Wednesday 15 April 2015

பெண்ணே... பெண்ணே...

பெண்ணே... 
உன்னை கடவுள் என்றார்கள்
 ஏன் தெரியுமா? உன்னை
கையெடுத்து கும்பிட அல்ல
 உன் கற்பை சூரையாடும் போது நீ
 கற்சிலையாக இருக்க வேண்டும்
 என்பதற்காக..!

 பெண்ணே...
 உன்னை நதி என்றார்கள்
 ஏன் தெரியுமா? நீ
 சுயநலமில்லாமல் உழைக்கிறாய்
 என்பதற்காக அல்ல,
 உன்னை 'மது' பானமாய்
 அருந்துவதற்கு..!



 பெண்ணே... 
உன்னை பூமி என்றார்கள்
 ஏன் தெரியுமா? நீ
 எல்லா பாரத்தையும்
 சுமக்கிறாய் என்பதற்காக அல்ல,
 எதையும் கண்டுகொள்ளாமல்
பொறுமையாய் இருக்கிறாய்
 என்பதற்காக..!

 பெண்ணே...
 தனித்திரு ஆனால் விழித்திரு
 இந்த சமூகம் சாக்கடை நிறைந்தது
 அதில் நீ ஆட்கொல்லியாக இரு..!
உலகம் உன்னைக் கண்டு
 பயப்பட வேண்டும்..!

No comments:

Post a Comment