Friday 24 October 2014

ரசிகர்களின் முட்டாள் தனம்

            கலை என்பது கலையாக பார்க் வேண்டும் ஆனால் நாம் எல்லை மீறி செயல்படுகிறோம். பொதுவாக நாம் யாருக்கு பாலபிஷேகம் செய்வோம் கடவுளின் சிலைக்கு அல்லது இறந்த மாபெரும் தலைவருக்கு ஆனால் நாம் இவர்களுக்கு பாலபிஷேகம் செய்வதில்லை மாறாக உயிரோடு இருக்கும் நடிகனுக்கு செய்கின்றீர்கள் உயிரோடு இருக்கும் போதே பால் ஊற்றுகின்றீர்களா?

          ரசிகர்களே யோசியுங்கள் நீங்கள் செய்யும் காரியங்கள் சரியானதா என்று. உங்கள் அன்பை நீங்கள் காட்ட வேண்டுமென்றால் உங்கள் ரசிகர் மன்றம் தலைமையில் பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்து அந்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள் அல்லது ஒரு வேளை உணவு கூட இல்லாதவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள் அல்லது எத்தனையோ இடங்களில் ஏழை மாணவர்கள் படிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் இல்லை என்றால் அந்த நடிகன் படத்தில் போலீசாகவோ, வக்கீலாகவோ, கலெக்டராகவோ வந்து லஞ்சம் வாங்காமல் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள்

          நீங்களும் அதுபோல ஒரு வக்கீலாகவோ,டாக்டராகவோ,கலெக்டராகவோ ஆக நீங்களும் முயற்சி செய்யுங்கள. அதற்கு காரணம் அந்த நடிகன் என்று பெருமையாக சொல்லுங்கள் அதுதான் ஒரு உண்மையான ரசிகனுக்கு அழகு அதை விடுத்து.


         ரவுடித்தனம் செய்வது, தற்கொலை செய்து கொள்வது, பாலபிஷேகம் செய்வது, ரசிகர் மன்றம் என்ற பெயரில் வேலைக்கு செல்லாமல் வெட்டியாக இருத்தல் இதுபோன்று செயல்களை செய்தால் நீங்கள் உயிராக நினைக்கும் அந்த நடிகன் கூட உங்களை திரும்பி பார்க்க மாட்டார்கள்.

            உங்கள் நடிகனுக்காக ஒருவருக்கொருவர் அடித்து கொள்கிறீர்கள் ஆனால் அவர்களோ நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று பேட்டி கொடுக்கிறார்கள் இதில் எது உண்மை? நீங்கள் தேவையில்லாமல் அடித்து க்கொண்டு உங்கள் வாழ்க்கை இழந்து கொண்டு இருக்கிறீர்கள் அவர்களோ சுகபோகத்தோடு சந்தோஷமாக இருக்கிறார்கள் ரசிகர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் யாருக்கு என்ன லாபம் என்று யோசியுங்கள் ரசிப்பு தன்மையோடு நிறுத்திகொள்ளுங்கள் வெறித்தனம் அர்த்தமற்றது.







No comments:

Post a Comment