சம்பாதிக்கலாம் என்ற பெண்களுக்கு இது பெரிய விஷயமில்லை ஆனால் இது தெரியாத நல்ல குடும்பத்து பெண்கள் தெரியாமல் சிக்கிக்கொள்வது பரிதாபத்துக்குரியது. வறுமையை போக்க ஆயிரம் வழி இருக்கிறது உடம்பை விற்றுதான் வறுமையை போக்க வேண்டும் என்பது இல்லை பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருக்கிறார்கள் என்பது உண்மை.

No comments:

Post a Comment