Friday 5 September 2014

விருந்து

                      எத்தனை அன்பான உறவாக இருந்தாலும் விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்குதான் . நாம் ஒரு வீட்டிற்கு விருந்தினராக சென்றால் ஒரு இரண்டு நாளைக்கு உபசரிப்பு பலமாக இருக்கும் அதோடு அந்த இரண்டு நாளில் நாம் சாப்பிட்ட தட்டை எடுக்க விடாமல் அவர்களே எடுத்து கழுவார்கள் அதே ஒரு பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் அவர்கள் சாப்பிடும் தட்டை நம்மை கழுவ வைத்து விடுவார்கள்.

                      அதுவரை நமக்கு இருந்து மரியாதை போய்விடும் வீட்டில் ஒருவராக மற்றவருக்கு அறிமுகப்படுத்தப்படுவோம் இப்படியே சொல்லி சொல்லி சம்பளம் இல்லாத வேலைக்காரியாக பயன்படுத்தபடுவோம். இது உறவில் மட்டுமல்ல நட்பிலும் உண்டு எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது. அதையும் தாண்டி எந்த காலத்திலும் அன்பு குறையாத மதிப்புள்ளம் கொண்டவர்களும் உண்டும்.

No comments:

Post a Comment