Sunday 7 December 2014

தலைமுடி கறுப்பாக வளர

           மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி சாறு ஒரு லிட்டர், தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், கார்போக அரசி 200 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம் இவைகளை ஒரு பெரிய சட்டியில் போட்டு லேசான தீயில் எரித்துக் கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். எண்ணெய்பதம் வந்ததும் சுத்தமாய் வடிகட்டி ஆறிய பின்பு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொண்டு தலைக்கு தேவையான போது தேய்த்து வந்தால் முடி வளருவதுடன் முடி கருத்து வளரும்.


          யானைத் தந்தத்தைச் சுட்டு பொடியாக்கிச் சுத்தமான தேனில் குழைத்துப் புழு வெட்டினாலாவது மற்ற எவ்விதத்திலாவது முடி உதிர்ந்து போன இடத்தில் அடிக்கடி சுமார் ஒரு மாதம் தடவி வந்தால் முடி முளைக்கும்.

2 comments: