Wednesday 24 September 2014

மருத்துவம் / உங்களுக்கு சர்க்கரை நோயா இனி கவலையை விடுங்க

                 இன்றைய காலக்கட்டத்தில் தீர்க்க முடியாத வியாதியாக சர்க்கரை நோய் இருக்கிறது. டாக்டர் கூட சொல்வதுண்டு சர்க்கரை நோய்க்கு நம் உயிர் உள்ளவரை மாத்திரை சாப்பிட வேண்டுமென்று ஆனால் இப்போது நான் சொல்லும் மருந்தை சாப்பிட்டால் நீங்கள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டி விடலாம். எப்படி தெரியுமா?




                   1/2 கிலோ மல்லி, 1/4 கிலோ வெந்தயம் இரண்டையும் தனி தனியாக மிக்ஸ்யில் பொடி செய்து கொள்ளுங்கள். மல்லிபொடி 2 ஸ்பூன், வெந்தையபொடிய 1 ஸ்பூன் இரண்டையும் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி 1/2 டம்ளர் வந்தவுடன் சாப்பாட்டு முன் அதாவது 3/4 மணி நேரத்திற்கு முன் தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் மூன்றே மாதத்தில் சர்க்கரை நோய் உங்களைவிட்டு ஓடிவிடும். கசாயம் குடித்த பிறகு தண்ணீரை தவிர எதையும் சாப்பிட கூடாது 3/4 மணி நேரத்திற்கு பிறகு உணவு எடுத்துகொள்ளலாம்.

                  எனது நண்பி ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தது அவர் இந்த கசாயத்தை தினமும் 2 வேளை மட்டும் குடித்து வந்தார் 6 மாதத்தில் சர்க்கரை நோய் இல்லாமல் போய்விட்டது மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகு எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரொம்ப சந்தோஷத்தோடு நான் சொன்ன கசாயத்தை குடித்ததால் தான் சர்க்கரையின் அளவு குறைந்து இருக்கின்றது என்று மகிழ்வோடு சொன்னார்.

                  அவர் சொன்னவுடன் எனக்கும் சந்தோஷம் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" இது எல்லாருக்கும் கிடைத்தால் மகிழ்ச்சிதானே இது முற்றிலும் உண்மை அவர் இப்படி சொன்னவுடனே வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைத்து இதைப் பதிவிடுகிறேன். நீங்களும் இதை குடித்துப் பார்த்து விட்டு மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். இது எந்தவித பக்க விளைவுகளும் அற்றது, பயமில்லாமல் குடிக்கலாம். சர்க்கரை நோயை இல்லாமலே செய்துவிடலாம்.

1 comment:

  1. இந்த
    கசாயத்தை குடித்த அனைவருக்கும் சர்க்கரையின் அளவு முற்றிலும்
    குறைந்திருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் இதை முறையாக இந்த கசாயத்தை
    குடித்து வந்தார். அவருக்கு சரியான பிறகு அவர் மகளிர் குழுவில்
    உள்ளவர்களிடம் சொல்ல இப்ப அவர்களும் இதைக் குடித்து வருகிறார்கள்.

    ReplyDelete