Thursday 30 October 2014

தீயாக மாறிவரும் சா(தீ)தி

         நம் தேச தலைவர்கள் நாட்டிற்காக உழைத்தார்கள் நாட்டிற்காக வாழ்ந்தார்கள் அவர்களின் கருத்துக்கள் வேறாக இருந்தாலும் எண்ணங்கள் ஒன்றாக இருந்தது அது மக்களின் நலனுக்காக இருந்தது அதனால் கட்சிகள் ஒன்றாக இருந்து. ஆனால் இன்று அவ்வாறு இருக்கின்றதா பல்வேறு கட்சிகள் கவியரசு வைரமுத்து அவர்கள் சொன்னதுபோல் மரங்களின் கிளைகளில் இலைகளை விட கட்சி கொடிகளே அதிகம் இருக்கிறது என்று சொன்னார் சாதிக்கொரு கட்சி வீதிக்கொரு சங்கம்.

         ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு கொள்கையோடு போராடி மக்களிடத்தில் நல்ல பெயரோடு வாழ்ந்து இன்று சிலையாக நிற்கிறார்கள் ஆனால் இன்றைய தலைமுறையோ அதை தவறாக பயன்படுத்தி சாதி என்ற பெயரில் தனி கொடி, தனி சின்னம் தனி மாநாடு என்று சாதியை வளர்த்து வருகிறது. அன்று முதல் இன்று வரை சாதிகள் ஒழியவில்லை இனிமேல் ஒழியபோவதில்லை அதுதான் சங்க வைத்து வளர்த்து வருகிறார்களே பிறகு எங்கே ஒழிப்பது.

         சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் முதலில் பள்ளியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நமது அண்டை நாட்டில் ஸ்ரீலங்காவில் சாதியின் பெயரில் பள்ளியில் சேர்ப்பது இல்லை மதங்களின் பெயரில் தான் சேர்க்கிறார்கள் அவர்களால் முடிந்தது நம்மால் ஏன் முடியவில்லை?

          இஸ்லாமிய மதத்தில் உட்பிரிவுகள் இருக்கிறது அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதில்லை. கிறிஸ்துவமத்தில் உட்பிரிவு இருக்கிறது அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதில்லை ஆனால் இந்து மதத்தில் மட்டும்தான் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். தமிழனே தமிழன் அழித்துக் கொள்கிறான். அரசு இதை கண்டு கொள்வதே இல்லை இப்ப சாதிக்கட்சி என்று வந்துவிட்டது இனிமேல் கண்டுகொள்ளவா போகிறது? அரசே சாதியின் பெயரில் கணக்கெடுப்பு செய்கிறது எத்தனை ஓட்டு எந்த சாதியில் இருக்கிறது எந்த சாதிக்கட்சியோடு கூட்டு வைத்துக்கொள்ளலாம் என்று கணக்கு பண்ணுகிறது இனிமேல் எப்படி சாதியை ஒழிக்க முடியும்.

          அரசிடம் கேட்டால் என்ன சொல்கிறது சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யதான் இந்த சாதி சான்றிதழ் கேட்கப்படுவதாக சொல்கிறது. சாதியின் அடிப்படையில் எந்த ஒதுக்கீடும் வேண்டாம் இலவசங்களும் வேண்டாம் வருமானத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கலாம். முதலில் திறமையானவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் அதன் பிறகு வருமானதிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற ரீதியில் இட ஒதுக்கீடு செய்யுங்கள். இதில் அனைத்து பிரிவினருக்கும் வேலைவாய்ப்பு அமையும். எல்லா மதத்திலும் எல்லா சாதியிலும் ஏழை என்ற ஒரு சாதி இருக்கிறது.

         இது அரசுக்கு தெரியாமலா இருக்கிறது இதன் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்புகளை வழங்கலாமே ஏன் அவ்வாறு செய்ய தயங்குகிறது? தாழ்த்தப்பட்டவர்களை மேன்மை நிலைக்கு கொண்டுவர சாதி சான்றிதழ்கள் அவசியம் இல்லை வருமான சான்றிதழ் போதும் அதிலே தாழ்த்தப்பட்டவர்களும் வந்துவிடுவார்கள் இல்லையா. அரசே நல்லது செய்கிறோம் என்ற பெயரில் இட ஒதுக்கீடு செய்து அவர்களை ஒதுக்கி வைக்கிறது, இழிவுப்படுத்துகிறது. சாதியை வளர்க்க அரசும் ஒருவகையில் ஊக்குவிக்கிறது என்பதுதான் உண்மை.

          கவிஞன் பாரதி "சாதிகள் இல்லையடி பாப்பா எனப் பாடியது குழந்தைகளுக்கு மட்டும்தான் வளர்ந்த குழந்தைகளுக்கு அல்ல போலும்" அந்த முண்டாசு கவிஞனுக்கு மனிதர்களின் மனம் முன்பே தெரிந்தால் மாற்றி பாடியிருப்பான். மற்ற நாடுகளில் இந்த சாதிசான்றிதழ்கள் இல்லை நம் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன்? மற்ற நாடுகளில் முடிந்தது நம் நாட்டில் மட்டும் முடியாமல் போனது ஏன்? சிந்திப்போம்..!

No comments:

Post a Comment