Wednesday 24 September 2014

முரண்

வந்தால் என்னோடு
பேச வேண்டும் என்பதற்காக
நீ வருவது இல்லை..!

வந்தாலும் என்னோடு
பேச மாட்டாய் என்பதற்காக
நான் வருவது இல்லை..!

அப்படியே வந்தாலும்
நீ முதலில் பேசுவாய அல்லது
நான் முதலில் பேசுவதா என்ற
தயக்கத்திலே கழிகிறது நாட்கள்..!

நீ வராத நாட்களில்
உனக்கு என்னாச்சோ என்று நானும்
எனக்கு என்னாச்சோ என்று நீயும்
நினைக்கத் தவறியதே இல்லை!

உனக்கும் எனக்கும்
எதனால் விழுந்தது இந்த திரை?
எதற்கு இந்த கண்ணாம்பூச்சி?

முரண்பட்ட இதயங்களால்
முடங்கி கிடக்கிறது
பனித்துளி பாசங்கள்..!

No comments:

Post a Comment