Monday 1 September 2014

கோயம்பேடு பேருந்து நிலையம்



                  ஆசியாவிலே மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம் தான் பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்க கூடிய இடமாக இருக்கிறது. எந்த நேரமும் பேருந்து வசதிகள், பயணிகள் தங்கும் விடுதிகள், உணவகங்கள், இலவச கழிப்பறைகள் என்று எல்லாமே இருக்கிறது ஆனால் ஒரு குளியளறை கூட இல்லை என்பதுதான் வருத்தப்படக்கூடிய விஷயமாக இருக்கிறது.

                  சின்ன சின்ன பேருந்து நிலையங்களில் கூட 5 ரூபாய் கட்டணத்தில் குளியளறை இருக்கிறது ஆனால் சென்னை மாநகரத்தில் லட்சம் பயணிகள் வந்தும் போகும் இடத்தில் இல்லாதது வேதணைக்குரியதாக இருக்கிறது.
பெரும்பாலும் வெகுதொலைவில் இருந்து வேலைக்காக இன்டர்வியூக்கு வருபவர்களும், தேர்வுக்காக வருபவர்களும் தான் அதிகம் இருக்கிறார்கள் இவர்கள் தனியறை எடுத்து குளித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு வசதியோ அதற்கான நேரமோ இவர்களுக்கு இல்லை. இது போன்ற பயணிகளுக்கு சுத்தமான குளியளறை இருந்தால்
வசதியாக இருக்கும்.


                      தமிழக அரசு இதை கவனிக்காமல் விட்டது ஏன்? நிறைய பயணிகள் குளியளறை இல்லாமல் அவதிக்குள்ளாகிறார்கள் தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டால் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் கவனத்தில் கொள்ளுமா?

                        மேலும், பேருந்து நிலையத்தில் சிற்றுண்டி உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன பயணிகள் அவசரத்திற்காக வேறு வழியின்றி வாங்கி செல்கிறார்கள். பேருந்து நிலையத்தில் எப்போதும் விலை அதிகமாக தான் இருக்கும் என்று பொதுவான மனநிலை இருந்து வருகிறது அது மட்டுமல்ல சென்னை என்றாலே விலைவாசி அதிகம் என்று எல்லோரும் பயப்படவும் செய்கிறார்கள். இதை அங்குள்ள மாநகராட்சிகள் கவனிக்காமல் இருப்பது ஏன்? இடையில் கடைவியாபாரிகள் தான் அதிகம் லாபம் பார்க்கிறார்கள் அவதிக்குள்ளாவது என்னவோ பயணிகள்தான். இதை அரசும் மாநகராட்சிகள் கவனத்தில் கொள்ளுமா? 

1 comment:

  1. கோயமபேடு நிலையம் பற்றிய தகவல்கள் எமக் நல்ல விருந்து.
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.

    ReplyDelete